Mayuraagoldsmith சுவிஸ் அரச அங்கீகாரம்பெற்ற தமிழர் நகை தயாரிப்புநிறுவனம்

  • Startseite
  • Schweiz
  • Zürich
  • Mayuraagoldsmith சுவிஸ் அரச அங்கீகாரம்பெற்ற தமிழர் நகை தயாரிப்புநிறுவனம்

Mayuraagoldsmith சுவிஸ் அரச அங்கீகாரம்பெற்ற தமிழர் நகை தயாரிப்புநிறுவனம் சுவிஸ் அரச அங்கீகாரம் பெற்ற தங்க தமி?

சுவிஸ் அரச அங்கீகாரம் பெற்ற தங்க நகை நகைத் தயாரிப்பு நிறுவனம்

உங்கள் தங்க நகைத்தேவைகள் அனைத்தும் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்
தாலிக்குப் பொன் உருக்குதல், தாலி செய்தல் ,காது குத்துதல்,

உங்கள் பழைய தங்கத்தில் உங்கள் விருப்பிற்கு ஏற்ப புதிய நகைகள் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்,

இன்று எனது 67 வது அகவை நாள் இந்த அளவுக்கு எனது தாய் தந்தை அருளுடன் உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர். மனைவி பிள்ளைகள் பேரப...
03/05/2024

இன்று எனது 67 வது அகவை நாள்

இந்த அளவுக்கு எனது தாய் தந்தை அருளுடன் உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர். மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்.

அன்பும் பண்பும் நிறைந்த நண்பர்கள்.என்னை அளவுக்கு அதிகமாக வளர்த்துவிட்ட குறுகிய மனம் படைத்த என்னை நம்பவைத்து எனது பணத்தை ஏமாற்றிய புல்லுருவிகள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் கள்வர் கூட்டம். அயோக்கியர்கள்.

இன்றய அகவை தினம். மற்றும் திருமண நன்னாள் நினைவு கூரும். அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை.

ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழ்ந்து வாழவைக்க வேண்டுகின்றேன்.

என்னால் வாழ்ந்தவர்கள் பலருண்டு ஆனால் எவரும் என்னை வாழவைக்கவில்லை தவளைக்கு வாயால் அழிவு வாழ்க வழமுடன்.

சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் மிகவும் பிரபலமானவேலா கிறெடிற் உரிமையாளர், திரு வரதன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார் ...
25/04/2024

சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் மிகவும் பிரபலமான
வேலா கிறெடிற் உரிமையாளர், திரு வரதன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிற்சியைத்தருகிறது,

இவர் மற்றவரை பாராட்டுவதில் அக்கறையெடுக்கும் மிகவும் நல்லமனிதர், காணுமிடமெல்லாம் ஓடிவந்து கைகுலுக்குபவர் பாராட்டுபவர்,

எப்பவும் புன்னகை தவழும் முகம், அவர்காணாத தோல்விகளும் இல்லை, எட்டாத வெற்றிகளும் இல்லை, ஒரு நல்ல மனிதரை எல்லா சோதனைகளையும் வென்று சாதித்த மனிதரை எவர் மீதும் எளிதில் அன்பு காட்டும் மனிதரை நல்ல நண்பரை நாம் இழந்து விட்டோம் மனது வலிக்கிறது.

அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகட்டும்.

இன்று தனது அன்றாட கடமைகளுக்குச்செல்வதற்காக வேலா வரதன்அவர்கள் விழித்துக்கொள்ளவில்லை.
இயற்கையோடு கலந்து அவரது உயிர் இந்த உலகைவிட்டு நீங்கி சென்றுவிட்டது.

தொகுப்பு-Ayurvedic physician-Dr-Markandu Devarajah(LLB-MP-TGTE) Mayuragoldsmith.Zurich.Switzerland.                     ...
02/04/2024

