Astrologer Shakthi Dasan

Astrologer Shakthi Dasan SHAKTHI DASAN Astro Service have been in this industry for the past 28 years.Numerologists, Nadi Ast

பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:
எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
எனக்கு காதல் திருமனம் நடக்குமா?
எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா

?
நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
எனது நோய் எப்பொழுது தீரும்?
மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
எனது பெயர் நியுமராலஜி படி இருக்கின்றதா?
எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?
என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
இப்படி உங்கள் கேள்விகள் எதுவாயினும், நம்பிக்கையுடன் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடனும், வாழ்த்துக்களுடனும்,
ஜோதிடர் ஷக்தி தாசன்
7010893263

*சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யலாம்...? என்ன செய்யக்கூடாது.... ?* *🔯 கிரகணம் என்பது வானில் தோன்றக் கூடிய ஒரு அதிசய ...
25/10/2022

*சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யலாம்...? என்ன செய்யக்கூடாது.... ?*


*🔯 கிரகணம் என்பது வானில் தோன்றக் கூடிய ஒரு அதிசய நிகழ்வு ஆகும். இதனை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகையான கிரகணங்களாக நாம் சொல்கிறோம்.*

🔯 சூரியன், சந்திரன், பூமி இவை மூன்று ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் நாம் கிரகண காலம் என்கிறோம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வை தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம்.

*🔯2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ம் தேதி வருகிறது. அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் பகல் 2.28 மணிக்கு துவங்கி, மாலை 6.32 வரை கிரகணம் உள்ளது.*

🔯 இதில் 4.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

*🔯கிரகண நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என முன்னோர்கள் நமக்கு வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பல அறிவியல் காரணங்களும் உண்டு.*

*🔯 என்ன செய்ய வேண்டும்*

🔯கிரகண நேரத்தில் எல்லா பொருட்களின் மீதும் தர்ப்பையை போட்டு வைப்பார்கள். தர்ப்பைக்கு எல்லாவிதமான தீயசக்திகளிடம் இருந்து நம்மை காக்க கூடிய தன்மை உண்டு.

🔯 தர்ப்பை சாதாரண புல் கிடையாது. தர்ப்பை காட்டில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நுழையாது. தர்ப்பை விஷ முறிவாக செயல்படக் கூடியது. அதனால் குடிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில், உணவுப் பொருட்கள் வைக்கக் கூடிய குளிர்சாதனப் பெட்டி, சாப்பாட்டு பொருட்கள் வைக்கக் கூடிய பாத்திரங்களின் மீது தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.*

*🔯செய்யக் கூடாதது*

🔯சாப்பாட்டு பொருட்களில் கிரகணத்தின் போது விஷத்தன்மை கலந்து விடும் என்பதால் தான் கிரகண நேரத்திலும், கிரகண நேரத்தில் வீட்டில் வைக்கக் கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

🔯இதனால் கிரக நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடனேயே தர்ப்பையை வைத்திருப்பது அவசியம்.

*🔯கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது*

🔯பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாற்றப்படும். கிரகணம் என்றாலே குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

🔯அப்படி வெளியில் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டு, இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்லலாம்.

🔯 கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழ ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது.

*🔯 கிரகண நேரத்தில் தூங்கலாமா...?*

🔯கிரகண நேரத்தில் அனைவருமே பயணத்தை தவிர்த்து, நாம் இருக்கும் இடத்திலேயே மிக எளிமையாக, இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.*

🔯மந்திர உபதேசம் வாங்கியவர்கள் மந்திர ஜபமும், மந்திர உபதேசம் பெறாதவர்கள் சாதாரணமாக இறை வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.*

🔯 கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் தூங்கக் கூடாது என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருந்தால் கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தூங்குவதில் தவறில்லை.

*🔯விஷமாகும் உணவு*

வீடுகளில் உணவுப் பொருட்கள் மீதம் ஆகாமல் இருக்கும் வகையில் சமைக்க திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பால், தயிர் போன்ற பொருட்களில் தர்ப்பை போட்டு வைக்க ஏற்கனவே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

🔯செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்பது அனைத்து கிரகணத்திற்கும் ஒன்று தான். நேரம் மட்டுமே வேறுபடும்.

