04/10/2023
இதோ சிந்தைக்கு! பசுவிற்கு தீவனம் வழங்கும்போது அளவா முக்கியம்? தரமா முக்கியம்? நாங்கள் பசுவின் வயிற்றினை நிரப்புவதில் எந்த பிரயோசனம் இல்லை அந்த தீவனத்தில் போசனை இல்லையெனின். அதே சந்தர்ப்பத்தில், எவ்வளவு சிறந்த தீவனத்தை வழங்கியும் பிரயோசனமில்லை, அவசியமான அளவு தீவனம் வழங்காவிட்டால். ஆகவே, அளவைப் போன்றே தரம் ஆகிய இரண்டு காரணிகளும் மிகவும் முக்கியமாகும். பாலுற்பத்தியை அதிகரிக்கும் வகையிலேயே நாம் தீவனம் வழங்க வேண்டும். பாற்பண்ணை துறையை பொறுத்தவரையில், ஒவ்வொரு பசுவினதும் உடல் எடையை பொறுத்தே, அதற்கு வழங்கப்படும் தீவனத்தின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு கறவைப் பசுவின் உடல் எடையின் 10 சதவீதமான அளவு தரமான புற்களையும், 1-2 சதவீதமான அளவில் அடர் தீவனத்தையும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அடர் தீவனத்தின் அளவிற்கேற்ப, அதில் கனிமங்களை (தாதுக்களை) உரிய அளவில் சேர்க்க வேண்டும். இதன் அடிப்படையில், 400 கிலோகிராம் எடைகொண்ட ஒரு பசுவிற்கு 35-45 கிலோகிராம் புற்களை, 4-5 கிலோகிராம் அடர் தீவனத்துடன் 100 கிராம் (6 மேசைக்கரண்டி அளவு) கனிமங்களின் கலவையை (தாதுக்களை) கலந்து கொடுக்கலாம். எனினும் இந்த பெறுமானங்கள், நீங்கள் பயன்படுத்தும் தீவன வகைகளின் ௨லா் எடை பெறுமானம், புற்களின் வகை, பசுவின் பாலுற்பத்தித் திறன், பாலூட்டும் காலப்பகுதியில் பசுவின் நிலை போன்ற காரணிகளை பொறுத்து மாறுபடலாம். அத்தோடு, MOD ஆகிய நாம் அறிமுகப்படுத்தியுள்ள MOD – RAFT செயலியை உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் பதிவிறக்கிக் கொண்டால், இன்று நாம் தெளிவுபடுத்தியவாறு, சரியான அளவு மற்றும் தரத்துடன் கூடிய தீவனத்தை மிக இலகுவாக தயாரித்துக்கொள்ள முடியும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.