Naleem - නස්ෆ් / நஸ்ப்

Naleem - නස්ෆ් / நஸ்ப் නලීම් - නස්ෆ්
Social & Political Activist
(சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்)

NASPF Academy
சமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தொடர்பான வழக்கு விசாரணை..!எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​அது...
27/04/2026

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தொடர்பான வழக்கு விசாரணை..!

எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

​அதுவரை தற்போது இருந்து வருகின்ற ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். M.S.M.முபாறக் அவர்கள் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை சார்பாக பிரபல சட்டத்தரணி றுஷ்தி ஹபீப் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்சம்மாந்துறை அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்!சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம...
26/04/2026

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்
சம்மாந்துறை அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்!

சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள வீதிக் கடவையால் பாதையின் மறுபக்கம் மாறுகையில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் அவர்கள் மீது மோதியுள்ளார்.

குறித்த விபத்தில் அதிர்ஷடவசமாக 3 மாணவிகளும் சிறு காயங்களுக்குள்ளான நிலையிலே உள்ளனர்.

இதே நேரம், வீதியால் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்து வந்த இளைஞர் காதில் தொலைபேசியை வைத்து பேசிய படி ஒரு கையால் வாகனம் ஓட்டிவந்துள்ளார் என சம்பவ இடத்தில் நின்ற சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துமாறு சம்பவத்தில் தொடர்புடைய மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

பொதுவாக பிரதான வீதிகளை மையமாகக் கொண்ட பாடசாலைகள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள் அமைந்துள்ள இடங்களில் எச் சந்தர்ப்பத்திலும் மிக அவதானமாக வாகனம் செலுத்தவேண்டியது நம் அனைவரினதும் மிகத் தலையாய பொறுப்பாகும்.

கியாஸ் ஏ. புஹாரி

படம் - AI

இலங்கை அரசியல் வரலாற்றில் NPP அரசு செய்த சாதனை பதிவாகியது 💕1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்கள...
26/04/2026

இலங்கை அரசியல் வரலாற்றில் NPP அரசு செய்த சாதனை பதிவாகியது 💕

1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று இரவு நடத்திய சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி அடிப்பாகம் கொண்ட பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில், ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரவலர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்திற்கான விமானப் பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தி,இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 ஆம் நாள் பாங்கொக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது,சாதாரண உடையில் இருந்த படங்கள் மற்றும் காணொளிகளும், அலைபேசிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக முதல் வழக்கு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிக்குகள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த,பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனவும்,மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பலமாகும் உண்மைகள்அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்க...
24/04/2026

அம்பலமாகும் உண்மைகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான ஓர் சக்தியாக செயற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்களும் அவரின் கீழ் இயங்கிய ஒரு குழுவால் நடத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக முன்னர் இடம்பெற்ற சம்பங்களுடன் ஒப்பிடும்போது பல தொடர்புகள் உள்ளமை தெரிவதாகவும் அவர் மன்றில் கூறினார்.

அடுத்த விசாரணை மே மாதம் ஒன்பதாம் திகதி.

Srilanka cricket தலைவராக பதவி வகித்து வந்த ஷம்மி சில்வாவை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவி...
22/04/2026

Srilanka cricket தலைவராக பதவி வகித்து வந்த ஷம்மி சில்வாவை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக Daily Mirror செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக SLC யில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஷம்மி சில்வாவிற்கு எதிராக கிரிக்கெட் தரப்புகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் கடும் விமர்சனங்கள் வந்த நிலையில் ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.💕

கத்தார் மற்றும் சவூதி அரேபியாவில் படைகளை நிலைநிறுத்தும் முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க உள்ளது. வளைகுடாவின் இ...
21/04/2026

கத்தார் மற்றும் சவூதி அரேபியாவில் படைகளை நிலைநிறுத்தும் முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க உள்ளது. வளைகுடாவின் இந்த இரு வல்லரசுகளுடனும் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் பகிரப்பட்ட பாதுகாப்பு இலக்குகளுக்காக, ஆழமான இராணுவ உறவுகளை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒப்பந்தங்களின் கீழ், படைகள் தளப் பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்கு ஆதரவளிக்கும். இது இஸ்லாமிய உலகில் ஒரு முக்கியப் பங்காளியாக பாகிஸ்தானின் பங்கை வலுப்படுத்துகிறது.