🔯 கிரகணத்திற்கு முன்பும் குளிக்க வேண்டும். கிரகணத்திற்கு பிறகும் குளிக்க வேண்டும்.

*🔯கிரகண நேரம் ஆகாததா....?*

🔯அறிவியல் ரீதியாக கிரகண காலம் ஆகாதது என சொல்லப்பட்டாலும், வழிபாட்டிற்கு மிக உகந்த காலம் இந்த கிரகண காலம் தான்.

*🔯எந்த வழிபாட்டை இந்த சமயத்தில் நாம் மேற்கொண்டாலும் அதில் உயர்வான பலன் கிடைக்கும்.*

*🔯 தர்ப்பணம், தானம் போன்றவை இந்த காலத்தில் செய்யலாம். பொதுவாகவே கிரகண காலத்தில் தெய்வங்கள் ஆற்றல் இழந்து காணப்படும். அதனால் தான் கிரகண காலத்தில் கோவில் நடை சாற்றப்படுகிறது என்ற கூற்று ஒன்று உண்டு. ஆனால் உண்மையில், உலகில் தீய சக்திகளை அழிக்க இறைவன், கதவடைத்து செய்யக் கூடிய அதீத உச்சநிலையில் இருப்பதை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக தான் கோவில்களில் கதவுகள் மூடப்படுகிறது. இதனால் தான் கிரகணம் முடிந்த பிறகு அபிஷேகம் செய்து குளிர வைத்து, சாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது.*

*🔯தோஷ நிவர்த்தி பரிகாரம்*

🔯கிரகண காலத்தில் நமக்கு தெரிந்த மந்திரம் எதுவாக இருந்தாலும் அதை உச்சாடம் செய்தால் அதன் பலன் பல ஆயிரம் மடங்காக நமக்கு கிடைக்கும்.

🔯கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட்டு, புதிதாக சமைத்து, அந்த உணவுகளை சாப்பிடலாம்.*

*🔯கிரகண காலத்தில் சில ராசிகள், நட்சத்திரங்களுக்கு தோஷம் ஏற்படும் என சொல்வார்கள். இது கிரகணத்திற்கு கிரகணம் மாறுபடும். இந்த தோஷத்தால் பயப்பட தேவையில்லை. கிரகணத்தின் போது தோஷம் ஏற்படுவதாக சொல்லப்படும் ராசி, நட்சத்திரக்காரர்கள் சூரியனுக்கு உகந்த கோதுமை, கொள்ளு, உளுந்து, மட்டையுடன் இருக்கும் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை தானமாக கொடுத்தாலே இந்த தோஷம் நீங்கி விடும்.*

*🔯கிரகணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?*

*🔯 கிரகணம் முடிந்து குளிக்கும் போது அந்த தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பை போட்டு குளித்தால், நமக்கே தெரியாமல் சூரிய ஒளி நம் மீது பட்டிருந்தாலும் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி, தீய சக்திகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.*

*🔯 கல் உப்பு, நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி கொண்டது. இதனால் தான் மங்கல நிகழ்ச்சிகளின் போது கல் உப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.*

03/05/2022

🌹🌿அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்..!

🌹 🌿 1.பகவான்o பரசுராமர் அவதரித்த நாள்..!

🌹 🌿 2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!

🌹 🌿 3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!

🌹 🌿 4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!

🌹 🌿 5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!

🌹 🌿 6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!

🌹 🌿 7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!

🌹 🌿 8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!

🌹 🌿 9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.

🌹 🌿 இந்த நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் யார் கண்ணிலும் தென்படாமல் மறைந்து விட வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள்..

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா ? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண்...
15/06/2021

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா ?

பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?

அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்.

சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.

அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

சனித்திசையும், ஏழரைச் சனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து!...
16/03/2021

சனித்திசையும், ஏழரைச் சனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து!

