27/07/2025
🔴 அன்புடைய பின்தொடர்பர்களுக்கு,
இனிமேல், இந்த பக்கம் வெறும் பொழுதுபோக்கிற்கான தளமாக மட்டும் இல்லாது,
மனிதநேயம் பேசும் ஒரு சமூகக் குரலாகவும் செயல்படும்.
நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும்
பல மனதை உலுக்கும் நிகழ்வுகள்
குறிப்பாக பாலஸ்தீன்/காசாவில் நடைபெறும் இன அழிப்பு,
பெரும்பாலான உலகமே மௌனமாக புறக்கணிக்கும் நிலை உள்ளது.
பலத்த ஆதிக்கமும், பன்னாட்டு ஊடகக் கட்டுப்பாடும்
இந்தக் குற்றங்களை மறைத்து,
உலக கவனத்தைத் திசை திருப்ப முயலுகின்றன.
இது நம் நாட்டில் நடக்கவில்லை எனவே நமக்கு சம்பந்தமில்லை என்று இருப்பது / நினைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் மனிதநேயமற்ற புரிதல்.
🌍 அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள், பிறந்து சில நாட்களான சிசுக்கள் வரை,
இந்த அடக்குமுறையின் வாயிலாக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்
இவற்றைக் கண்டு மௌனமாக இருப்பது,
அந்நியாயத்தில் நாமும் பங்கேற்பதற்குச் சமம்.
🔊 எனவே, இனிமேல் இந்த பக்கம் —
✅ உண்மைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும்
✅ விழிப்புணர்வை ஏற்படுத்தும் தளமாகவும்
✅ மனிதநேயம் மீதான நம்பிக்கையை பரப்பும் ஒரு சமூகப் பொறுப்புடன் கூடிய குரலாகவும் செயல்படும்.