Group Of Akchaji

Group Of Akchaji Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Group Of Akchaji, Batticaloa.

நேற்று இடம்பெற்ற ஹிரிகரன் concert போல ஒரு சில மாதங்களுக்கு முன்பு அநுராதபுரத்தில் Carnival நடைபெற்றதுஅங்கேயும் சென்றுருந...
10/02/2024

நேற்று இடம்பெற்ற ஹிரிகரன் concert போல ஒரு சில மாதங்களுக்கு முன்பு அநுராதபுரத்தில் Carnival நடைபெற்றது

அங்கேயும் சென்றுருந்தேன்
அங்கும் குடும்பமாகவும்,university students group,இளைஞர்கள் குழுவாகவும்,பெண்கள் குழு , couples ஆகவும் வந்திருந்து அவர்களுக்கு விரும்பிய இடத்தில் இருந்து அவர்கள் நடனமாடியபடி இருந்தனர்.
நானும் எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கும் அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கும் நான் அவதானித்த வித்தியாசங்கள்.

இளைஞர் குழுக்களுக்குள் மோதல் ஏற்றபடவில்லை.
திரையரங்கம் நோக்கி தண்ணீர் போத்தல், கெல்மட்,செருப்பு வீசப்படவில்லை.
இலங்கையில் உற்பத்தியாகும் அதே சாராயம் அதே பியர் தான் அவர்களும் அருந்தியிருந்தார்கள்.
பார்வையாளர்களாக வந்து நடனமாடிய பெண்கள் மீது அங்க தொந்தரவுகள்,தூசன வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை.
வேணுமென்று கூட்டமாக சென்று பெண்கள் மீது இடிக்கவில்லை.

பெண்கள்& குழந்தைகள் கீழே விழுத்தி முந்தியடித்து ஓடவில்லை.
தவறுதலாக முட்டுப்பட்டாலும் Sorry என்ற சிரித்த முகத்துடன் அந்த கணத்தில் பிரச்சனை முடிவுறும்.
Couples ஆக வந்தவர்கள் நடனமாடினார்கள் யாரும் வசைபாடவில்லை.

கமரா பொருத்திய கோபுரங்களில் ஏறி camera man ஐ தொந்தரவு செய்யவில்லை
Police வெறுமனே நிகழ்ச்சிகளை பார்த்து ஒழுங்குகளையும் லேசாக கவனித்தபடி இருந்தனர்.
ஆக மொத்தத்தில் எங்கள் மனநிலையில் தான் மாற்றம் வேண்டும் அது மாறுமா என்பது கேள்விக்குறி தான😕
புலம்பெயர் (ஈழத்தமிழர்கள்) தேசத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன அங்கேயும் VIP tickets 300£ /200/150/100 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன அதாவது இலங்கை ரூபாயில் 20,000முதல் 80,000 வரை.அங்கேயும் மதுபானம் அருந்தப்படுகின்றன ஆனால் தமிழர் காலாச்சாரம் கட்டிக்காப்பாற்றப்படுகின்றது போலும்🤔.
யாழ்ப்பாணத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தேவை இதனால் கலாச்சாரம் அழிந்து போகும் என்பது முட்டாள் தனமான கருத்து.ஒரு மனிதனுக்கு கல்வி,உழைப்பு எவ்வளவு முக்கியமோ மனமகிழ்ச்சியும் முக்கியம்.

ரம்பாவின் கணவர் ஒரு Business Man என்று அனைவரும் அறிந்ததே அவரது செயற்பாடுகள் Business ஐ இலக்காக கொண்டே இருக்கும்.(It’s a corporate world)யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் அதிகம் அவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்தித்து செயற்பட்ட்டும்.

ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,  " ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!"அவனை பார...
17/12/2023

ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,

" ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!

"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!!

"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!

சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!!

அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ,

"ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....?

உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!!

ஆனால் ,
"என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.

கவலைப்படாதே ....!!

இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று,

" கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!

என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!

அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!

மறுபடியும் அவன் வரவேயில்லை....!!


மரம் அவனுக்காக ஏங்கியது....!!

பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!!

அவன் முகத்தில் கவலை தெரிந்தது,

இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!!

அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம்.

"வா என்னிடம் வந்து விளையாடு"...!!

"இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!

அதற்கு அவன்_
இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!

எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,

ஆனால் ,
"நாங்கள் வசிக்க சொந்தமாக
நல்ல வீடு இல்லை"....!!

"வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!

மரம் உடனே சொன்னது ,

பரவாயில்லை ....
"உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!

அதற்கு பதில்,
" என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!

"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!!

"இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!

முடிந்த வரை,
" வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!!

அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!!

அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!

பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!

மரம் அவனை பார்த்து,
" ஆனந்த கூத்தாடியது"......!!!

அவன் எப்போதும் போல் ,
'சோகமாக இருந்தான்'.....!!

"ஏன் இப்படி இருக்கிறாய்",
என்று மரம் கேட்டது.....!!

"என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"....,

"படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!

"அதனால் வருமானம் இல்லை"

"நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!

மரம் துடித்து போனது,.....!!

" நான் இருக்கிறேன்".....!!

"என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!

"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!

அவன் அடி மரத்தை வெட்டும் போது....,

மறக்காதே....!!

வருடத்திற்கு ஒரு முறை
என்றில்லாமல் ......,

"எப்போதாவது
என்னை பார்க்க வா".. என்றது....!!

ஆனால் அவன் வரவேயில்லை.....!!

மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!

அப்போது அவன் வந்தான்.....!!!

'தலையெல்லாம் நரைத்து' ,
'கூன் விழுந்து' ,
'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,
அவன் இருந்தான்.....!!

"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!

"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!

"கிளைகள் இல்லை"........!!!

"அடி மரமும் இல்லை".........!!

உனக்கு கொடுக்க,
"என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!

அவன் சொன்னான் ,

நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' ,

அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!!

வீடு கட்டவும் ,
படகு செய்யவும்
என்னிடம் சக்தி இல்லை....!!

"எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!

அப்படியா....!!!

இதோ....,
" தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!!

"அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!

இந்த சுகத்துக்கு தான்......

"அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!

"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!!

"அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!

"இது மரத்தின் கதையல்ல"....!!

" நம் பெற்றோர்களின் கதை"....!!

இந்த சிறுவனை போல் ,

"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!!

வளர்ந்து பெரியவனானதும்...,

தமக்கென்று குடும்பம்,
குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம்.

அதன் பின் ,

"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!

"நம்மிடம் இருப்பவை எல்லாம்",

" அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"🌳

"நம்மால் அவர்களுக்கு எதுவும்
கொடுக்க முடியாது"🌳

"நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர"🌳

"அவர்கள் விரும்புவதும் அதைதான்"🌳

ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து"ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?"ஆசிரியர் - "50,000"ர...
15/12/2023

ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து"

ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?"

ஆசிரியர் - "50,000"

ரணில் - "ஒரு வருஷத்துல எத்தனை நாட்கள்?"

ஆசிரியர் - "365"

ரணில் - "அதுல உனக்கு சனி, ஞாயிறு லீவு. வருஷத்துல 104 நாளைக் கழி"

ஆசிரியர் - "261"

ரணில் - "அதுல தவணைப் பரீட்சை முடிஞ்சதும் வாற லீவு மொத்தம் 10 வாரம், அதுல ஏற்கனவே சனி ஞாயிறு கணக்குல எடுத்ததால அதைக் கழிச்சா 56 நாட்கள் அதை 261ல கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "205"

ரணில் - "அதுல ஒரு 10 பவுர்ணமி நாட்களும் வரும் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "195"

ரணில் - "எல்லோருக்கும் எட்டு மணித்தியாலம் வேலை, உனக்கு மட்டும் ஆறு மணித்தியாலம். அதுல அசெம்ப்ளி, இன்டெர்வல், ஒரு free பாடம். அதுக்கெல்லாம் ஒரு மணித்தியாலத்தைக் கழிச்சா 5 மணித்தியாலம். இப்ப 195 ஐ 5 ஆல பெருக்கி 8 ஆல பிரிச்சு எத்தனை வருதுன்னு சொல்லு"

ஆசிரியர் - "கிட்டத்தட்ட 122 நாட்கள்"

ரணில் - "அதுல ஒரு 8 ஏனைய விடுமுறை நாட்களும் வரும், அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "114"

ரணில் - "அதுல ஒரு 24 விடுமுறை நாட்கள் ஆசிரியர் லீவு எடுக்கலாம் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"

ஆசிரியர் - "90"

ரணில் - "90 ஐ 30 ஆல பிரிச்சு எத்தனை மாசம் வருதுன்னு சொல்லு"

ஆசிரியர் - "கிட்டத்தட்ட 3 மாசம்"

ரணில் - "வருஷத்துக்கு இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குது?"