ஆனால் இராமா இராமா என்று சொன்னால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்துவிடுவான் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று இராமாயணத்தில் நடந்தது.

✡️ஸ்ரீ இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த சமயம் இலட்சுமணன் மயங்கிவிட்டான். அப்போது லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார். அங்கிருந்த அனுமன் ஸ்ரீஇராமனிடம் ”நான் சென்று மூலிகைகளைக் கொண்டு வருகிறேன்” என்று கூறினான். ஸ்ரீஇராமனும் அனுமனை வாழ்த்தி ”வெற்றி உண்டாகட்டும்.. கடும் இக்கட்டான சூழலில் என்னை நினைவில் வைத்துக்கொள்” என்றார். அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலையை நோக்கி பயணப்பட் டான்.

✡️அப்போது இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உரியது. அவற்றிலும்
நவக்கிரகங்களில் பெரியவனான சனிபகவான் தான் அதைச் செய்ய முடியும் என்று இராவணனுக்கு அறிவுறுத்தினார்கள். இராவணன் சனிபகவானை அழைத்து மூலிகையை எடுத்துச் செல்லாமல் அனுமனைத் தடுத்து நிறுத்துவது உன்னு டைய பொறுப்பு என்று கட்டளையிட்டான்.

✡️தர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும் சனிபகவான் இராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச்சென்றார். அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தார். நெடுநேரம் ஆகியும் மூலிகையைக் கண்டறிய இயலாததால் அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்தார். சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி லட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனுமனை வழியில் தடுத்தார்
சனி பகவான்.

✡️வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு அதிக வேலையிருக்கிறது” என்று அனுமன் சனிபகவானை எச்சரிக்கை செய்தார். ஆனால் அனுமன் என்ன சொல்லியும் கேளாமல் சனி பகவான் அனுமனைத் தடுக்கவே
சனியை கீழேதள்ளி தன் பலம் அனைத்தையும் கொண்டு சனிபகவானை நசுக்கினார் அனுமன். தாங்க முடியாத வலியால் சனி பகவான் கதறினார். தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் கெஞ்சினார்.

✡️அனுமன் தான்
இராமபக்தனாயிற்றே.
அதனால் சனிபகவான் “இராமா.. இராமா” என்று அழைத்தார். அனுமனின் பிடி சிறிது சிறிதாக இறங்கிற்று...
ஸ்ரீ இராமன்நாமத்தால் தப்பி பிழைத்தாய். உன்னால் பீடிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தும்போது
✡️ஸ்ரீஇராமனின்திருநாமத்தைச்சொல்பவர்களைத் தொல்லை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து சனிபகவானின் சம்மதம் பெற்றபிறகே சனிபகவானை விடுவித்தார்.
ஆஞ்சநேயன் சனிபகவானை காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்திருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவில். சனிதிசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சனிபகவானின் தொல்லையிலிருந்து மீளலாம்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஓம் நமச்சிவாய சிவசிவ அன்பே சிவம்..

 #குளிகைஎன்பதுநல்லநேரமா_கெட்டநேரமாராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன?என்று உங்களுக்கு தெரியும்.ஆனால் குளிகை நேரம் என்றால...
15/03/2021

#குளிகைஎன்பதுநல்லநேரமா_கெட்டநேரமா

ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன?
என்று உங்களுக்கு தெரியும்.

ஆனால் குளிகை நேரம் என்றால் என்ன?-நம்மில் பலருக்குத் தெரியாது.
அதற்கு ஒரு கதையும் உண்டு.

இலங்கை வேந்தன் இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான்.

அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும்.

எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழும் என்பதை கணித்து சொல்லுங்கள்.

இது பேராசையல்ல குருவே, ஒரு தந்தையின் நியாயமான ஆசை“

இராவணா… உன் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாள பிறக்க வேண்டும் என்று எண்ணும் போது,

நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன்.

துயரத்தையும் தோல்விகளையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தாளும் வல்லமை கொண்டவன்.

