04/02/2023
*காரைக்குடி கோவிலூர் ரோடு; அரசு போக்குவரத்து கழக பணிமனையின் அருகே; பழனி முருகன் கோவிலுக்கு இணையான "ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி" முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில், நாளை 5_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; "தைப்பூச திருவிழா" வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி ஜெயராமன் தலைமையில் காரைக்குடி டி.டி.நகர் அருள்மிகு "கற்பக விநாயகர்" கோவிலில் இருந்து பால் குடங்கள் எடுத்து காரைக்குடி பழைய பேருந்து நிலையம் வழியாக; தண்டாயுதபாணி சுவாமி கோவிலை சென்றடைய இருக்கிறது. நாளை காலையில் நடைபெறும் இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு அனைவருக்கும் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலர் பாண்டியன் குடும்பத்தார் காலை மட்டும் அன்னதானம் வழங்குகிறார்கள். பழனி முருகனை தரிசித்த பலன் காரைக்குடி முருகனை தரிசித்தால் உடனடியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அனைவரும் வருக!வருக! என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில கேட்டுக்கொள்ள படுகிறது.*