மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani

  • Home
  • India
  • Mayiladuthurai
  • மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani

மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani ALL IS WELL

🕉️ *சிவ யோக தியான யாத்திரை:-* 🌹அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் அதிகமாக பகிரவும்(சிவனருள் பெறவும்) *ஓம்சிவயநம*🔥 சிவ யோக தியா...
23/02/2025

🕉️ *சிவ யோக தியான யாத்திரை:-* 🌹

அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் அதிகமாக பகிரவும்(சிவனருள் பெறவும்) *ஓம்சிவயநம*

🔥 சிவ யோக தியானம் = சிவத்தை உணர்வதற்கான அனுபவம் செய்வதற்கான ஆன்மீக சாதனை.

🧎🏻‍♀️யாத்திரை = பேரானந்த சிவத்தின் கட்டளையை உணர்ந்து விழிப்புணர்வோடு செல்லும் பயணம்(உள்ளும் புறமும்).

🕺ஆக இந்த யாத்திரையில் பெரும்பாலோனோர் செய்வது போல் கோவில்களை மட்டும் சுற்றி பார்க்க போவதில்லை, சிவன் ஆலயங்களில் உள்ள சிவத்தை உணர முயற்சிக்க போகிறோம்.விழிப்புணர்வோடு கோவிலுக்கு செல்ல போகிறோம்.

👩‍❤️‍👨 ஊட்டி கொடைக்கானல் & தஞ்சை பெருவுடையார் கோவில்களுக்கு நாம் இன்ப சுற்றுலா (Tour) சென்றிருப்போம், அதில் சிற்றின்பம் கிடைக்கும், ஆனால் சிவ யாத்திரையில் அழியாத பேரின்பம் கிடைக்கும்.

☄️ *அதுவும் சிவராத்திரி அன்று மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை, வருடத்திற்கு ஒரு முறை ஈத்தர் எனும் சிவகலத்தில் உள்ள பிரபஞ்ச ஆற்றல் பூமியெங்கும் நிறைந்திருக்கும், குறிப்பாக சிவ ஆலயங்கள் அந்த மின்காந்த அலைகளை( Electro megnatic wave) சிவ லிங்க திருமேனிகளில் நிறைக்கும் பணியை செய்யும். புண்ணிய ஆத்மாக்கள் அன்று முழவதும் அந்த பணியை நிர்வகித்து செயல்படுவார்கள்.*

அந்த பொன்னான நேரத்தில் நாம் சிவ ஆலயத்தில் இருந்து அதை அனுபவம் செய்யும் போது, அபரிவிதமான ஈத்தர் ஆற்றல் நம் உடலுக்குள் பாயும்.

*மின்சாரம் பாயும் போது எப்படி விளக்குகள் எரிகிறதோ அதே போல் நம் உடலில் மின்காந்த அலையான ஈத்தர் பாயும் போது நம் உடலில் உள்ள ஆதார சக்ரங்கள் விழிப்படையும் பிரகாசமடையும், ஊன் உடலும் சக்தியுடலும் வலுவடையும், உடலில் உள்ள பிணிகள் விலகும், ஆரோக்கியம் கிடைக்கும், நம் ஆன்மா மனம் சுத்தப்படுத்தப்பட்டு மன நிம்மதி கிடைக்கும், இந்த இரண்டும் சரிசெய்யப்படும் போது, தேவையான செல்வம் மணிபூரக சக்ரத்தில் உள்ள ஸ்ரீமகாலெட்சுமி தாயாரின் திரு கருனையால் நிறைந்து, செல்வ செழிப்பு கிடைக்கும்.*

🧙‍♂️ இதையே சிவராத்திரி அன்று விழித்திருந்து சிவத்தை வணங்கினால், நல்லது நடக்கும். ஆரோக்கியம் மனநிம்மதி செல்வ செழிப்பு கிடைக்கும் என பெரியவர்கள் கூறி அதை ஒர் ஆன்மீக திருவிழாவாக வடிவமைத்து அனைவரையும் கொண்டாட வைத்தனர்.

*இது ஒர் அற்புத திருநாள். ஆன்மீக சாதனைகள் பயிற்சிகள் செய்வர்களுக்கு பொக்கிஷமான நாள், மற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வேண்டிய படி வரமளிக்கும் நாள்.*

*இறைவா கண்ண திறந்து பாக்க மாட்டியா? என வேண்டுவோர் இங்கே கோடான கோடி பேர். மஹா சிவராத்திரியே அந்த இறைவன் கண் திறந்து பார்க்கும் நாள், எனவே வரம் வேண்டுபவர்கள் இன்று வேண்டி பெற்றுகொள்ளலாம்.*

🕉️இவ்வளவு விஷயங்களை கருத்தில் கொண்டே நம் தியான குழ இந்த சிவராத்திரி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது, உண்மையில் சிவ பெருமான் இந்த நிகழ்வை மக்களுக்காக நிகழ்த்த உள்ளார். 🔥

*மயிலாடுதுறை,6. கீழையூர், குளித்தலை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.*

🙏 *எனவே நீங்களும் தவறாமல் இதை பயன்படுத்தி பலன் பெறுவீர் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன்.*🙏

தொடர்புக்கு :-

*97912 19336 (Phone &what's app)*

ஆத்ம அன்போடு சிவயோக தியான யாத்திரை குழ - மயிலாடுதுறை மாவட்டம்.
🔥🕉️🧚‍♂️🧚‍♂️🕉️🔥

சுய ஞானம் (நான்):-நான் சந்திக்கும் 100 ல் 99 நபர்கள், தங்கள் தேவைக்கு அதிகமாக பொருள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர், அத...
21/02/2025

சுய ஞானம் (நான்):-

நான் சந்திக்கும் 100 ல் 99 நபர்கள், தங்கள் தேவைக்கு அதிகமாக பொருள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர், அதை தவறென்று கூறமாட்டேன், அது அவர்களின் அஞ்ஞானம்.