பிறக்க போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல்களை கொண்டவனாக திகழவேண்டும் என்று நீ எதிர்பார்ப்பில் தவறோன்றும் இல்லை இராவணா.

நானும் நீ சொல்ல வந்ததை நீ சொல்லாமலே ஞானத்தால் அறிந்தேன்.

குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தை கணித்துக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனால்… என்று இழுத்தார் சுக்கிராச்சாரியார். என்ன தயக்கம்.?

ஆனால்…“ என்கிற வார்த்தையை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தயக்கமின்றி சொல்லுங்கள். என்ன பிரச்சனை?
என்றான் இராவணன்.

நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே இராசி கட்டத்தில் வந்தால் நல்லது.

எப்படி பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு நேரம் அமையாமல் இருக்கிறது.

நானும் கணித்து கணித்து பார்க்கிறேன், யோசித்தே என் தலைவெடித்துவிடும் போல் இருக்கிறது.

சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன? என்று கூட தோன்றுகிறது புன்னகைத்தவாரே சொன்னார் சுக்கிராச்சாரியார்.

வேடிக்கையாக சொன்ன வார்த்தை வினையாகிப் போனது.

நீங்கள் சொல்வதும் சரிதான். நவகிரகங்களையும் ஒன்றாக சிறையில் தள்ளினால்தான், நான் நினைத்தது நடக்கும்.

சரியான நேரத்தில் ஆலோசனை கூறிய தங்களுக்கு நன்றி. ஆனால் நவகிரகங்களில் நீங்களும் ஒருவராக இருப்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன் என்றான்
இராவணன்.

சுக்கிரன் என்று அழைக்கப்படும் சுக்கிராச்சாரியாரையும் சிறையில் தள்ளினான். நவகிரகங்களையும் ஒரே சிறையில்
அடைத்தான் இராவணன். இந்த நிலைக்கு காரணமே சுக்கிராச்சாரியார்தான் என்பதால் சுக்கிரனை நவகிரகங்களும் திட்டி தீர்த்தன.

சிவனையே பாதாள லோகத்தில் வாழ செய்தவன் நான். என்னை இராவணன் இந்த சிறையில் தள்ளிவிட்டான்.

எல்லாம் உங்களால்தான். உங்களை #அசுரகுரு என்று அழைப்பது சரியாகத்தான் இருக்கிறது.

திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா?

அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே… தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் இராவணன்.

அவனிடம் போயா நம் பெருமைகளை சொல்வது?

அறிவு களஞ்சியமய்யா நீ“ என்றார் சனிஸ்வரர்.

நான் என்னவோ சொகுஸாக இருப்பதை போலவும், நீங்கள்தான் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசிக்கொண்டுயிருக்கிறீர்கள்.?

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் இராவணன் என்பதை சற்று மறந்து, அவனுக்கே ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன். என்றார் சுக்கிரன்.

மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல்தான் என்று வைத்தியர்கள் சொல்வதாக சிறைக்காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்.

சுக்கிரசாரியாரே… உங்களுக்கு தெரியாதா? எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால் அதை #யுத்தகிரகம் என்பார்கள்.

அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனையை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்… மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள்.

அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் இராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும் என்றார் சனிஸ்வரர்.

அசுர தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?என்றார் குரு பகவான்.

புதிதாக ஒரு உயிரை உண்டாக்கினால், இராவணனின் வாரிசு பிழைக்கும்“ என்று கூறி கொண்டு தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார் சனிஸ்வர பகவான்.

அந்த குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார் சனிஸ்வரர்.

ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்நது யத்த கிரகமாக இருந்தாலும், குளிகன் பிறந்ததால், இனி இந்த மணிநேரம் பிரச்சனையில்லை.

வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், இந்த குழந்தை பிறந்த இதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.

இனி பயம் இல்லை மண்டோதரிக்கு என்றார் சனிஸ்வரர்.

நமக்கும்தான் என்றார் சுக்கிரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும்.
கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும்.

இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்
இது தான் குளிகை கதை.

2021 ஆம் ஆண்டில் சனி பகவான் சூரிய பகவான் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, ஜனவரி 22 ஆம் தேதி சந்திரன் ஆளும் நட்...
10/02/2021

2021 ஆம் ஆண்டில் சனி பகவான் சூரிய பகவான் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, ஜனவரி 22 ஆம் தேதி சந்திரன் ஆளும் நட்சத்திரமான திருவோணத்திற்கு நகர்ந்துள்ளார்.

இதனால் திருவோணம் நட்சத்திரத்தில் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் சனி, ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டில் சனி வெவ்வேறு நட்சத்திரங்களுக்கு மாறும் போது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை கெடுக்கப்போகின்றார் என இங்கு பார்ப்போம்.

மேஷம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, சனி பகவான் மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள்.

வருடத்தின் முதல் பாதியில் சூரியன் ஆளும் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், தந்தையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தந்தைக்கும் உங்களுக்குமான உறவை பாதிக்கும்.

அதோடு உங்கள் தந்தையின் ஆரோக்கியமும் குறையக்கூடும். உங்களால் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட முடியாமல் போகும்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பிறகு, சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்திற்கு சனி செல்வதால், தந்தையுடனான உறவு மேம்படும். ஆனால் அவரது உடல்நலத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

அவர் அசௌகரியம் மற்றும் கால் வலி, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். தொழில் ரீதியாக, உங்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மேலும் சமூகத்தில் உங்கள் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும்.

ரிஷபம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன்பு வரை, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கலாம். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு இனிமையாகவும், ஆனந்தமாகவும் இருந்திருக்கலாம்.

சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கண்டிருப்பீர்கள். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருந்திருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் நற்செய்தியைக் கேட்டிருக்கலாம்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், ஒவ்வொரு பணியிலும் உங்களின் கடின உழைப்பின் நற்பலனைப் பெறுவீர்கள்.

உங்களின் நிதி நிலைமை மேம்படும். இருப்பினும் இக்காலம் உங்களின் உடன்பிறப்புகளுக்கு நல்லதல்ல. அவர்கள் வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்
2021 சனி பெயர்ச்சியின் படி, மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருப்பார். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் சனி இருந்ததால், இனிமையான பலன்களைப் பெற கடினமாக உழைத்திருப்பீர்கள்.

உங்களின் இளைய உடன்பிறப்புக்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இக்காலத்தில் பல்வேறு தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டிருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆன்மீகத்தின் மீது உங்கள் விருப்பத்தை அமைத்து, உங்கள் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்யுங்கள்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின் திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், உங்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். உங்களின் மன அழுத்த அளவு தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் உங்களால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம்.

பண இழப்பு கூற ஏற்படலாம் மற்றும் உங்களின் மாமியார் தரப்பில் இருந்து சில பிரச்சனைகள் எழக்கூடும். தேவையற்ற பயணங்கள் தீங்கு விளைவிக்கும்.

மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில் எதிர்மறை எண்ணங்களை வெல்ல விடாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்கள் ஏற்படக்கூடும்.

கடகம்
2021 சனி பெயர்ச்சியின் படி, ஆண்டின் ஆரம்பத்தில் முடிவு வரை சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருக்கப் போகிறார். உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், உங்கள் வாழ்க்கை துணை உடல்நலம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மாமியார் உங்களுக்கு உதவ வருவார்கள்.

வணிகர்களுக்கு நல்ல நேரமாக இருந்திருக்கும். கூட்டாண்மைடன் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஆனால் ஜனவரி 22 அம் தேதிக்கு பின், திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்ற சனியால், மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்த மன அழுத்தம் மற்றும் தகராறுகள் நீங்கி, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் வளரும்.

வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும். மேலும், நீண்ட தூர பயணங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நன்மை பயக்கும் முடிவுகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்
2021 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு முழுவதும் சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் இருக்கப் போகிறார்.

உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். உங்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் உங்களை வீழ்த்த திட்டங்களைத் தீட்டியிருப்பார்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் அவர்களை வெற்றி பெறுவீர்கள்.

மேலும் இக்காலத்தில் கடனுக்காக வங்கியின் ஒப்புதலைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு அல்லது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். நிதி நிலைமை கூட பலவீனமாக இருந்திருக்கும்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

இதனால் உங்கள் பணச் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். ஆண்டு முழுவதும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக, இருமல், சளி போன்றவற்றால் கஷ்டப்படுவீர்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வர வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மொத்தத்தில் இந்த வருடம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இல்லை. உங்கள் செல்வத்தை குவிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். இருப்பினும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

கன்னி
2021 சனிப் பெயர்ச்சியின் படி, கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இருப்பார். ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், உங்கள் பிள்ளைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உருவாகியிருக்கலாம்.

மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்தித்திருப்பார்கள். இதனால் மன ரீதியாக சோர்ந்திருப்பார்கள். காதலித்தவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும்.

ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், சனி திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், வருமானத்தில் உயர்வு இருக்கும். பல்வேறு மூலங்களில் இருந்து செல்வம் கிட்டும்.

திருமணமானவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் தடைகளை சந்திக்க நேரிடும் இத்தகைய சூழ்நிலையில், புத்தியைப் பயன்படுத்தி, கடினமாக உழைத்தால் நன்மைகளைப் பெறலாம்.

மொத்தத்தில், காதலர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும் சனியின் செல்வாக்கினால், மாணவர்கள் முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

துலாம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், சொத்து மற்றும் நிலத்தில் முதலீடு செய்திருப்பீர்கள்.

வீட்டை பழுது பார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் பணம் செலவழித்திருப்பீர்கள். இருப்பினும் உங்களின் நிதி வலுவாகவே இருந்திருக்கும்.

உங்கள் தாயார் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பார். பணியிடத்தில், உங்கள் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே நிறைவேற்றி இருப்பீர்கள்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின் சனி திருவோணம் நட்சத்திரத்திற்கு மாறியுள்ளதால், பணியிடத்தில் முன்பை விட சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க, தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் பெற்றோர் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். முந்தைய பணியை முடிக்க கணிசமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மொத்தத்தில், சனி பெயர்ச்சியின் தாக்கம் இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களை விட உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இது உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

விருச்சிகம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற்றிருப்பீர்கள்.

பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். உடன்பிறப்புகளுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அதே சமயம் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். வணிகத்தைப் பொறுத்தவரை, வணிகர்கள் பேரின்பத்தையும், ஆறுதலையும் அனுபவித்திருப்பார்கள்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றதால், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் முந்தைய பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியம் பலவீனமாகவே இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை மன அழுத்தமிக்கமாக இருக்கும்.

மொத்தத்தில், இந்த ஆண்டு வழக்கத்தை விட உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி நெருக்கடியும் தீர்க்கப்படும்.

தனுசு
2021 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியின் படி, தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உத்திராடம் நட்சத்தில் இருந்ததால், அரசுத் துறையில் இருந்து நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்வில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், இக்காலத்தில் ஓரளவு நிம்மதியாக இருந்திருப்பீர்கள். இளைய உடன்பிறப்புக்களின் ஆதரவு கிடைத்திருக்கும்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றதால், திடீர் செல்வத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். நீங்கள் தந்தை வழி சொத்தை வாங்குவீர்கள். ஆனால் உங்கள் தந்தையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

நீங்கள் எந்த ஒரு திட்டத்தையும் அல்லது பணியையும் மேற்கொள்ளும் முன் நன்கு சிந்தித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் மதிப்பீடு செய்ய வேண்டும். உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் எழக்கூடும்.

மொத்தத்தில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இது ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற உங்களுக்கு உதவும். இருப்பினும் மன அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும்.

மகரம்
2021 சனி பெயர்ச்சியின் படி, சொந்த வீடான மகர ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார்.

அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், நீங்கள் உங்கள் தந்தையின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள்.

இக்காலத்தில் திடீர் செல்வத்தை அடைவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண வாழ்க்கையில் சில பதற்றம் இருக்கலாம்.

ஜனவரி 22 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி நுழைந்த பின், உங்கள் திருமண வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

இருந்தபோதிலும், உறவில் நெருக்கம் அப்படியே இருக்கும். உணர்ச்சிகள் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும். ஆகவே உங்களை நன்கு கவனித்துக் கொள்வது முக்கியம். இக்காலத்தில் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்படி மேற்கொள்ளும் பயணம் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.

மொத்தத்தில், இந்த சனி பெயர்ச்சியால் பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வைக்கும். திருமண வாழ்வில் நிலையான பிரச்சனைகள் இருக்கும்.

கும்பம்
2021 சனிப் பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனிபகவான் இருக்கப் போகிறார்.

அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், திருமண வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.

இதனால் செலவுகள் அதிகமாக இருந்திருக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்திருந்தால், நேரம் மிகவும் சாதகமானது.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும்.

செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாகத் தெரிகிறது. உங்கள் எதிரிகளிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மொத்தத்தில், இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு பாதகமானதாக இருக்கும். மேலும் ஆரோக்கியம் மற்றும் எதிரிகளின் அடிப்படையில், இந்த ஆண்டு மிகவும் கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மீனம்
2021 சனி பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் இருக்கப் போகிறார். அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருப்பதால், உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற முன்பை விட அதிகமாக முயற்சிப்பீர்கள்.

ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி செல்வதால், ​​உங்கள் புத்திசாலித்தனத்திலும், ஞானத்திலும் ஒரு உயர்வு இருக்கும்.

இது உங்களை பலவற்றில் வெற்றிபெறச் செய்யும். காதல் வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனை பெறுவீர்கள் மற்றும் நிதி ரீதியாக பயனடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் முன்பை விட சிறப்பாக இருக்கும்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள -

: +919790503075

உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்?ராசிகள் மொத்தம் 12.   ஒவ்வொரு மனிதரும் இந்த 12 ராசிக்குள் அடக்கம்.ஒவ்வொ...
12/06/2020

உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்?

ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு மனிதரும் இந்த 12 ராசிக்குள் அடக்கம்.

ஒவ்வொரு ராசி காரர்களின் ஆசைகள் விருப்பங்கள் வித்தியாசப்படும்.

உதாரனத்திற்க்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களை எடுத்து கொண்டீர்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உதாரனத்திற்க்கு சாப்பாட்டு விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள். ஒருவருக்கு இட்லி மிகவும் பிடிக்கும். ஒருவருக்கு இட்லி பிடிக்காது சப்பாத்திதான் பிடிக்கும். ஒருவருக்கு சாம்பார்தான் பிடிக்கும். ஒருவருக்கு சாம்பார் என்றால் பிடிக்காது. புளி குழம்புதான் பிடிக்கும். கோழி என்றால் ஒருவருக்கு பிடிக்காது. ஆட்டு கறி பிடிக்கும். மீன் பிடிக்காது. நண்டு பிடிக்கும். கத்தரிக்காய் பிடிக்காது. முருங்கை பிடிக்கும். வெண்டிக்காய் பிடிக்காது.

ஒருவருக்கு தொலை காட்சியில் வரும் குறிப்பிட்ட பாடகரின் பாடல்களை பிடிக்கும் அவர் நடித்த சினிமா படங்களை பிடிக்கும் ஒரு சிலருக்கு அந்த நடிகரின் படத்தை பார்த்தாலோ பாட்டை கேட்டாலோ அய்யா சாமி ஆளை விடு என்று ஓடி விடுவார்கள்.

