26/01/2026
32 வருட அரச சேவையின் அர்ப்பணிப்பு பயணம் செய்த நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல்.....
===================================
(சர்ஜுன் லாபீர்)
அரச சேவை என்பது ஒரு பணியல்ல; அது ஒரு தவம். அந்த தவத்தை 32 ஆண்டுகளாக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வரும் சிறப்புமிகு அரச அலுவலர் ஏ.சி.எம். பளீல் கடந்த 1994.01.26ம் திகதி பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொது எழுதுனர் சேவை தரம் III இல் தனது அரச சேவைக் கால் தடம் பதித்தார்.
தன்னம்பிக்கையும் உழைப்பும் இணைந்த பயணமாக, பரீட்சை வழியாக நான்கு ஆண்டுகளில் (1998.01.26) தரம் II பதவி உயர்வையும், தொடர்ந்து பத்து ஆண்டுகளில் பரீட்சையின் வாயிலாக தரம் I பதவியையும் பெற்றுத் தன் திறமையை நிரூபித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2020.11.28ம் ஆண்டு அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி உச்சமான Supra பரீட்சையில் சித்தியடைந்து, சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தராக கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவது பெருமைக்குரிய விடயமாகும்.
இவர் பொத்துவில், காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் காணி விடய உத்தியோகத்தராகவும், நிர்வாக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராகவும், பதவி நிலை உதவியாளராகவும், பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி, அரச சேவையின் அச்சாணியாகத் திகழ்கின்றார்.
அலுவலகச் செயல்பாடுகளை வினைத்திறன்மிக்கதாக மாற்றும் அனுபவமிக்க செயற்பாடுகளும், துல்லியமான ஆலோசனைகளும் இவரது அடையாளமாகும்.
இவர் தாபனம் அலுவலக முறைமை நிர்வாகத்தில் வளவாளராக பல்வேறு நேர்முகப் பரீட்சை சபைகளில் பங்கேற்பதோடு,பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு நேர்த்தியான சேவையை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இவர் தமது பணியுடன் மேலதிக மாவட்ட பதிவாளராகவும் பொறுப்பேற்று கடமை புரிந்து வருவதோடு காணி கடமைகளில் சிறந்த தேர்ச்சியையும் பெற்றவர்.
மேலும், இலங்கை சட்டக் கல்லூரியில் நொத்தாரிசு இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தமை, அவரது பன்முகத் திறனுக்குச் சான்றாகும்.
அரச சேவையில் காட்டிய அர்ப்பணிப்பு, அனுபவம், பொதுமக்களுக்கான அளப்பரிய பங்களிப்புகள் மட்டுமன்றி, தமது பிறப்பிடமான சாய்ந்தமருது 8 இல் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கி வரும் ஊக்கமும் சேவையும் சமூக அக்கறையின் உயரிய எடுத்துக்காட்டாகும்.
இன்னும் ஆறு ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றவுள்ள இந்தச் சிறப்புமிகு சேவகன் தமது 55 வயது ஓய்வுநிலை முடிவை மாற்றி சேவையில்,
மேலும் உயர்ந்த பதவிகளும்,
நல்ல ஆரோக்கியமும்,
நிறைந்த நலன்களும் அமைய,
வாழ்த்துகிறோம்!
MR Media Vision