Leebanon Cornerstone

Leebanon Cornerstone http://facebook.com/leebanon.architect
click for my profile Thank You Light Of GOD
PHOTOGRAPHER , ARCHITECT , ENGINEER , SOCIALICT

படித்து கண்ணீர் விட்ட பதிவு..HEART TOUCHING.!!குழந்தை இல்லா பெண்ணின் கதறல்மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள...
15/06/2017

படித்து கண்ணீர் விட்ட பதிவு..

HEART TOUCHING.!!
குழந்தை இல்லா பெண்ணின் கதறல்

மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிறேன்!

பாவாடை நாடாவை கூட வலிக்குமோ என்று தளர்வாய் கட்டி வழுக்கிவிடாதபடி அவ்வப்பொழுது பிடித்துக்கொள்கிறேன்!

காட்டன் புடவைகளை தவிர எதையும் கட்டுவதில்லை வெப்பத்தில் நீ கலைந்துவிடுவாயோ
என பயந்து!

கலவி என்பதே மனதையும் உடலையும் ஒருமிக்க செய்யும் ஒருவித தியானம் போன்ற மெய்மறந்த உணர்வுதான்,
அந்த உணர்வின் சுகத்திற்கு கூட அடிமையாகாமல் நீ உருவாகியிருப்பாயோ இந்நேரம் என்றுதான் எனக்குள் நானே எதிர்ப்பார்த்துக்கொண்டு இருப்பேன்!

என் வயிற்று தொப்புள்
என் தாயை நினைவு படுத்துகிறது,
நான் தாயாகாமல் இருப்பதையும் நினைவு படுத்துகிறது!
உணவால் மட்டுமே இந்த வயிறு நிரம்பிக்கொண்டு இருக்கிறது,
உன்னால் நிரம்பவேண்டும்
வா என் கண்மணியே!

உணவை சுமந்தது போதும்
உன்னை சுமக்க வேண்டும்
வா எங்கே இருக்கிறாய்!?
அம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது!

நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது!

உன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய்மீது கோபம் வருகிறது!

என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்!

என் பிள்ளை தானே நீ,
நீயும் நீயில்லாத வலியை
உன் தாய்க்கு தந்துவிடாதே!

இதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட கருமுட்டை உருவாக்கித்தான் உனக்காக காத்திருப்பேன்!

எங்கே இருக்கிறாய்
வந்துவிடு என் செல்லமே!!

தன் சுவாசத்தையே சுவாசிக்க  கொடுக்கும் தந்தை.ஆக்ஸிஜன் குறைப்பாடால் பிறந்த குழந்தைக்கு தன் நெஞ்சையே இன்க்யுபெஷனாய் மாற்றி ...
13/06/2017

தன் சுவாசத்தையே சுவாசிக்க
கொடுக்கும் தந்தை.

ஆக்ஸிஜன் குறைப்பாடால் பிறந்த குழந்தைக்கு தன் நெஞ்சையே இன்க்யுபெஷனாய் மாற்றி சில மாதம் சுமந்துள்ளார் தந்தை.

தாய் கருவில் சுமந்தாள், தந்தை நெஞ்சில் சுமக்கின்றான், என்பதை நிரூபித்துள்ளார் இவர்.

happy ramadam.:-)
18/07/2015

happy ramadam.:-)

17/01/2015

ஓர் கல்லூரியில் ஓவிய போட்டி நடைபெற்றது,அவரவர் ஓர் கருத்தை எடுத்து அதற்கேற்ப குறித்த காலத்தில் ஓவியம் வரையவேண்டும்,..அனைவ...
20/12/2014

ஓர் கல்லூரியில் ஓவிய போட்டி நடைபெற்றது,
அவரவர் ஓர் கருத்தை எடுத்து அதற்கேற்ப குறித்த காலத்தில் ஓவியம் வரையவேண்டும்,..

அனைவரும் ஓவியம் வரையதுவங்கினர்...

குறிப்பிட்ட காலத்தில் மணியடிக்கப்பட்டது,
அனைவரும் ஓவியம் வரைந்துமுடித்திருந்தனர்..

ஓவியத்தை தேர்வுசெய்ய நடுவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து
அவர்களது ஓவியத்தை பார்த்து அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட அதற்கேற்ப மதிப்பெண் கொடுத்துக்கொண்டு வந்தார்..

