JKR Cattle Feed Manufacturers

JKR Cattle Feed Manufacturers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JKR Cattle Feed Manufacturers, Wholesale & Supply Store, Coimbatore.

04/10/2022

JKR கால்நடை தீவனங்கள் சார்பாக அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...

06/09/2022
JKR கால்நடை தீவனங்கள் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳
15/08/2022

JKR கால்நடை தீவனங்கள் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳

கால்நடை காப்பீடு திட்டம்கால்நடை காப்பீட்டுத் திட்டம் ஒன்றிரண்டு கால்நடைகளைக் கொண்ட ஒரு சிறிய விவசாயிதான் நமது நாட்டில் ...
10/06/2022

கால்நடை காப்பீடு திட்டம்

கால்நடை காப்பீட்டுத் திட்டம்
ஒன்றிரண்டு கால்நடைகளைக் கொண்ட ஒரு சிறிய விவசாயிதான் நமது நாட்டில் ஒரு பொதுவான கால்நடை உரிமையாளராக இருக்கின்றனர். பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை உள்ளடக்கிய கலப்பு விவசாய முறையின் ஒரு பகுதியாக விவசாயி கால்நடைகளை வளர்க்கிறார். சிறு விவசாயிகள் தங்கள் வருமானத்தில் மேலானதை கால்நடைகளிலிருந்தே பெறுகின்றனர், கால்நடைகளின் மதிப்பே விவசாயிகளின் செல்வத்தில் கணிசமான சதவீதத்தை பிரதிபலிக்கிறது. எனவே கால்நடைகள் இறப்பு என்பது கணிசமான ஆபத்தை ஏற்படுத்துவதுடன் விவசாயியின் நிகர மதிப்பு மற்றும் வருவாயையும் பாதிக்கிறது. இந்த காப்பீட்டு திட்டமானது இரட்டை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.

இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.

தகுதி

காப்பீட்டு திட்டமானது உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

காப்பீட்டு மானியம் எப்பொழுது கிடைக்கும்?

விபத்து (வெள்ளம், சூறாவளி, பஞ்சம் உட்பட) அல்லது ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில் இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில்,குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற முடியும். விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியம். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு
செய்யும்போது திட்ட நடைமுறையில்
உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம் கிடைக்கும். சந்தையின் அதிக பட்ச விலையை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.

காப்பீட்டு காலத்தில் பயனாளர் மாறினால் என்ன செய்யலாம்?

காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்ளுவது அவசியம்.

காப்பீட்டு தொகை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
காப்பீடு செய்யப்பட்ட தொகை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கிடைக்கும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம் காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும் என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கும்.

ஒரு கால்நடை உரிமையாளர் சரியான
காரணங்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு காப்பீடு எடுக்க விரும்பினால் அவருக்கு காப்பீடு கிடைக்கும், ஆனால் அவருக்கு மானிய நீட்டிப்பு கிடைக்காது.

எப்பொழுது காப்பீடு கிடைக்காது?

காப்பீடு தொகை செலுத்தி 10 நாட்களுக்குள் இறந்துவிட்டால் கிடைப்பதில்லை.கால்நடைகள் காப்பீடு செய்யும் போது அந்நிறுவனத்தால் காது மடலில் பொருத்தப்பட்ட அடையாளத் தகடு காணாமல் போனால் காப்பீடு
தொகை கிடைப்பதில்லை..

we are look for marketing executive.impressive salary +petrol allowance...for full details contact us +919894222572
01/06/2022

we are look for marketing executive.
impressive salary +petrol allowance...
for full details contact us +919894222572

பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்:நமது நாட்டு பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அ...
10/05/2022

பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்:
நமது நாட்டு பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அதற்க்கான இயற்க்கை மருத்துவ தீர்வுகளையும் இந்த பதிவில் காணலாம்..
ஆடு மாடுகளுக்கு சரியான தீவனம் கிடைக்காமல் இருக்கும் போதும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும் கழிசல் நோய் அதிகமாக ஏற்படுகிறது.
கழிசல் நோய்க்கு தீர்வு:
இந்த கழிசல் நோய்க்கு முக்கிய மருந்து துவர்ப்பான பொருள்களில் தான் உள்ளது அதனால் மாதுளம் பிஞ்சு,சப்போட்டா பிஞ்சு, அத்தி,நாவல்,கருவேப்பிலை,ஜாதிக்காய் தோடு, போன்ற எதாவது ஒன்றை 3 நாளைக்கு தொடர்ச்சியாக குடுத்து வந்தால் சரியாகிவிடும்..
வாய்ப்புண்:
ஆடு மற்றும் மாடுகளுக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று செலவு செய்யாமல் நமது நிலத்தில் கிடைக்கும் மணதக்காளிக் கீரையை சாப்பிட கொடுத்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
உடலில் புண்:
ஆடு மற்றும் மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும் இடறி கிழே விழுவதாலும் உடலில் காயம் ஏற்படும். இதற்க்கு அம்மன் பச்சரிசி செடியின் தண்டை எடுத்து கசக்கினால் வரும் பாலை புண் மேல் தடவி விட்டால் புண் விரைவாக குணம் அடையும்..
நஞ்சுக்கொடி:
ஆடு மற்றும் மாடு கன்று போட்ட பின்பு நஞ்சுக்கொடி விழ அதிக நேரம் எடுத்துக்கொண்டால் இருபது நடுத்தர வெண்டைக்காய்,ஒரு கைப்பிடி எள்ளு, ஒரு கைப்பிடி பனக்கற்கண்டு ஆகியவை எடுத்து சாப்பிட கொடுத்தால் நஞ்சு விரைவில் வெளியேறிவிடும்...
இவை அனைத்தும் நமது முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றிய மருத்துவ முறைகள் ஆகும்.. செலவில்லா வைத்தியம் செய்து நமது நாட்டின் செல்வங்களான ஆடு மற்றும் பசுக்களை பாதுகாப்போம்...

பால் உற்பத்தியை அதிகரிக்க அதிக வெளிச்சம் தேவை!! பால் உற்பத்தியில் மாடு தண்ணீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு ம...
08/05/2022

பால் உற்பத்தியை அதிகரிக்க அதிக வெளிச்சம் தேவை!!
பால் உற்பத்தியில் மாடு தண்ணீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு மாட்டுக்கு அளிக்கப்படும் வெளிச்சமும் முக்கியமானது.
ஆனால், வெளிச்சத்தின் தேவை குறித்து பண்ணையாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. மாறாக, கோழிப் பண்ணைகளில் வெளிச்சம் பற்றிய விழிப்புணர்வு பண்ணையாளர்களிடம் இருக்கிறது.
இயற்கை ஒளி மட்டும் அளிக்கப்பட்ட மாடுகள் குறைவாக பால் கறக்கின்றன. அதே சமயம் மின்விளக்குகள் மூலம் தேவையான வெளிச்சம் கிடைத்த மாடுகள், அவற்றைவிட அதிக அளவில் பால் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி எவ்வாறு பாதிக்கப்படுகிறது தெரியுமா? மாட்டிற்கு ஏறக்குறைய 150 வாட்ஸ் வெளிச்சம் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.
வெளிச்சம் குறைவதன் காரணமாக மாடுகளில் கீழ்க்காணும் மாற்றங்களை காண முடியும். பெரும்பாலான நேரம் தூங்குவது போலிருக்கும்.

அதிக சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும். தீவனம் உட்கொள்ளும் அளவு குறைவாக இருக்கும். பால் உற்பத்தியும் குறைவாக இருக்கும்.
போதுமான வெளிச்சம் கொடுக்கப்பட்டால் தூக்கத்துக்கு காரணமான ஹhர்மோன் (இயக்கு நீர்) உற்பத்தி குறைகிறது என்பதால் மாடு அதிக விழிப்புடன் காணப்படுகிறது.

செயல்பாடுகள் அதிகரிக்கிறது. தீவனம் உட்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. பால் உற்பத்தி அதிகரிக்கிறது.

