25/02/2025
வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்
வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்;
தற்போது எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக உள்ள ஒரே வழி ஏற்றுமதியை அதிகரித்தல் மட்டுமல்ல. வெளிநாட்டு அந்நியச் செலாவணியை உழைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஏனைய மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவசியமான ஒதுக்கீட்டை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு விலை ஸ்த்திரத் தன்மையை அடைதல் மற்றும் அதனை பேணுதல் ஆகிய பொறுப்புக்கள் சட்டபூர்வ நிறுவனமான மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய வாங்கினால் மேற்கொள்ளப்படும் நிதியியல் கொள்கை நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டின் வட்டி வீதங்கள் தொடர்பான அதிகமான தீர்மானங்கள் எடுக்கப்படும். இலங்கை மத்திய வங்கி ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளை மீட்டெடுக்கும் நிலையை அடையும் நோக்கில் 2023 ஜூன் மாதத்தில் இருந்து தளர்வான நிதிக் கொள்கைகளைப் பின்பற்றியது. அதன்படி வரலாற்றில் இடம்பெற்ற சாதாரண பொருளாதார நிலைமையை நெருங்கி வருகின்றது.
சந்தையின் வட்டி வீதம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறைவை வெளிப்படுத்தி சாதாரண நிலைமைக்கு வந்துள்ளது. 2027 இற்குள் பொருளாதார நூற்றுக்கு ஐந்து வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலை முழுமையாக வாசிக்க https://tinyurl.com/yc6nneh6
லிங்கை க்ளிக் செய்க
******
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்
🔷Subscribe Our Social Media Channels
📌 Follow on Web : https://tamil.news.lk/news
📌 Like on Facebook Tamil : https://www.facebook.com/tamilnewslka/
📌 Follow on WhatsApp : https://chat.whatsapp.com/JZ7efW0aPc7JWlen3AiDns (தமிழ் செய்திகள்)