தொகுப்பு-
Ayurvedic physician-Dr-Markandu Devarajah(LLB-MP-TGTE) Mayuragoldsmith.Zurich.Switzerland. [email protected] Whatsapp Contact+41797674555
நீங்கள் முன் ஜென்மத்தில்செய்த பாவமும். இந்த ஜென்மத்தில் செய்த பாவமும் சேர்ந்தே உங்களுக்கு வியாதியாக வருகின்றது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். இதுவே பூரண சித்தாயுர்வேதம் படித்த ஒருவரால் உணரமுடியும். மருத்துவம் செய்யமுடியும்.
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும்,
உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை
மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர,
புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான்.
புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர்,
மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத்
தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி
நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம்,
தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு
அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த
நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல்
ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில்
முக்கியமானவை இருபத்தெட்டாகும்.
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்குகும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள்
ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை
விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது
குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை
ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும்.
இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான
கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து
மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை
ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை
வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்
செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில்
உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி
விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும்
குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின்
பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத்
தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித்
துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம்
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா
உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில்
கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம்
இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத்
துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும்
அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும்
வதைத்த பாவிகள் செல்லும் நரகம்
இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி
என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும்
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத
ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத்
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு,
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு
பாவிகள் அவதிப்படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல்,
கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள்
புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய
மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும்.
விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத்
துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை,
தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து
வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை
நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.
இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில்
மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில்
எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ
கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம்
வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக்
கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச்
சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும்.
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள்.
இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத்
துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல்,
உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது
கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும்
எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக
நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல.
இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும்.
கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து
துன்பப்படுவார்கள்.
பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி,
ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன்
அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள்,
பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால்
அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை
ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும்
நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி
கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற
மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும்
நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது,
உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல்,
மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச்
செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான
கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத்
தூக்கிவீசி அழுத்துவார்கள்.
மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற
தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு
பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால்
திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத
தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி
அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு,
வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான
தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும்.
எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை
நரகில் நிச்சயம் என்று அறிந்து
புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

தொகுப்பு.                                                                                                               ...
18/03/2024

தொகுப்பு. Ayurveda Dr-Markandu Devarajah(LLB)Mayuragoldsmith.Zurich.Switzerland. [email protected]+41797674555,
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் விளைவுகள் என்ன? அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?
1-அடிக்கடி தாகம்
2-சிறுநீர் கழிப்பது குறையும்
3-மலச்சிக்கல்
4-பலவீனமான அல்லது வேகமான துடிப்பு
5-எளிதில் சோர்வு
6-மனநிலையில் ஏற்றத்தாழ்வு
7-ஒற்றைத் தலைவலி
8-தலைச்சுற்றல்

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பது அனைவருக்குமே தெரியும். வயது, பாலினம் மற்றும் உடல் பருமனுக்கு ஏற்றவாறு, உடலுக்கு எவ்வளவு தண்ணீர் அவசியம் என்பது கணக்கிடப்படுகிறது. சராசரியாக மனித உடலானது 55-60% நீராலானது. பலரும் நாம் குடிக்கும் தண்ணீர் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் குடிக்கும் நீரானது மூட்டு இணைப்புகள், கண்கள், உள்ளுறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர், மலம் மற்றும் மூச்சை வெளியிடும் போது என பலவாறு நீர் வெளியேறுகிறது. எப்போது அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறதோ, அப்போது உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும். உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் உடல் வறட்சியுடன் இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கொண்டு நாம் குடிக்கும் தண்ணீர் உடலுக்கு போதவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

அடிக்கடி தாகம்
தண்ணீர் குடித்த சில நிமிடங்களிலேயே அதிக தாகத்தை அடிக்கடி உணர்ந்தால், அவர்களது உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம். அதோடு நாக்கு, உதடு போன்றவையும் மிகுந்த வறட்சியுடன் இருக்கும். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

சிறுநீர் கழிப்பது குறையும்
உடலில் நீரின் அளவைப் பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் உள்ள நீர் அதிகளவு சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகிறது. உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், மூளையில் உள்ள உணர்ச்சி வாங்கிகள் ஆன்டி-டையூரிக் ஹார்மோன்களை வெளியிடுமாறு சமிஞ்கைகளை அனுப்பும். இந்த ஹார்மோன்கள் சிறுநீரகங்களை அடைந்து செல்லுலார் நீர் கால்வாய்களான அக்குவாபோரின்களை உருவாக்கி, சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தத்தில் இருந்து நீரை பிரித்தெடுக்காமல் தக்க வைக்கும். இதன் காரணமாக சிறுநீரின் அடர்த்தி அதிகமாவதோடு, கழிக்கும் சிறுநீரின் எண்ணிக்கையும் குறையும்.

அதுமட்டுமின்றி, சிறுநீரின் நிறம் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். முக்கியமாக ஒருவர் 8 மணிநேரத்திற்கும் மேல் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலோ அல்லது ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மலச்சிக்கல்
குறைவான உடலுழைப்பு மற்றும் உட்கொள்ளும் நார்ச்சத்தின் அளவும் குறைவாக இருந்து, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஒருவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பின், குடலியக்கம் பாதிக்கப்பட்டு, மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

பலவீனமான அல்லது வேகமான துடிப்பு
எப்போது ஒருவர் போதுமான அளவில் நீரை குடிக்காமல் இருக்கிறாரோ, அவரது உடலில் இரத்தத்தின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் இதயத்தில் இருந்து உடலுறுப்புகளுக்கு இரத்தம் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். அதாவது இதயம் அளவுக்கு அதிகமான வேலையில் ஈடுபட வேண்டியிருக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் இதயத்துடிப்பு பலவீனமாகவும், இன்னும் சில நேரங்களில் வேகமாகவும் இருக்கும்.