இளங்கறவை காலத்தில் தான் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருப்பதாலும், 6 முதல் 10 வாரங்களில் பால் உற்பத்தி அதிகபட்ச நிலையை அடைவதாலும் 16 மணி நேரம் வெளிச்சம் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நடுக்கறவைக் காலத்தில் தான் (4-7 மாதம்) பால் உற்பத்தி நிலையான அளவை அடைந்து, அதன் பிற்பகுதியில் குறைய தொடங்குகிறது. ஆகவே, 14 மணி நேர வெளிச்சம் இன்றியமையாதது. இந்தக் காலத்தின் பிற்பகுதியில் 12 மணி நேர வெளிச்சம் கொடுக்கும்போது அதிக உற்பத்தியை பெறலாம்.

வற்றுக்கறவை காலத்தில் (7-10 மாதம்) பால் உற்பத்தி ஏற்கனவே குறைய தொடங்கி இருக்கும். ஏறக்குறைய கன்று ஈன்று 300-305 நாட்களில் பால் நிறுத்தம் செய்ய வேண்டும். அதாவது பால் நிறுத்தம் செய்யும் கால கட்டத்தில் மாடு ஏறக்குறைய 7 மாத நிறை சினைப்பருவத்தில் இருக்கும். இந்த பருவ நிலையில் அதிக வெளிச்சம் தேவையில்லை. மாறாக 16 மணி நேரம் இருட்டை ஏற்படுத்தும் போது, அடுத்த கறவை காலத்தில் அதிக பால் உற்பத்தியை பெறலாம்.

நிறை மாத சினைக் காலம் (10-12 மாதம்) என்பது பால் நிறுத்தம் செய்த நாளில் இருந்து கன்று ஈனும் நாள் வரை உள்ள காலம் ஆகும். இந்த கால கட்டத்தில் குறைந்த வெளிச்சம் கொடுத்தால் போதும்.
மேலும் அதிக நேரம் இருளாக (16 மணி நேரம்) இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அதிக பால் உற்பத்தியை, அடுத்த கறவை காலத்தில் பெறலாம்.

நாம் கொடுக்கும் தீவனம் மட்டுமே பால் உற்பத்திக்கு முழுக் காரணம் இல்லை. மாறாக, வெளிச்சமும் இதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதனால், மற்ற பராமரிப்புடன் போதுமான அளவு வெளிச்சத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் அதிக பால் உற்பத்தியை பெற முடியும்.

பகிர்வு தகவல்.

பல்வேறு தீவனங்கள் உபயோகித்து எவ்வித பயனும் இல்லமால் இருக்கலாம்...100% சிறந்த பயனை அளிக்கக்கூடியது என்று பல்வேறு விவசாயிக...
12/04/2022

பல்வேறு தீவனங்கள் உபயோகித்து எவ்வித பயனும் இல்லமால் இருக்கலாம்...100% சிறந்த பயனை அளிக்கக்கூடியது என்று பல்வேறு விவசாயிகளால் மற்றும் மாட்டுபண்ணை உரிமையாளர்களால் அங்கிகரிக்கப்பட்ட கால்நடை தீவனம்...
Ph : +919894222572

அனைத்து மாடுகளுக்கு தேவையான சத்தான தீவனம்...ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சிறந்த பலன் கொடுக்கும்... கால்நடை வளர்ப்பவ...
25/01/2022

அனைத்து மாடுகளுக்கு தேவையான சத்தான தீவனம்...

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சிறந்த பலன் கொடுக்கும்...

கால்நடை வளர்ப்பவர்கள் ஒரு முறை பயன்படுத்தி நல்ல பலனை அடைந்து எங்களுடன் தொடர்ச்சியாக பயணித்து வருகி்ன்றனர்...

அந்த அனைத்து பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்...
அங்கீகாரம் உடைய தீவன தயாரிப்பு.
அமராவதிபாளையம்,காடையூர்,
காங்கேயம்...
தொடர்புக்கு : +919894222572
: +919443340438
: +919524959118

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when JKR Cattle Feed Manufacturers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share