ஆசிரியர் - "6 லட்சம்"

ரணில் - "அதை மூன்று மாசத்தால பிரிச்சா ஒரு மாசத்துக்கு இரண்டு லட்சம். ஆமா நீ எவ்வளவு சம்பளம் கேட்டா?"

ஆசிரியர் - "அறுபதாயிரம்"

ரணில் - "அப்போ இரண்டு லட்சத்துல அறுபதாயிரம் போனா மீதி நீ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம்.

அதை எப்போ திருப்பித் தரப்போறா?"

படித்ததில் பிடித்தது😂😁🤣

08/12/2023

BOC Card less withdrawal

கடவுள் ஆதாமை தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார்.பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் ...
26/08/2023

கடவுள் ஆதாமை தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார்.

பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார்.

ஆதாம் அவளுக்கு ஏவாள் எனப் பெயரிட்டான்.

அதன் வகையில் தேவனால் நேரடியாக படைக்கப்பட்ட ஆதாமே தேவனின் ஒரே மைந்தன்.

புதிய விவிலியத்தின்படி இயேசு கிறிஸ்து தேவனால் நேரடியாக படைக்கப்பட்டவர் அல்ல.

அப்படி இருக்கையில் பரமபிதாவின் மைந்தன், தேவனின் மைந்தன் என்கிற பட்டம் ஆதாமிற்குப் போகாமல் இயேசுவிற்கு வந்தது எப்படி? எனக்கு கேட்டால்,

எனக்கு சாத்தான் பிடித்திருக்கிறது எனச் சொல்லுகிறார்களே தவிர சரியான பதிலை யாரும் சொல்லவில்லை.

அதனால் இந்த பதிவை படிக்கின்ற நண்பர்கள் யாருக்காவது சரியான பதில் தெரிந்தால் எனக்குச் சொல்லி என் சந்தேகத்தை போக்க வேண்டுகிறேன்.

😆😆😆


#நகலெடுக்கப்பட்டது.

தாந்தாமலை ரகசியம்           ******கிழக்கிலங்கையின் கண்ணே தட்சண கைலாசம் என்றும் சின்னக் கதிர்காமம்  என்றும் விளங்குவது தா...
27/07/2023