எளிதில் சோர்வு
முன்பு கூறியது போல், இதயம் அளவுக்கு அதிகமான வேலையில் ஈடுபடும் போது, உடல் எளிதில் சோர்வடையும். அதோடு, மன குழப்பம் அதிகரித்து, முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் திணர நேரிடும்.

மனநிலையில் ஏற்றத்தாழ்வு
உடலில் லேசாக வறட்சி ஏற்பட்டால், அது அன்றாட பணிகளை பெரிதும் பாதிக்கும். சிறு பணிகளைக் கூட மிகவும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.

ஒற்றைத் தலைவலி
ஒருவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். எப்படியெனில், இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், குறைவாக இருக்கும் போது, மூளையில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பித்து, கடுமையான தலைவலிக்கு உள்ளாக்கும்.

தலைச்சுற்றல்
உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும் போது, இரத்த அழுத்தம் குறைந்து, அடிக்கடி மயக்கம் அல்லது தலைச்சுற்றலை அனுபவிக்க நேரிடும். முக்கியமாக திடீரென உட்கார்ந்து எழும் போது அல்லது உட்காரும் போது இம்மாதிரியான தலைச்சுற்றல் ஏற்படும்.
குடிக்கும் நீரின் அளவு

ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் குடிக்கும் நீரின் அளவு ஒருவரின் உடல் ஆரோக்கியம், வியர்வையின் அளவு, வெயில் காலமா? மழைக்காலமா? வேலை பார்க்கும் இடச் சூழ்நிலை, எந்த பகுதியில் வசிக்கின்றோம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.

நாம் உடல் 60% நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.

சிறுநீர், வேர்வை, சுவாசம், மலம், மூலமாக நம் உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன. 12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர் இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். ஆண்கள் குறைந்த பட்சம் 3 லிட்டர் நீரும் பெண்கள் 2 1/2 லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. ஆனால் அது குளிர் தட்ப வெப்பம் உள்ள நாடுகளுக்குதான் பொருந்தும்.
சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம். அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற் சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்திலும் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக் நீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் சாதாரண அளவு நீர் போதுமானது. காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.
பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½ லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு அறிவுறித்தப்படுகின்றனர்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் இவைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்
நீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள்
•உடல் எடை, சத்து குறையும்.
•சோர்வு.
•தாகம் வாய் உலர்தல்.
•மயக்கம், தலைவலி.
•சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், சிறுநீரகங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள்.
இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் இருப்பவர்கள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்
அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது.
சோடியத்தின் அளவு
நம் உடலில் சோடியத்தின் அளவு குறையும் பட்சத்தில் அவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சோடியம் தான் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு தகவல்களை அனுப்புகிறது. செயல்பாடுகளை நினைவூட்டுகிறது. அதன் அளவு குறையும் பட்சத்தில் உடல் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். மேலும், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிக்கும் போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு அதீத வேலைப்பளு ஏற்பட்டு அவற்றின் செயல்பாடு குறையத் தொடங்கும். கிட்னியில் இருக்கக்கூடிய Glomeruli எனும் கேப்பிலரி பெட் சேதமடைந்திடும். மேலும், உட்சபட்சமாக, அதிக தண்ணீரை பருகும்போது மூளை வலுவிழந்து கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல வகையான சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கிறோம்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல வகையான சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உடலில் அதிக அளவு நீர் இருப்பதால், சிறுநீரகங்கள் செயலிழக்கும்.
நின்றபடி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தண்ணீரைப் பருகுவதற்கான சரியான வழி எப்போதும் உட்கார்ந்து கொண்டு தண்ணீரைக் குடிப்பது தான் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது உங்கள் வயிற்றில் உள்ள உணவுக் குழாயின் பாதையில் நேரடியாக பயணிக்கிறது, இதன் காரணமாக உங்கள் வயிற்று பகுதி சேதமடைய வாய்ப்பு உண்டாகிறது.
அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் உங்கள் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, இதனால் சிறுநீரகத்திலிருந்து நீர் வெளியேறாமல் வெளியேறுகிறது மற்றும் சிறுநீரகங்கள் மெதுவாக செயல்படுவதை நிறுத்தி, நோய்களை ஏற்படுத்துகின்றன.
நின்றபடி தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் மூட்டுகளில் இருக்கும் வேதிப்பொருட்களின் சமநிலை மோசமடைகிறது, இதன் காரணமாக மூட்டு வலியின் பிரச்சனை தொடங்குகிறது. இதன் காரணமாக, உங்களுக்கு முதுகுவலி பிரச்சனையும் உண்டாகலாம்.
அதிகளவு நீர் குடிப்பதால் இதய நோய்கள் வருமோ என்று சிலர் அஞ்சுகின்றனர். உண்மையில் அதிகப்படியான தண்ணீரை குடிப்பதால் நம் உடலில் உள்ள உணவை சரியாக ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாகவே மூச்சு திணறல் போன்ற பிரச்சனை வரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக தண்ணீர் குடித்தால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். தசைகள் வலுவிழந்து காணப்படும். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படும். நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
அதிக தண்ணீர் பருகுதல்
நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பருகுகிறீர்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கூறிவிடலாம். வெளியில் செல்லும்போது அல்லது அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்தில் அதிக தண்ணீர் குடிப்பீர்கள். ஒரு சிலர் இரவு நேரத்தில் குறைந்தது ஏழு முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள். அவர்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கும் உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிறிக் காணப்படும்.

