22/08/2025
இன்னும் கொள்கை இருக்கா கோட்பாடு இருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்க. அரசியல் கட்சிக்கு கொள்கை வேணும் அப்படிங்கறதே பெரிய க்ரிஞ்ச் தான் என்னை பொறுத்தவரை.
ஏன் தளபதி விஜயோட எண்ணமும் கூட இதுவா தான் இருக்கும்.
கொள்கை தலைவர்கள் ன்னு அஞ்சு பேரை அறிவிச்சது கூட ஒரு பார்மாலிட்டிக்காக தானே தவிர ரொம்ப விரும்பி அறிவிச்சதா இருக்காது. ஏன்னா தளபதியை பொறுத்தவரை நல்ல ஆட்சி கொடுக்கனும். நிர்வாகம் நேர்மையா இருக்கனும், திட்டங்கள் மக்களுக்கானதா இருக்கனும். இவ்ளோ தான். இதை மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. இன்னும் புரியாதவங்களுக்கு புரிய வைக்கனும். இதை தாண்டி எந்த கொள்கையும் அரசியலுக்கு தேவையில்லாதது தான்.
கொள்கை கோட்பாடு சித்தாந்தம் அப்படிங்கிறதுலாம் வெறும் ட்ராமா. அந்த அரசியலை தளபதி விரும்பவில்லை. தளபதி விஜய் பேசின எல்லா மேடை பேச்சையும் கேட்டிருந்தா இது நல்லாவே புரியும். காலம் காலமா ஆட்சி அதிகாரத்துல இருக்குற எந்த கட்சியுமே அதன் கொள்கை வழி நிக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இருக்காது. கொள்கை ஒன்னா இருக்கும். செயல்பாடு வேறயா இருக்கும்.
ஏன் இப்போதைய திராவிட கொள்கையை பாத்தாலே புரியும். திமுக அமைச்சர் வீட்ல ரெய்டு நடக்குது, அமைச்சரோட சாதிக்காரங்க தேவர் பேரவை சார்பா அதுக்கு கண்டன போஸ்டர் ஒட்டுராங்க. இன்னொரு அமைச்சர் ரெட்டி சாதி சங்க விழாவுக்கு தலைமை தாங்குறார். ஏன் நம்ம கனிமொழி அக்கா நாடார் சாதி மாநாட்டுல கலந்து ஆதரவு கொடுக்குறாங்க. இதெல்லாம் திராவிட கொள்கைல தான் வருமா..
கொள்கை கோட்பாடு சித்தாந்தம் எல்லாம் மலையேறி போய் 50வருசம் ஆச்சு. அதுக்காக நடிகராகவோ பேமஸ் ஆளாகவோ இருந்தால் அரசியல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டால் சத்தியமா இல்ல தான். ஆனா தளபதி விஜய் கிட்ட Face Value மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒரு விசயம் இருக்குறதால தான் இவ்ளோ கூட்டம் கூடுது.
இது அரசியல் மாநாடுன்னு சொல்லியும் கூடுற கூட்டம். தளபதியை அரசியல் தலைவரா ஏத்துக்கிட்டு அவர் தலைமைல கூடுற கூட்டம். அரசியல் மாற்றத்தை நோக்கி இந்த கூட்டம் முன்னேறிகிட்டு இருக்கு. அலட்சியமா நினைக்கிறவங்களுக்கு தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்லும். Waiting... 😊
Credit Aswin