07/02/2018
கடந்த 2015முதல் ஆகஸ்ட் 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக மத்திய அரசு கொண்டாடி .வருகிறது.ஆகையால் 2016ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் தேசிய விருது காஞ்சிப்புரத்தை சேர்ந்த பெண் நெசவாளர் கே.மகேஸ்வரிக்கு கிடைத்துள்ளது.அதுபோல சிறந்த பட்டு சேலை விற்பனக்கான விருது, காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்க்கும்,சிறந்த நெசவளார்களுக்கான தேசிய தரச்சான்றிதழ்,மேலும் இரு நெசவாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு நாடு முழுவதும் ,21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த கே.மகேஸ்வரி,சிறந்த கைத்தறி நெசவாளருக்கான் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் சிறந்த வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு பி.பார்வதி(முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்) மற்றும் ஆர்.வரதன்(தனியார் பட்டு நெசவாளர்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,முதன் முறையாக கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருதிற்கு காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர்,த.கார்த்திகேயன் கூறியதாவது:இந்தாண்டு டேசிய விருது,எங்கு எப்போது வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்படவில்லை.இந்த விருதை பிரதமர் அல்லது ஜனாதிபதி தன் வழங்குவார்.சிறந்த கைத்தறி நெசவாளர் தேசிய விருது பெறும் பெண்ணுக்கு விருதுடன் 1.5லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறந்த வடிவமைப்புக்கான தேசிய தரச்சான்றிதழ் பெறுவோருக்கு,75000 ரூபாய் ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும் என் அவர் கூறினார்.
(குறிப்பு: சிறப்பம்சம்- நான்கு வகையான கோர்வு அமைப்புகளை பயன்படுத்தி,"ஈவ்னிங்,மார்னிங்"ரகத்தில் நெய்யப்பட்டுள்ளது. முந்தானையில்,மயில் சக்கரம் வடிவங்கள் நிரம்பியுள்ளன.காஞ்சிப்புரத்தின் பாரம்பரிய பட்டு சேலை ரகங்களில் மயில் மற்றும் சக்கர வடிவங்கள் முக்கியமானது.
மஸ்டர்டு பிரவுன்,அரக்கு நிறம் கொண்ட சேலை தன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சேலையில் மொக்கு,நட்சத்திரம்,கையில் முட்டிக்கு மேலே அனியப்படும் வங்கி போன்ற வடிவங்கள் உள்ளன.