சிறுநீர் கலர்
நீங்கள் குடிக்கும் தண்ணீர் உங்கள் உடலுக்கு போதுமானதா? அல்லது தேவைக்கு அதிகமாக குடிக்கிறீர்களா என்பதை உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். இளம் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், தண்ணீரை போதுமான அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள். அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலில் தண்ணீர் தேவை அதிகமிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி. வெள்ளையாக வெளியேறினால் நீங்கள் அளவுக்கு அதிகமான தண்ணீரை குடித்திருக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாம்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது ?
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் 🙏.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி தான்.. நாம் உயிர் வாழ தண்ணீர் என்பது மிகவும் அவசியம்.. சாப்பாடு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது. அனைவருமே ஒருநாளும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நமது உடலில் தண்ணீர் போதுமான அளவு இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். இருந்தாலும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது என்பது மிகவும் தவறான பழக்கம் ஆகும். அது ஏன் என்று இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று, உடல் எடையை அதிகரிக்கும். ஏனென்றால், இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை உருவாக்கி, பின்னர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் கூட உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது.
உமிழ்நீர் செரிமானத்தின் இன்றியமையாத அங்கமாகும், இது உணவை உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.
நாம் சாப்பிடும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நமது உடல் சிறிய குடல் வழியாக மெதுவான வேகத்தில் குறைவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.
சாப்பிடும் பொது அதிகளவு தண்ணீர் அருந்தவத்தால் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இதனால் எடை அதிகரிக்கும். இது வெறும் தண்ணீருக்கு மட்டும் பொருந்தாது; உங்கள் உணவோடு சாறு அல்லது சோடா குடிப்பது உங்கள் உடல் எவ்வளவு இன்சுலின் உற்பத்தி செய்கிறது என்பதையும் பாதிக்கும்.

தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படும் நேரங்கள்:
தூங்கி எழுந்த பிறகு:
தூங்கி காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடியுங்கள். இது உங்கள் உள் உறுப்புகளை செயல்படுத்த உதவும். உங்கள் முதல் உணவிற்கு முன் எந்த நச்சுப் பொருட்களையும் அகற்ற தண்ணீர் உதவும்.

உணவுக்கு முன்:
நீங்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். உணவுக்கு முன்னும் பின்னும் மிக விரைவில் குடிக்க வேண்டாம். ஏனெனில் தண்ணீர் செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்யும். உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

குளிப்பதற்கு முன்:
குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும், இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.

இன்று எங்களது 42 வது திருமண நாள் இன்றயதினம்  திருமண நன்னாளயும். பிறந்த தினத்தையும் கொண்டாடும் அனைவருக்கும் எங்களது இனிய ...
05/02/2024

இன்று எங்களது 42 வது திருமண நாள் இன்றயதினம் திருமண நன்னாளயும். பிறந்த தினத்தையும் கொண்டாடும் அனைவருக்கும் எங்களது இனிய மனமார்ந்த நல் வாழ்த்துக்களயும் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் வாழ்க வளமுடன்.

குருமாற்றம் என்றால் என்ன இதனால் 2020. முதல் 2021 கார்த்திகைவரை 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன  மே...
22/11/2020

குருமாற்றம் என்றால் என்ன இதனால் 2020. முதல் 2021 கார்த்திகைவரை 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன
மேஷ ராசி பலன் 2021
தொகுப்பு மார்க்கண்டு தேவராஜா(LLB.MP.TGTE)Mayuraagoldsmith Zurich-Switzerland.
குரு பார்க்க கோடி நன்மை – நவ­கி­ர­கங்­க­ளில் வியாழ பக­வானே முதன்மை சுப கிர­கம். தேவர்­க­ளின் குரு­வாக இவர் இருந்து – நவ­கி­ரக அந்­தஸ்து பெற்­ற­தால் இவ­ருக்கு சுப கிர­கங்­க­ளில் முதன்மை அந்­தஸ்து கிடைத்­தது. வேதங்­கள், நல்ல குணம், நன்­ன­டத்தை, தர்ம காரி­யங்­கள், புத்தி கூர்மை, கல்வி, எடை, மந்­தி­ரிப் பதவி, அர்ச்­ச­கர், கோயி­லில் பூஜை செய்­ப­வர்­கள், வழி­பாடு, கற்­றுத்­த­ரு­தல், மூத்த சகோ­த­ரர், மகன், பணம், மதிப்பு, வாழ்க்­கைத் துணை நல­னில் அக்­கறை, பூக்­கள், கரும்பு, தென்னை மரம், வெற்­றிலை, இனிப்­பான பழங்­கள் கொண்ட மரங்­கள், பிரத்­யே­க­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வீடு­கள் போன்ற நற்­ப­லன்­களை நமக்கு அளிக்­கக்­கூ­டிய சக்தி பெற்­ற­வர். ஜாத­கத்­தில் இவ­ரது பலத்தை பொருத்து இது கூடும் அல்­லது குறை­யும். ஒவ்­வொரு ராசி­யி­லும் ஒரு ஆண்டு சஞ்­சா­ரம் செய்­ப­வர். தனுசு – மீனம் ராசி­க­ளுக்கு அதி­பதி – கட­கத்­தில் உச்ச பலம் பெறு­வார் – மக­ரத்­தில் நீச்ச பலம் பெறு­வார் – 12 ராசி­க­ளைக் கடந்து வர 12 ஆண்டு ஒரு­மா­மாங்­கம் ஆகும்.

