TamilnaduOne

TamilnaduOne TamilnaduOne - Complete information portal

Information about tamilnadu education, healthcare, government and tourism.

தமிழ்நாடு பற்றிய கல்வி, சுகாதரம், அரசு, சுற்றுலா என அனைத்து தகவல்களை அளிக்கும் வண்ணம் இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் தரவும்.

அன்புடன்,
இணைய நிர்வாகி
தமிழ்நாடுஒன்.

07/02/2018

கடந்த 2015முதல் ஆகஸ்ட் 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக மத்திய அரசு கொண்டாடி .வருகிறது.ஆகையால் 2016ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் தேசிய விருது காஞ்சிப்புரத்தை சேர்ந்த பெண் நெசவாளர் கே.மகேஸ்வரிக்கு கிடைத்துள்ளது.அதுபோல சிறந்த பட்டு சேலை விற்பனக்கான விருது, காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்க்கும்,சிறந்த நெசவளார்களுக்கான தேசிய தரச்சான்றிதழ்,மேலும் இரு நெசவாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு நாடு முழுவதும் ,21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த கே.மகேஸ்வரி,சிற‌ந்த கைத்தறி நெசவாளருக்கான் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் சிறந்த வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு பி.பார்வதி(முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்) மற்றும் ஆர்.வரதன்(தனியார் பட்டு நெசவாளர்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,முதன் முறையாக கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருதிற்கு காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர்,த.கார்த்திகேயன் கூறியதாவது:இந்தாண்டு டேசிய விருது,எங்கு எப்போது வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்படவில்லை.இந்த விருதை பிரதமர் அல்லது ஜனாதிபதி தன் வழங்குவார்.சிறந்த கைத்தறி நெசவாளர் தேசிய விருது பெறும் பெண்ணுக்கு விருதுடன் 1.5லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறந்த வடிவமைப்புக்கான தேசிய தரச்சான்றிதழ் பெறுவோருக்கு,75000 ரூபாய் ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும் என் அவர் கூறினார்.
(குறிப்பு: சிறப்பம்சம்- நான்கு வகையான கோர்வு அமைப்புகளை பயன்படுத்தி,"ஈவ்னிங்,மார்னிங்"ரகத்தில் நெய்யப்பட்டுள்ளது. முந்தானையில்,மயில் சக்கரம் வடிவங்கள் நிரம்பியுள்ளன.காஞ்சிப்புரத்தின் பாரம்பரிய பட்டு சேலை ரகங்களில் மயில் மற்றும் சக்கர வடிவங்கள் முக்கியமானது.
மஸ்டர்டு பிரவுன்,அரக்கு நிறம் கொண்ட சேலை தன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சேலையில் மொக்கு,நட்சத்திரம்,கையில் முட்டிக்கு மேலே அனியப்படும் வங்கி போன்ற வடிவங்கள் உள்ளன.

20/12/2016
12/08/2016

Doctor tries to kill her father at private hospital in Kilpauk Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: ht...

முத்துப்பேட்டை : மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை முத்துப்பேட்டை பள்ளி மாணவி வடிவமைத்து சாதனை படைத்...
24/07/2016