ஒருவருக்கு இன்ஜினியரிங் படிப்பு பிடிக்கும், ஒருவருக்கு இன்ஜினியரிங் படிப்பு என்றாலே கசக்கும் ஆனால் வணிக வியல் படிப்பு பிடிக்கும் (அதாவது
commerce போன்ற படிப்புகள்) ஒருவருக்கு Computer சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்கும், கணக்கு சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்காது. ஒருவருக்கு சட்டம் சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்கும் மற்றொருவருக்கு சட்ட படிப்பு என்றாலே தலை தெறித்து ஓடுவார்கள்.

அது ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்?

இதில் ஒன்றும் வியப்பில்லை. எல்லாம் அவர்கள் ஜாதக அமைப்பு தான். ஜாதகத்தில் அவர்கள் பிறந்த நேரத்தில் அமர்ந்த கிரகங்களின் அமைப்பு படிதான் எந்த விஷயத்தை எடுத்து கொண்டாலும் சரி அது சாப்பாட்டு விசயமாக இருந்தாலும் சரி, அது படிக்கும் விசயமாக இருந்தாலும் சரி, பொழுதை போக்கும் விசயமாக இருந்தாலும் சரி, அவர்கள் அதில் மட்டும்தான் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் செய்யும் மட்டும் தொழில் மட்டும் விதி விலக்கல்ல. அவருக்கு விருப்பமான தொழிலை செய்யும்போது அவரையும் அறியாமல் உற்சாகமாக அந்த தொழிலை செய்வார். அந்த தொழில் உள்ள தொழில் நுணுக்கங்களை கண்டறிந்து அதில் வெற்றியும் அடைவார்.

ஒருவர் தான் செய்யும் தொழிலும் வெற்றி அடைவதற்கு அவர் ஜாதகத்தில் அமைந்த கிரகங்கள் தான் காரணம். கிரகங்களின் வலுவான அடிப்படையை வைத்து ஒருவர் தன்னுடைய தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் நிச்சயமாக தான் செய்யும் தொழில் வெற்றியடைவார். பணம் புகழ் அணைத்தையும் பெறுவார்.

இந்த விசயத்தை சிலர் தெரிந்து அந்த தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி அடைகின்றனர். சிலர் தெரிந்தும் தெரியாமலும் பிடிக்காத அல்லது அவர்களுக்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

உங்களுக்கு எல்லாம் ஈசியாக புரிந்து கொள்வதற்கு அறிந்த ஒரு விஷயத்தை
சொல்லுகிறேன். தமிழ் சினிமா உலகில் superstar என்று சொல்லப்படும் திரு.ரஜினிகாந்த் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு பேருந்தில் கண்டக்டர் வேலை செய்து கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு கலை துறையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை.

அதை சரியாக உணர்ந்து அவரோ அல்லது மற்றவர்களால் தூண்டப்பட்டு தமிழகத்திற்கு வந்து நடிக்க தொடங்கினார். பல தோல்விகளையும் அவமானங்களையும் சகித்துக்கொண்டு படி படியாக முன்னேறி இன்று super star என்ற அந்தஸ்தில் இருக்கின்றார்.

அவர் பார்த்த தொழிலும் இன்று அவர் ஈடுபட்டு புகழ் பெற்று
விளங்குகிற தொழிலுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவர் கண்டக்டர் ஆகவே இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழையும் வசதியையும் அடைந்திருப்பாரா?
நிச்சயமாக அடைந்திருக்க மாட்டார்.

ஆனால் நிச்சயமாக அவருடைய ஜாதகத்தில் கலை துறையில் வெற்றி புகழ் பெறுவதற்கு உண்டான அமைப்பு இருக்கும். சரியான தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்தார் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார்.

அதுபோல் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் எந்த தொழில் அவருக்கு வெற்றியை தரும் என்ற அமைப்பை கண்டுபிடித்து அதில் ஈடுபட்டார்கள்
என்றால் நிச்சயமாக வெற்றி, புகழ், பணம் அனைத்தையும் பெறலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள -

: +919790503075

#2020

Address

Madipakkam
Chennai
600042

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

7010893263

Alerts

Be the first to know and let us send you an email when Astrologer Shakthi Dasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astrologer Shakthi Dasan:

Share