இது­வரை விருச்­சிக ராசி­யில் சஞ்­ச­ரித்த வியா­ழன் (எ) குரு­ப­க­வான் 13.03.2019 புதன் கிழமை – விளம்பி ஆண்டு – மாசி மாதம் – 29ம் தேதி­யன்று – வளர்­பிறை – சப்­தமி திதி­யில் – ரோகிணி நட்­சத்­தி­ரம் – சித்­த­யோ­கம் கூடிய சுப­வே­ளை­யில் – தனுசு ராசி­யில் – மூலம் நட்­சத்­தி­ரம் – 1ம் பாதத்­தில் பெயர்ச்­சி­யாகி சஞ்­ச­ரிக்­கி­றார். அப்­பொ­ழுது 12 ராசி­க­ளுக்­கும் குரு­பெ­யர்ச்­சி­யின் பலன்­களை தெரிந்­து­கொள்­ளுங்­கள். இதில் வக்­ர­மாகி – விருச்­சி­கம் செல்­கி­றார். அதன் பிறகு தனுசு ராசி வரு­கி­றார். 10.4.2019 முதல் வக்­ர­மாகி கேட்டை நட்­சத்­தி­ரம் காலில் சஞ்­ச­ரிக்­கி­றார். இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி தனுசு ராசிக்கு வரு­கி­றார். அங்கு 16.11.2019 வரை மூலம் நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதன் பிறகு 17.11.2019 முதல் பூரா­டம் நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­கி­றார். அங்கு 18.2.2020 வரை சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதன் பிறகு 6.3.2020 முதல் உத்­தி­ரா­டம் நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் செய்­கி­றார். அதில் 27.03.2020 முதல் 8.7.2020 வரை குரு அதி­சா­ரம் பெற்று மகர ராசிக்கு சென்று அதன் பிறகு தனுசு ராசிக்கு வரு­கி­றார்.

14.12.2020 வரை உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் சஞ்­ச­ரித்து 15.12.2020 அன்று குரு மகர ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இந்த கால சூழ்­நி­லைக்கு ஏற்ப குரு­வின் பலன்­கள் கூடும் – குறை­யும். மேஷம், மிது­னம், சிம்­மம், விருச்­சி­கம், கும்­பம் ஆகிய ராசி­க­ளுக்கு உத்­த­ம­மாக – சாதக பலன்­கள் தரு­வார். ரிஷ­பம், கட­கம், கன்னி, துலாம், தனுசு, மக­ரம், மீனம் ஆகிய ராசி­க­ளுக்கு சாத­க­மற்ற நிலை­யில் இருப்­ப­தால் இவர்­கள் வியா­ழக்­கி­ழமை அன்று தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு செய்­வது சிர­மப் பரி­கா­ர­மா­கும்.
மேஷ ராசி பலன் 2021
மேஷ ராசி பலன் 2021 மேஷ ராசி பலன் 2021 (mesha rasipalan 2021) படி, மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு வருகின்ற புதிய ஆண்டு மிகவும் உற்சாகமாகம், தைரியம் மற்றும் பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு பல துறைகளில் உங்கள் பழைய வேலைகளை நீங்கள் செய்து முடிப்பதில் வெற்றி அடைவீர்கள், எனவே இந்த ஆண்டு உங்கள் நட்சத்திரமும் உங்களுக்கு ஆதரவளிக்கும். வேலை ஜாதகக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் மற்றும் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்கும், இதனால் அவர்களுக்கு பணித்துறையில் வேகம் அதிகரிக்க கூடும். இந்த நேரம் நீங்கள் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும், இதனால் நீங்கள் சுயமாகவே அழுத்தத்திலிருந்து வெளியேறி, எந்த முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கும், ஏனென்றால் சனி பகவான் உங்களை அதிகமாக உழைக்க செய்வார்.

பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஏனென்றால், ஆண்டின் தொடக்கத்தில் பணத்தை இழக்க வாய்ப்புகள் இருக்கும்போது, ​​நடுவில் குரு பெயர்ச்சியின் போது, ​​உங்களுக்கும் ஏராளமான செல்வங்கள் கிடைக்கும். உங்கள் நோய்க்கு நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு உங்கள் நிதி வாழ்க்கைக்கு ராகுவின் பார்வை நல்லதாக இருக்கும். ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை, ராகு அவர்களின் கவனத்தை திசை திருப்புவார், இது படிப்பில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆண்டின் தொடக்கமும் ஆண்டின் முடிவும் மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும், ஏனென்றால் இந்த முறை அவர்கள் தேர்வில் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள், இது ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

சனி பகவான் இந்த ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப் போகிறார், ஏனெனில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் வரை நீங்கள் குடும்ப மகிழ்ச்சியைப் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலைகள் காரணமாக நீங்கள் அவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும், இதன் காரணமாக உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். பெற்றோருக்கும் உடன்பிறப்புகளுக்கும் நேரம் நன்றாக இருக்காது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான பதற்றம் நீடிக்கும் என்பதால், நேரம் உங்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள விடமாட்டீர்கள், உங்கள் கோபத்திற்கு மட்டுமே தீங்கு விளைவிக்கட்டும். நேரம் குழந்தைகளுக்கு நல்லது, அவர்கள் தங்கள் துறையில் வெற்றியைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் செயல்திறனும் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கும்.

காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும், உங்கள் காதல் திருமணமும் நடைபெறலாம். அன்பானவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள், அது உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் காதலனுடன் எங்காவது செல்ல நீங்கள் திட்டமிடுவீர்கள், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் காதலனுடன் நேரத்தை செலவிடும்போது, ​​இங்கேயும் அங்கேயும் இடையூறு செய்யாதீர்கள் என்பதை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஆரோக்கியம் மேம்படும், மேலும் நீங்கள் எந்தவொரு பழைய நோயிலிருந்தும் விடுபடலாம். இந்த ஆண்டு, சிறிய சிக்கல்களைத் தவிர வேறு எந்த பெரிய நோயும் உங்களுக்கு இருக்காது. இதற்காக, நீங்கள் உங்கள் உணவையும் உங்கள் அன்றாட வழக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மேஷ ராசி பலன் 2021 படி தொழில்

உங்கள் தொழில் துறையில், மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏனென்றால், சனி பகவான் ஆண்டு முழுவதும் உங்கள் பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதன் காரணமாக நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள், மேலும் நீங்கள் சனியின் ஒரு நல்ல காட்சியைப் பெறுவீர்கள். இந்த விஷயத்தில், சனி பகவானின் இந்த விளைவு உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் முந்தையதைப் பொறுத்தவரை நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் துறையில் நல்லதைச் செய்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், வெவ்வேறு துறைகளில் உள்ளவர்களின் உதவியைப் பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்புகளுடன் இணைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனுடன், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் பணித்துறையில் கிடைக்கும். வெளிநாட்டு ஆதாரங்களுடனான உங்கள் தொடர்பை அதிகரிக்க உங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும், பின்னர் அவர்களிடமிருந்து நல்ல லாபத்தைப் பெற வேண்டும்.

எனவே நீங்கள் பணிபுரிந்தால், நீங்கள் வேலைத் துறையில் பதவி உயர்வு பெறுவீர்கள், இதனால் உங்கள் முதலாளியும் சகாக்களும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை, நீங்கள் சற்று சிக்கலை உணருவீர்கள், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பெரிய கட்டணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது, இது உங்கள் குணத்தை சேதப்படுத்தும். நீங்கள் வர்த்தகம் செய்தால், வர்த்தகர்கள் இந்த ஆண்டு இழப்பை ஏற்க வேண்டியிருக்கும். இருப்பினும், வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் வணிகத்தில் லாபத்திற்கான புதிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் காணப்படுவீர்கள். இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த உத்திகள் மற்றும் புதிய வாய்ப்புகளிலிருந்து நீங்கள் பயனடையலாம்.

மேஷ ராசிபலன் 2021 படி பொருளாதார வாழ்கை

மேஷ ராசிஜாதகக்காரர்களுக்கு பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், இது இருந்தபோதிலும், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். ஏனெனில், இந்த நேரத்தில், குரு உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தி உங்கள் வருமானத்திற்கு பயனளிக்கும். இந்த நேரத்தில், உங்கள் பல மன கஷ்டங்களை அகற்ற குரு வேலை செய்யும். இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், பொருளாதார நிலைமைகள் மீண்டும் ஏற்ற இறக்கமாக இருக்கும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதற்குப் பிறகு, டிசம்பர் முதல் ஒரு நல்ல நேரம் தொடங்கும். ஏனெனில் ஆண்டின் இறுதியில் உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் ராகு இருப்பது உங்களுக்கு பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைத் தரும். இருப்பினும், இந்த வாய்ப்புகள் அனைத்தையும் உங்கள் விழிப்புணர்வுடன் நீங்கள் பயன்படுத்த வேண்டும், மிகவும் கவனமாக, அப்போதுதான் நீங்கள் அவர்களிடமிருந்து லாபம் பெற முடியும். இல்லையெனில் மூன்றாவது பந்தயம் அடித்திருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் செலவுகளையும் அதிகரிக்கும், மேலும் நீங்கள் நிதி ரீதியாக சிக்கித் தவிப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், சரியான நேரத்தில் ஒரு நல்ல சுகாதார கொள்கையைப் பெறுங்கள்.