தாந்தாமலை ரகசியம்
******
கிழக்கிலங்கையின் கண்ணே தட்சண கைலாசம் என்றும் சின்னக் கதிர்காமம் என்றும் விளங்குவது தாந்தாமலை முருகன் ஆலயம் ஆகும்.
பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் ஆலயங்களில் தாந்தாவும் ஒன்றாகும்.
பிற்காலத்தில் தோற்றம் பெற்ற போதும்
எக்காலமும் எடுத்தியம்பக் கூடிய சரித்திர தன்மை வாய்ந்த தலம்.
"குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் " என்று அன்றிருந்தோர் சொன்ன அறிவுரை.
அதன் அருமை பெருமை ரகசியங்களை அனைவருக்கும் சொல்ல விளைகின்றேன்.
வடக்கே பாணமையும் தெற்கே வெருகலும் மேற்கே மன்னன்பிட்டியும் கிழக்கே வங்கக் கடலும் எல்லைகளாகக் கொண்டது பழைய மட்டக்களப்பு.
அதிலடங்கிய மலைப்பிரதேசம் தான் தாந்தா.
கலியுகசகாப்தம் 3180 ம் ஆண்டு காலப் பகுதியில் உன்னரசகிரியை அதாவது
இன்றைய பாணமையை ஆடகசவுந்தரி ஆட்சி செய்கின்றாள்.
தாண்டவகிரி என்னும் பெயருடன் இன்றைய தாந்தா ஆடகசவுந்தரியின் இராஜதானியாக விளங்குகின்றது.இது மட்டக்களப்பு மான்மியம் கூறும் மகிமை.
முற்றாக நம்ப முடியாவிட்டாலும் ஒரு அரச ராச்சியம் இருந்ததுக்குரிய அடையாளங்க ளும் இங்கு உண்டு.
இதன் பின்பு.......
முந்நாள் மட்டக்களப்பு மாவட்டமாகவும் இந்நாள் அம்பாறை மாவட்டத்திலும். உள்ள காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனைக்குட்டிச்சாமி அவர்கள் வாழ்ந்த காலம் 1941 ம்ஆண்டு
கன்னன்குடாவில் மண்முனைப்போடி கந்தப்போடி அவர்களின் வீட்டில் ஆனைக்குட்டி வாழ்ந்த காலம்
அவ்வருடம் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவுகிறது.
மழையை நம்பித்தானே வையகம் உய்கிறது.
கவலையுற்ற விவசாயிகள் ஆனைக்குட்டி யிடம் முறையிடுகின்றனர்.
ஆனைக்குட்டி சாமி ஒரு சித்தர் என்பதால்
மக்களின் குறையை தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றார்.
கன்னன்குடாவில் வாழ்ந்த மண்முனைப் போடி கந்தப்போடி- உசுமுண்டாப்போடி கணபதிப்பிள்ளை (ஆயுர் வேத வைத்தியர்) போன்ற இன்னம் சில ஊர் மக்களுடன் தாண்டவகிரியை நோக்கி நகர்கின்றார்.
வாகன வசதிகள் இல்லாத காலம் அல்லவா? கால் நடையாகவே பயணிக்கின் றனர்.
தாண்டவகிரியை தாண்டுகின்றனர் அங்கே மலை உச்சியில் பிள்ளையார் ஒன்றை வைத்து பொங்கிப் பூசை செய்கின்றனர்.
பூசை முடியும்முன்பே மழை கொட்டுகிறது. அப்போது ஆனைக்குட்டி ஐயர் சொல்கிறார்
"இதுதான் "தாந்தா" தா !என்கின்றவற்றை
இந்தா! என்று தருகின்ற

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்...
27/07/2023

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று
கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.

அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.

''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது.

கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.

''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால்,
நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது பாம்பிடம் பேசினார்.

''பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.

பாம்பு பேசியது.

சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.
பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில்
வசதியாக வசித்து வந்தது.

ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.

பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில்
சாதுவிடம் பேசியது பாம்பு.

சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால்
வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.

அதற்கு சாது 'பாம்பே! வ

දෙහිතක උපන් ආලය දෙනෙතින් නොදැකසැබවුණි සිහින අත ගෙන අඹු සැමියන් විලසප්‍රේමය අපේ ලියලා දින දින නිතිනසෙනෙහස දෝරෙ ගැලුවා අප ...
01/04/2023

දෙහිතක උපන් ආලය දෙනෙතින් නොදැක
සැබවුණි සිහින අත ගෙන අඹු සැමියන් විලස
ප්‍රේමය අපේ ලියලා දින දින නිතින
සෙනෙහස දෝරෙ ගැලුවා අප කැදැල්ලෙන

දින සති මාස ගෙවුණා සෙනෙහෙන් අදරෙන්
අප පිං කලා වෙන්නට මා පියන් ලෙසින්
පුංචි සුරඟනන් දෙපලක් එන පනිවිඩයෙන්
උතුරා ගියා හදවත සතුටින් සෙනෙහෙන්

දෙඅත්ලට ලැබුණු දා දූ පැටවුන් දෙදෙනෙක්
දෙනෙත් අඳ වුනත් දැනුනා ලේ සුවඳ නුඹෙන්
අවසන් හුස්ම රැදෙනා තුරු මේ දිවියෙන්
පණ මෙන් රකිමි සත්තයි අපෙ පැටව් නිතින්❤️
________________________________

(ජීවිතය හරි පුදුමයි, දෙයක් අහිමි වෙද්දි , තව දෙයක් ලැබෙනවා..හරියට මේ අම්මටයි තාත්තටයි දෙඇස් නොපෙනුනාට ජීවත් වෙන්න බලාපොරොත්තුවක් ලැබුණා වගේ❤️එයාලට එකක් නෙවෙයි ලස්සන පුංචි රෝස මල් දෙකක්ම ලැබිලා.සතුටින් ජීවිත් වෙන්න එයාලට තව මොනවද අඩු නේද? තෙරුවන් සරණයි!!! )

#නදී
30/03/2023
📷 මුහුණු පොතෙනි

Address

Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Group Of Akchaji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share