Om sri jai varahi subha jodhida maiyam

Om sri jai varahi subha jodhida maiyam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Om sri jai varahi subha jodhida maiyam, Business service, 2/19, 8th Street nehru colony, Pazhavanthangal, Chennai.

16/02/2023

பகுத்தறிவு என்பது வெறும் மேடை பேச்சு...

15/05/2022
குரு நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்!வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இர...
15/03/2019

குரு நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்!

வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வீடு குருவின் அட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Learn Astrology in Chennai, Astrology classes in chennai, Astrology Classes in Nanganallur, Best Fertility Specialist in Nanganallur . For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/70?utm_source=facebookpage

ஜாதகத்தில் `கேந்திரம்’ எனும் 1, 4, 7, 10 இடங்கள்... தரும் பலன்கள் என்னென்ன?ஜோதிடம் தனித்துவமானது. ஜாதகக் கட்டத்தில் ஒவ்வ...
15/03/2019

ஜாதகத்தில் `கேந்திரம்’ எனும் 1, 4, 7, 10 இடங்கள்... தரும் பலன்கள் என்னென்ன?

ஜோதிடம் தனித்துவமானது. ஜாதகக் கட்டத்தில் ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு வகையான பொறுப்பு இருக்கும். அதை வைத்தே ஜாதகரின் குணநலன்கள், அவரின் செயல்பாடுகள், அதனால் அவருக்கு ஏற்படப்போகும் விளைவுகள் ஆகியவற்றை அறியலாம்.

''ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் எல்லா இடங்களுமே முக்கியமானவை. ஆனால், இதில் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஒருவரின் சுகம், வாழ்க்கைத்துணை, ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 'முதன்மை கேந்திரங்கள்' என்று இவற்றைத்தான் சொல்வார்கள்.
கேந்திரங்கள் எனப்படும் லக்னம், 4-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், அந்த அமைப்பு, 'பஞ்ச மஹா புருஷ யோகம்' எனப்படும்.
உதாரணமாக மேஷம் லக்னம் என்று வைத்துக்கொண்டால், மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றோ அல்லது சூரியன் உச்சம் பெற்றோ இருப்பதுடன், லக்னத்துக்கு 4-ம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சியாகவும் அல்லது குரு உச்சமாகவும்; 7-ம் இடமான துலாமில் சுக்கிரன் ஆட்சியாகவும் அல்லது சனி உச்சமாகவும்; 10-ம் இடமான மகரத்தில் சனி ஆட்சியாகவும் அல்லது செவ்வாய் உச்சமாகவும் அமைந்திருந்தால், 'பஞ்ச மஹா புருஷ யோக'மாகும்.
இதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் அவர்களின் தசா புக்திகளில் 'கேந்திர ஆதிபத்ய தோஷம்' எனும் தோஷத்தையும் கொடுப்பார்கள்.

லக்னம் எனும் முதல் பாவம்
சுகஸ்தானம் எனும் 4- இடம்
களத்திரம் எனும் 7 - ம் இடம்
ஜீவனம் எனும் 10 - ம் இடம்

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Learn Astrology in Chennai, Astrology classes in chennai, Astrology Classes in Nanganallur . For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/69?utm_source=facebookpage

Prasanam:If there is a single issue bothering a person, the best way to find a solution would be to erect a prasna chart...
15/03/2019

Prasanam:

If there is a single issue bothering a person, the best way to find a solution would be to erect a prasna chart and seek answers. Generally prasna charts are valid for all your question only. Deva prasana are conducted in temples to assess the mood of the presiding deity. Like this we have various types pf Prasnas for knowing about thief, Water in a well to be dug and many other specific matters.

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Learn Astrology in Chennai, Astrology classes in chennai, Astrology Classes in Nanganallur . For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/prasanam-if-there-/68?utm_source=facebookpage

குழந்தை பிறப்பு சம்பந்தமான ஆலோசனைகள்..தம்பதிகள் அனைவரும் திருமணத்திற்கு பிறகு முதலாவதாக எதிர்பார்ப்பது இந்த குழந்தை பாக்...
14/03/2019

குழந்தை பிறப்பு சம்பந்தமான ஆலோசனைகள்..

தம்பதிகள் அனைவரும் திருமணத்திற்கு பிறகு முதலாவதாக எதிர்பார்ப்பது இந்த குழந்தை பாக்கியத்தை தான். ஏனெனில் சந்ததி விருத்தி ஆவதற்கு இது முக்கியமானது ஆகும். பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த பத்தாவது மாதத்தில் தங்களுக்கென ஒரு வாரிசை எவ்வித சிரமமும் இன்றி பெற்றெடுத்து விடுகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் என்பது சற்று தாமதமாகவும்; இன்னும் சிலருக்கு இந்த குழந்தை பாக்கியமானது வெறும் காணல் நீராகவும் போய் விடுகிறது. இது அவரவர் வாங்கி வந்த வரம் என்றே சொல்ல வேண்டும்.. அதாவது ஜோதிடத்தில் 5-ம் பாவமும், கிரகத்தில் குரு பகவானும் குழந்தைக்கு காரகம் வகிக்கின்றனர்.