மேஷ ராசி பலன் 2021 படி கல்வி

மேஷ ராசிபலன் 2021 படி, கல்வி துறையில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். ஏனென்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை பல மாணவர்கள் படிப்பில் ஆர்வம் பெறுவார்கள், இதனால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். எனவே ராகு-கேது பல மாணவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதைக் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்கள் மோசமான நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்தாமல் உங்கள் வணிகத்தை வைத்திருக்க முயற்சிக்கிறீர்கள். இருப்பினும், மார்ச் மாதத்திற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் நிலைமை சற்று மோசமாக இருக்கும், மேலும் உங்கள் பல பாடங்களைப் புரிந்துகொள்வதில் நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பத்திலிருந்து நீங்கள் வெளியேறத் தவறிவிடுவீர்கள், இதன் காரணமாக உங்கள் மனம் படிப்பில் ஈடுபடாது.

இதற்கு பிறகு மே முதல் ஜூலை மாதத்தில் நீங்கள் நிலைமைகளில் மாற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், அதற்கு நவம்பர் சிறந்த நேரம். இந்த நேரத்தில், சனிபகவான் உங்களுக்கு ஆதரவளிப்பார், இது உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். இந்த ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 22 வரை உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில், மாணவர்கள் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். மேலும், உங்கள் பதினொன்றாம் வீட்டில் இருக்கும் குருவும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். எனவே நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள் என்றால், உங்கள் ராசியின் வீட்டில் குருவின் இந்த நல்ல பார்வை உங்களை வெளிநாட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு உதவும்.

மேஷ ராசிபலன் 2021 படி குடும்ப வாழ்கை

இந்த ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கை சற்று சாதகமாக இருக்கும், ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பார், இது உங்கள் செயல்களின் பலனை உங்களுக்குத் தரும். இதன் காரணமாக நீங்கள் குடும்ப மகிழ்ச்சியில் குறைபாட்டை உணருவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் தனிமையில் இருப்பீர்கள், சில காரணங்களால் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். வீட்டிலிருந்து விலகி இருக்கும்போது, ​​நீங்கள் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற மாட்டீர்கள், இது உங்கள் இயல்பில் எரிச்சலூட்டும் தோற்றத்தைத் தரும். வேலைப் பகுதியிலும் ஏராளமான வேலைகள் இருப்பதால், நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாது, இதன் காரணமாக குடும்பத்தினரும் உங்களிடம் கோபப்படுவார்கள்.

இந்த ஆண்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் உங்கள் குடும்பத்துடன் ஒரு நபராக இருப்பதை நிரூபிக்கும். இந்த நேரத்தில் பெற்றோருக்கும் ஆரோக்கியம் சாத்தியமாகும். அத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு சர்ச்சையையும் அவர்களின் துன்பங்களை அதிகரிக்காமல் தீர்க்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, நிலைமையில் சிறிது முன்னேற்றம் இருக்கும், மேலும் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகளுக்கு வயலில் ஒருவித தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கலாம். மேலும், அவர்களின் ஆரோக்கியத்தை சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மேஷ ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்

திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும். ஏனென்றால் மேஷத்தின் லக்கின வீட்டில், செவ்வாய் அதிபதி ஆண்டின் தொடக்கத்தில் அமர்ந்திருப்பார். மேலும், இந்த நேரத்தில் உங்கள் ராசியில் சனி பகவான் பார்வையும் ஏழாவது வீட்டில் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் எந்த பதற்றம் நிலைத்திருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் தகராறுகள் இருக்கும். அதே நேரத்தில், உங்கள் இருவருக்கும் பழைய ரகசியம் இருக்க முடியும். பிப்ரவரி 21 முதல் மார்ச் 17 வரை சுக்கிரன் உங்கள் ராசியின் வீட்டில் நுழைகிறார். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் திருமண மகிழ்ச்சியை உணருவீர்கள், ஏனென்றால் சுக்கிரன் பொருள் இன்பங்களுக்கு காரணியாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அவர்கள் இருப்பது உங்கள் இருவரின் மரியாதையும் அதிகரிக்கச் செய்யும், இது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான பிளவுகளை நீக்கும்.

