24/07/2026
தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் (TNVS) மாநிலத் தலைவர் திரு. N. செந்தில்குமார் அவர்கள் தலைமையில், "1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் பணிக்கான துவக்க விழா" மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த மாபெரும் இணைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முன்னாள் அமைச்சர், தமிழக பாஜக மாநிலத் தலைவர், மாண்புமிகு திரு. நயினார் நாகேந்திரன் ஐயா அவர்கள், புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் இணைப்பு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வணிகர்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தனது எழுச்சிமிகு சிறப்புரையை ஆற்றினார்.
மேலும், தமிழக பாஜக நேரிடைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. அரவிந்த் மேனன் அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் மாண்புமிகு திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. தாமரை ஜெகதீசன் அவர்கள், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்கள், மற்றும் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள், வணிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த மாபெரும் நிகழ்வு, தமிழகம் முழுவதும் 1 கோடி வணிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய பயணத்தின் தொடக்கமாகவும், வணிகர்களின் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் தேசிய வளர்ச்சியை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகவும் அமைந்தது.
#தமிழ்நாடுவணிகர்களின்சங்கமம்
Send a message to learn more