ஒருவரது ஜாதகத்தில் 5-ம் பாவமும், குரு பகவானும் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு சம்பந்தமான விஷயத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. ஒரு வேளை இவர்கள் வலுவிழந்து காணப்பட்டால் கட்டாயம் குழந்தை பிறப்பு சம்பந்தமான விஷயங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். குழந்தை எப்பொழுது?? சுகப்பிரசவத்தில் முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா?? குழந்தையை இயற்கையான முறையில் பெற முடியுமா அல்லது சோதனை குழாய் மூலமாக தான் பெற வேண்டுமா?? குழந்தை பிறப்பை தள்ளி போடுவதால் பிரச்சனைகள் வருமா?? போன்ற குழந்தை பிறப்பு சம்மந்தமான விஷயங்களுக்கு ஜோதிட ரீதியில் ஆலோசனைகளை பெற வாடிக்கையாளர்கள் இச்சேவையை பெறலாம்.

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Learn Astrology in Chennai, Astrology classes in chennai, Astrology Classes in Nanganallur, Best Fertility Specialist in Nanganallur. For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/67?utm_source=facebookpage

உத்தியோகமா!!!! சொந்த தொழிலா!!!! எது சிறப்பு??உத்தியோகம் பார்ப்பவர்களில் சிலர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும், ஒருவ...
14/03/2019

உத்தியோகமா!!!! சொந்த தொழிலா!!!! எது சிறப்பு??

உத்தியோகம் பார்ப்பவர்களில் சிலர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும், ஒருவருக்கு கீழ் பணிபுரிய மனம் ஒவ்வாததாலும், தானே சுயமாக தொழில் செய்ய விரும்புகின்றனர். அதே சமயம் சொந்த தொழில் செய்து வருபவர்களுள் சிலர் வியாபார மந்தத்தினாலும், நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினாலும் மீண்டும் உத்தியோகம் பார்க்கவே விரும்புகிறார்கள்.

ஜோதிடத்தில் 6-ம் பாவம் உத்தியோகத்தையும்; 7-ம் பாவம் சொந்த தொழிலையும் குறிக்கின்றது. ஒருவரது ஜாதகத்தில் இவ்விரு பாவங்களில் எது வலுவான அமைப்பில் உள்ளதோ அதை செய்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். தங்கள் சுய ஜாதகப்படி உத்தியோகம் மற்றும் சொந்த தொழில்.. இவ்விரண்டில் எதை செய்தால் பொருளாதார வளர்ச்சியை பெற முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் இச்சேவையை பெறலாம்.

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Learn Astrology in Chennai, Astrology classes in chennai, Astrology Classes in Nanganallur. For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/66?utm_source=facebookpage

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறா...
07/03/2019

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!

ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"

ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"

ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai, Free Jothida classes in chennai, Jothida classes in nanganallur, Jothida school in chennai. For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/65?utm_source=facebookpage

கால சர்ப்ப தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ராகு பகவ...
07/03/2019

கால சர்ப்ப தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ராகு பகவானின் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் பாலபிஷேகம் பார்த்தால் தோஷம் குறையும். ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயம் வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் சென்று தரிசித்தால் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.

திருப்பதி அருகில் உள்ள ஸ்ரீ காலஹஸ்தி சென்று வழிபட நன்மை உண்டாகும். அது போலவே ராமேஸ்வரம் சென்று வழிபடுவதும் சிறப்பாய் அமையும்.

திருமணம் நடக்க காத்திருப்போர் நாகாத்தம்மன் கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் உண்டாகும். ராகு கால துர்க்கை பூஜை சிறப்பான முறையில் திருமணம் நடைபெற சிறந்த இறைவழிபாடாக அமையும்.

Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai. For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/64?utm_source=facebookpage

குலதெய்வத்தை அறிவது எப்படி? வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களி...
07/03/2019

குலதெய்வத்தை அறிவது எப்படி?

வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு விசேஷங்களை முதலில் குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். Best Astrologer in chennai, Best Astrologer in Nanganallur, Astrologer in Madipakkam, Astrologer in Moovarasampet, Prasannam astrologer in chennai . For more info visit us at http://www.subhajothidam.com/latest-update/-/63?utm_source=facebookpage

Address

2/19, 8th Street Nehru Colony, Pazhavanthangal
Chennai
600114

Telephone

+917397337367

Website

Alerts

Be the first to know and let us send you an email when Om sri jai varahi subha jodhida maiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Om sri jai varahi subha jodhida maiyam:

Share