அதில் ராமு என்ற மாணவனிடம் அந்த நடுவர் வந்தார்..
அருகில் வந்ததும் ராமுவிற்கு ஒரே நடுக்கம்,
தனது கலை படைப்பு சிறந்ததாக இருக்கவேண்டும்
அதை நடுவர் பாராட்டி கொண்டாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு..
அனால், பெரிய பொட்டு, பெரிய உருவம்
என்ற நடுவர் அம்மையாரை பார்த்ததும் ராமுவிற்கு சிறிது நடுக்கம்..

நடுவர் அம்மையார் ராமுவின் பக்கம் வந்தார்..
ராமுவின் ஓவியத்தை பார்த்தார்.,
அதில் ஆயிரம் வலிகல் கொண்ட பேசும் ஓவியமாக இருந்தது..

நடுவர் அம்மையார் ராமுவை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்...
ராமுவை அணைத்தபடி நடுவர் அம்மையார் சொன்னார்..
எனக்கு திருமணம் ஆகி 10வருடமாக குழந்தை இல்லை அனால் உன்னை நீதான் என் குழந்தை என்று சொல்லிக்கொள்ள வைக்கிறது..
நீ என் குழந்தை....
என்றார்..

இதை சொல்லிவிட்டு நடுவர் அம்மையார் அடுத்த மாணவன் ஓவியத்தை மதிப்பிட நகர்ந்தார்..

ராமு சிறிதுநேரம் அப்படியே நின்றான்..

ராமு கண்களில் கண்ணீர்...

அந்த ஓவியத்தை எடுத்தான்..
அதை அப்படியே சுக்குநூறாக கிழித்தான..

அந்த கிழிக்கப்பட்ட ஓவியத்தை மேலே தூக்கி வீசினான்..
பின்பு கண்களில் கண்ணீருடனும்
முகம் முழுக்க புன்னகையான சிரிப்புடனும் அந்த இடத்தைவிட்டு ராமு வெளியேறினான்..

அவையில் இருந்த அனைவரும் ராமு செயலை
ஒரு பைத்தியகார செயாகவே பார்த்தனர்.,

அத்தனை அழகான ஓவியம் வரைந்து,
அதற்காக கஷ்டப்பட்டு..
சிறந்த ஓவியம் என்று நடுவர் அம்மையாரிடம் பெரிய பாராட்டுகளை வாங்கிவிட்டு
இப்படி பைத்தியம் போல் அந்த ஓவியத்தை கிழித்து வீசுகிரானே இவனுக்கு என்ன ஆயிட்ட்று!!
என்று அனைவரும் அவனை ஒரு பைத்தியமாகவே ராமுவை பார்த்தனர்.
ஆனால் ராமு மட்டும் மிகுந்த தெளிவுடன் கூடிய சந்தோசம் நிறைந்த ரோஜாவை போல
மலர்ந்து அவையை விட்டு மெளனமாக வெளியேறினான்..

விளக்கம்:
நிச்சயமாக இந்த கதையை படித்த உங்களுக்கும் இது புரியாது ?..
இன்னும் சொல்லபோனால் இந்த கதையே புரியாது..

அனால்...
இந்த கதையில் ராமு அவன் கஷ்டப்பட்டு வரைந்து,
அவன் சிறந்த பரிசு வாங்கவேண்டும்
என்று வரைந்த ஓவியத்தை சிறந்த பரிசு வாங்கியவுடன் கிழித்து வீசிவிட்டு சிரிக்கிறானே இது கதைய? என்றால்..

ஆம் அவன் அந்த சிறந்த பாராட்டை பெறவே ராமு அவ்வளவு கஷ்டப்பட்டான்..
அந்த கஷ்டத்திர்க்கான பலன் ராமுவை நடுவர் அம்மையார் கட்டி அணைத்து தனது மகனாக நினைக்கிறேன் என்று சொன்ன அந்த வார்த்தை
அதில் உள்ள அந்த அன்பு ,
அந்த உணர்வு.. ராமுவிற்கு அதுதான் தேவையாக இருந்தது,
அந்த அன்பு மட்டு ராமுவிற்கு போதுமானதாக இருக்கிறது..
எனவேதான் அவனுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு வரைந்து அதன்மூலம் கிடைத்த அவனது உழைப்பை விட அவன் இதையம் அவன் பெற்ற அன்பையே வெளிப்படுத்தியது...

அன்பு பைதியகாரனாக்கும்..
அன்பு தனிமைபடுத்தும்..

-ஆதவன்.சக்தி என்கிற லீபனோன் வரிகள்.


JOIN MY OFFICIAL PAGE...for my photography...>>>> Leebanon Cornerstone
23/04/2014

JOIN MY OFFICIAL PAGE...for my photography...
>>>> Leebanon Cornerstone

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Leebanon Cornerstone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share