இது விரைவில் பயிற்சி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

21/04/2026

தமிழ்நாடு தேர்தலில் DMK தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.
ADMK எதிர்க்கட்சி

இறுதி நேர கணிப்பு முடிவுகள்!!

பாகிஸ்தானுடன் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தை நோக்கி கத்தார் நகர்வு..!பிராந்தியப் பாதுகாப்பு இயக்கவியலை வலுப்படுத்தும் நோ...
21/04/2026

பாகிஸ்தானுடன் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தை நோக்கி கத்தார் நகர்வு..!

பிராந்தியப் பாதுகாப்பு இயக்கவியலை வலுப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானுடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் கத்தார் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் சவூதி அரேபியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பாதுகாப்புப் புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது, இஸ்லாமாபாத்துடன் ஆழமான இராணுவக் கூட்டாண்மைகளை நோக்கிய பரந்த வளைகுடாப் போக்கைப் பிரதிபலிக்கிறது.

எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அடித்தளமிடவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய நிர்வாகத்தின் தவறை சரி செய்த புதிய நிர்வாகம் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளின் வாடக...
20/04/2026

பழைய நிர்வாகத்தின் தவறை சரி செய்த புதிய நிர்வாகம்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள், தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகை ஒப்பந்தங்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக முந்தைய நிருவாகத்தினரால் புதுப்பிக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன், அறவிடப்பட்டு வந்த வாடகைத் தொகையும் தற்போதைய சந்தை நிலவரத்தை விடவும் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருந்து வந்தது.

இப்பின்னணியில், பள்ளிவாசலின் வருமானத்தை மேம்படுத்தவும், கடைகள் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த நிர்வாகக் குறைபாடுகளைச் சீர்செய்யவும் புதிய நம்பிக்கையாளர் சபையினர் பொறுப்பேற்றவுடன் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை முறையாகப் பின்பற்றி, புதிய வாடகைத் தொகைகள் தீர்மானிக்கப்பட்டன.

இப்புதிய ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்டத்தரணி எம். எஸ். ரஸ்ஸாக் அவர்களினால் முறையாகத் தயாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதான வீதி கடைத்தொகுதி, பள்ளிவாசல் வீதி கடைத்தொகுதி, மத்ரஸா கடைத்தொகுதி மற்றும் போடியார்குளம் கிரீன்பீல்ட் கடைத்தொகுதிகள் போன்றவற்றிக்கான புதிய வாடகை ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன

பொய்யான செய்தி பரப்பி வந்த எதிர்க்கட்சி ஊடகம் அமைச்சரிடம் மன்னிப்பு💕அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து விபரங்கள் தொடர்...
20/04/2026

பொய்யான செய்தி பரப்பி வந்த எதிர்க்கட்சி ஊடகம் அமைச்சரிடம் மன்னிப்பு💕

அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து விபரங்கள் தொடர்பாக முன்னைய செய்தியில் வெளியான புள்ளிவிபரங்கள் கணக்கீட்டுத் தவறு என ஹிரு தொலைக்காட்சி சேவை ஒப்புக்கொண்டுள்ளது.

கே.டி. லால் காந்தவுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்த ஊடகம், பிழைகளைத் திருத்திக்கொள்ளும் ஊடக உரிமையின் கீழ் இந்தத் திருத்தம் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 16 அன்று ஒளிபரப்பப்பட்ட செய்தியில் தனது 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, ஏசியா புரோட்காஸ்டிங் கோப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கே.டி. லால் காந்த சட்ட அறிவித்தல் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது

Address

Ampara

Telephone

+94756575319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naleem - නස්ෆ් / நஸ்ப் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naleem - නස්ෆ් / நஸ்ப்:

Share