முத்துப்பேட்டை : மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை முத்துப்பேட்டை பள்ளி மாணவி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா. இவர் எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும். இந்த கருவியை உருவாக்க பிளைவுட் ஷீட், போம் ஷீட். சைக்கிள் பிரிவீல், சைக்கிள் செயின், தேவைக்கேற்ற அளவுகளில் சிறிய, பெரிய நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன், அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு வயலில் மாணவி சரண்யா கருவியை இயக்கி காட்டினார். இதைப்பார்த்த ஆசிரியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மாணவியின் சாதனையை கண்டு வியந்து பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி சரண்யா கூறுகையில், உழவுத்தொழிலை விட்டு வெளியேறி வேறு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதிகமான பண விரயம். ஆட்கள் பற்றாக்குறை. அதிகமான கூலி, இயற்கை இடர்பாடுகள், எரிசக்தி மூலங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலையை அடைந்துள்ளது. எனவே எரிசக்தி பயன்பாடு இல்லாமல், குறைவான மனித சக்தியை பயன்படுத்தி, குறைவான பொருளாதார மதிப்பீட்டில் நாற்றுநட கருவி உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எங்கள் ஆசிரியர்களின் உதவியோடு இக்கருவியை வடிவமைத்துள்ளேன்.
கருவியை எப்படி உருவாக்கினேன் என்றால், பண்டைய காலத்தில் ஏர் கலப்பை போன்றவற்றை மரத்தில் செய்தே பயன்படுத்தினர்.
குறைவான செலவில் மரப்பலகையைக் கொண்டு ஒரு பெரிய சக்கரம் ஒன்றை செய்தேன். அதனை இரும்பு மையத்தைக்கொண்டு இணைத்தேன். பின்னர் சைக்கிள் செயின் உதவியோடு நான்கு அடி பிளைவுட் ஷீட்டில் இணைத்தேன். அதை மேலும் கீழும் இயங்குமாறு செய்தேன். மேலும், கீழும் இயங்கும் இடத்தில் நாற்றுகளை அடுக்கி வைக்க பிளைவுட்டைக் கொண்டு 120 டிகிரி கோண அளவில் பிளைவுட் சாய்வு ஒன்றை தயார் செய்தேன். முன்பக்க பெரிய சக்கரத்திற்கு முன்னால் படகு போன்ற அமைப்பில் பிளைவுட்டை கொண்டு அமைத்தேன். அதில் கயிறு கட்டி இழுப்பதற்கு கம்பி வளையம் அமைத்தேன். பிளைவுட் ஷீட்டின் அடிப்பகுதியிலும், சக்கரங்களிலும் சேறு பிடித்து கொள்ளாமல் இருக்க போம் ஷீட்டை பயன்படுத்தி ஒட்டி கருவியை உருவாக்கினேன். வழக்கமாக ஒரு விவசாயி 200 நாற்றுகள் நட அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் ஆகும். இந்த கருவியில் 10 நிமிடத்தில் நட்டு விடலாம் என்றார். மாணவியின் இந்த கருவி இன்று நன்னிலத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான “இன்ஸ்பெயர்” அவார்டு போட்டியில் இடம் பெறுகிறது.
- நன்றி தினகரன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் !!இடம்: ஊட்டி தேயிலைத் தோட்டம்படம் : https://flic.kr/p/6WCYWv
01/07/2016

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் !!

இடம்: ஊட்டி தேயிலைத் தோட்டம்
படம் : https://flic.kr/p/6WCYWv

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு ம...
30/06/2016

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?
திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.
சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.
சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்சதீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (02/08/16) நடைபெறவுள்ளது, பல இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் - செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டடரிலும் - மகாபலிபுரம் -கல்பாக்கம் - திருப்போருர் - மதுராந்தகம் -மேல்மருவத்துர் -ஆகிய புகழ்பெற்ற ஊர்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர்தான் நமது திருக்கழுக்குன்றம்.
நன்றி

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள் ...
14/04/2016

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள் ...

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர். அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்ப...
12/04/2016

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர். அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர். ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது. இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர். நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது. விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று தின்றது. இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன் அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து தின்றது. இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத்தொடங்கினர். அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான குள்ளநரியையும் கூட்டிவந்து ஆட்டினை அடித்து சாப்பிட ஆரம்பித்தன. இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து, சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த ஓநாய் தன் குட்டி, அதனுடைய குட்டிகள் என எல்லாம் சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவச்யிகளையும் கடித்துக்குதற ஆரம்பித்தன. ஓநாய்களே ஆட்டை எடுத்துக்கொண்டால் நாம் என்ன செய்வது என யேசித்த நரி தந்திரமாக ஒரு காரியம் செய்தது. விவசாயிகளிடம் தாமக சென்று நான் திருந்தி விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்திவிட்டேன், எனக்கு என யாருமே இல்லை,நான் இங்கு பட்டியிலேயே இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி அடியுங்கள் என்றது. இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன் பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத்தொடங்கினர்.
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்றபசியோடு காத்திருக்கும் ஓநாய்குடும்பம் ஒருபக்கம், உண்டு களைத்து ஓய்விலிருக்கும் நரியும், தோழியும் மறுபக்கம். என்ன செய்வான் விவசாயி மீண்டும் முட்டாள் தனமாக நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா? அல்லது ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்போகிறான? ..

மே 19ல் பார்ப்போம்.

"துர்(ன்)முகி " தமிழ்ப்புத்தாண்டு!----------------------------14/4/2016 வியாழக்கிழமை பிறக்கிறது."துர்முகி" என்ற பெயர் தா...
11/04/2016

"துர்(ன்)முகி " தமிழ்ப்புத்தாண்டு!
----------------------------

14/4/2016 வியாழக்கிழமை பிறக்கிறது.

"துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முகி புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை கூறுகிறேன்.

"துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஶ்ரீஹயக்ரீவர். ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான்.

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஶ்ரீஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு "துர்முகி" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.

நன்றி.

Address

Eldams Road
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when TamilnaduOne posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share