இருப்பினும், உங்கள் தாய்க்கும் மற்றும் வாழ்க்கை துணைவியாருக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு காணப்படும். இந்த நேரத்தில், உங்கள் தாய்க்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏற்படக்கூடும், இதன் காரணமாக நீங்கள் உங்கள் தாய்க்கு ஆதரவாக இருப்பதையும், அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மனைவியை கோபப்படுத்தலாம். ஏப்ரல் மாதத்தில் நிபந்தனைகள் உங்களுக்கு மேம்படும், இது செப்டம்பர் வரை அப்படியே இருக்கும். இதன் போது, ​​உங்கள் திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும். குழந்தைக்கு சாதனை கிடைக்கும், இது திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணும். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், நீங்கள் உங்கள் மனைவியுடன் இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், முடிந்தால், அவர்களுடன் எங்காவது சாப்பிட வெளியே செல்லுங்கள் அல்லது அவர்களுக்கு ஒரு பரிசை வழங்குங்கள். உங்கள் மனைவி ஒரு வாகனத்தை ஓட்டினால், அவர்களுக்கு ஒரு விபத்து ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேஷ ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

மேஷ ராசி பலன் 2021 படி, காதல் ஜாதகக்காரர் இந்த ஆண்டு நல்ல பலன்களைப் பெறுவார்கள். இருப்பினும், ஆண்டின் ஆரம்பம் நீங்கள் விரும்பும் அளவுக்கு சாதகமாக இருக்காது. ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலில் ஈடுபடுவதைக் காணலாம், நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள கூட முடிவு செய்யலாம். உங்கள் காதலனுடன் ஒவ்வொரு கணத்தையும் நீங்கள் அனுபவிப்பீர்கள், இந்த ஆண்டு உங்களுக்கு இதுபோன்ற புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும், இதிலிருந்து நீங்கள் இருவரும் ஒரு நல்ல பயணத்தில் செல்லவும் திட்டமிடலாம்.

நவம்பர் நடுப்பகுதியில் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கை காதலரின் குடும்பத்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காதலிக்கு எல்லாவற்றையும் விளக்கும் போது உங்கள் உறவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் உங்களுக்கு பிடித்தவருடன் ஒரு தகராறு இருக்கலாம். உங்களுக்குத் தேவையானதை விட தொலைபேசியில் தொடர்ந்து ஈடுபடுவதே இதற்குப் பின்னால் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைபேசியைச் சந்திக்கும் போது உங்கள் இருவரையும் முடிந்தவரை விலக்கி வைக்கவும்.

மேஷ ராசி பலன் 2021 படி ஆரோக்கிய வாழ்கை

மேஷ ராசி பலன் 2021 படி, ஆரோக்கிய வாழ்க்கையில் நீங்கள் இயல்பை விட சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள், ஏனென்றால் கிரகங்களின் பார்வை உங்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தராது. இருப்பினும், நீங்கள் அவ்வப்போது சோர்வடைவீர்கள், இதன் காரணமாக உங்கள் இயல்பில் உள்ள எரிச்சல் தெளிவாகக் காணப்படும். இதனுடன், நிழல் கிரகமான கேது மற்றும் ராகுவின் பார்வை உங்கள் ராசியின் எட்டாவது மற்றும் இரண்டாவது வீட்டில் இருப்பதால் வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் உணவை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். குத நோய்கள், இரத்த பிரச்சினைகள், முதுகுவலி, தூக்கமின்மை, வாயு, அஜீரணம் போன்ற சிறு புகார்களைத் தவிர, இந்த ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியவாழ்கை நன்றாகவே இருக்கும்.

மேஷ ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்

,தங்கம் / செப்பு வளையத்துடன் உங்கள் வலது கையின் மோதிர விரலில்அணியுங்கள் பவள ரத்தினத்தை. இது இரத்த தொடர்பான கோளாறுகளிலிருந்து உங்களுக்கு சுதந்திரம் தரும்.
ஆசனவாய் தொடர்பான நோய்களைத் தவிர்க்க, ஆனந்த் மூல் வேர் எடுத்துக்கொள்வது பொருத்தமானது.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் சுந்தர்கண்டைப் படியுங்கள்.
மேலும், தினமும் பஜ்ரங் பான் பாராயணம் செய்வதும் உங்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த ஆண்டு, எந்த ஜோதிர்லிங்கா குடும்பத்தையும் பார்க்க வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறை ருத்ராபிஷேக் செய்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
ஆர்க்யாவை தினமும் சூரிய கடவுளுக்கு வழங்கி, அவரை வணங்கவும்.

Adresse

Feldstrasse-09 Fehraltorf
Zürich
8320

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Mayuraagoldsmith சுவிஸ் அரச அங்கீகாரம்பெற்ற தமிழர் நகை தயாரிப்புநிறுவனம் erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Mayuraagoldsmith சுவிஸ் அரச அங்கீகாரம்பெற்ற தமிழர் நகை தயாரிப்புநிறுவனம் senden:

Teilen