தன்னையும் தன் குடும்பத்தையும் தாண்டி அடுத்தவர்களுக்கு உதவும் குணமும் அதற்கான செயலில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக பொருள் தேவை,

உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 1மூட்டை அரிசி போதுமானது, ஒரு அனாதை ஆசிரமத்திற்கு 100 மூட்டை தேவைப்படும்.

குடும்பத்தில் வசிக்கும் ஒருவர் 100 மூட்டை அரிசியை தன் வீட்டில் வைத்து கொண்டு வேடிக்கை பார்த்துகொண்டிருப்பது முட்டாள் தனம் இல்லையா? சில வருடங்களில் அந்த அரிசி வீணாகி புழ பூச்சி ஏறி சேர்த்தவரின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும், அதே போல் அளவுக்கு மீறிய செல்வம் தானியம் நிலம் பணம் சொத்து தேங்கி கிடந்தால் அது பாவ வினையாக மாறி சேர்த்தவரையும் அவரை சார்ந்தவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடுகிறது.

"தண்ணீர் ஓடினால் தான் ஆறு, தேங்கினால் சாக்கடை"

செல்லும் வரும் அதுவே செல்வம், செல்ல வர நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையேள் ஆபத்து

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், நீங்கள் எவ்வளவு சேர்த்தாலும் 15 இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது, 1 நாளைக்கு மனதாரா 1 லட்சத்திற்கு மேல் உங்களுக்காக மட்டும் செலவு செய்ய முடியாது, மாட மாளிகையில் படுத்துறங்கினாலும் நிம்மதி இல்லா மனம் உறக்காது. 100 வயதுக்கு மேல் உயிரோடு இருக்கமுடியாது.ஆன்மா விழிப்படையாதவன் எதை செய்தாலும் வீண். இறை என்ற பேரானந்தத்தில் உள்ள சுகம் சிற்றின்பத்தில் கிடைக்காது. இந்த சுயமே மாயை இது போல பல மாயை சூழ் உலகிது.

எதுக்கு இப்படி இருக்காய்ங்க?

பேரின்ப சுகம் தராத ஒன்றை ஏன் பேரும்பாலான மனிதர்கள் செய்கிறார்கள் என யோசித்துகொண்டிருக்கும் போது, அதற்கான விளக்கத்தை என் ஆன்மாவில் இருந்து யாம் இந்த பதிவில் கூற இருக்கிறோம், கவனமாக படியுங்கள்.

என் தேவைக்கு அதிகமாக சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் சுயத்தில் இருந்து எழகிறது. அது சிலரின் சூழ்ச்சி எனவும் கூறலாம். இந்த மாயையில் இருந்து விலகுவதே நல்லது.

எண்ணையும் தண்ணீரும் போல, தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் இருத்தலே மாயயை கடக்க எளிய வழி..!

உன்னை விட்டு நீ விலகி இருந்தால், அனைத்திலிருந்தும் உன்னால் விலகி இருக்க முடியும்..!

இது ஒர் அற்புத ஞானம்..! இதை சுய ஞானம் என்று கீதை விளக்குகிறது..!

இந்த பதிவில் இதை பற்றி விரிவாக பார்ப்போம்..!

சுயம்:-

நீ நான் எனது என்பது சுயம் ஆகும், புருஷ் எனும் ஆன்மா சுயத்தில் இருந்து மெல்லிய இடைவெளியில் உள்ளது. பிரத்தியாகாரம் செய்பவர்கள் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்பார்கள்.

ஆணவம், காமம், மோகம், எனது எனும் எண்ணம், மூலாதாரத்தில் மட்டும் நிலைத்திருக்கும் ஆற்றல், இது போன்ற 96 தத்துவங்களில் சுயம் நிலைபெற்றுள்ளது.

ஆன்மா:-

இறை,கருனை, பேரானந்தம், சுத்த ஞானம், ஒட்டுமொத்த பிரபஞ்ச அறிவு-நினைவு, பிரபஞ்ச சக்தி, அட்டமா சித்து,அட்ட கர்ம சக்தி, பஞ்ச பூத ஆற்றல் போன்ற 1 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தத்துவங்களை உள்ளடக்கியது ஆன்மா..!

ஆன்மா - உடலோடு மனதோடு அறிவோடு புறத்தோடு தொடர்பில் இருப்பதால் அது அனைத்தோடும் இரண்டற கலப்பதில்லை, ஒரு பாட்டில் நீர் மீது உள்ள எண்ணெய் அதோடு ஒட்டி இருப்பது போல தோற்றம் அளித்தாலும் அதில் மெல்லிய இடைவேளி இருக்கும், இரண்டையும் கலக்க நாம் பாட்டிலை குலுக்கினாலும் கலக்கினாலும் அது இரண்டும் ஒட்டவே ஒட்டாது. அதுவே எண்ணெயின் தன்மை.

அதே போல ஆன்மா, எண்ணெய் போன்றது, அது இனைந்திருக்கும் ஒட்டாது. இதை பற்றி ஸ்ரீ ரமணர் ஜயா நிறைய உபதேசித்துள்ளார்.

நீங்கள் உங்களை ஆத்ம சொரூபமாக உணரும் போது, பரமாத்மா காட்சியளிப்பார். அதுவே சத்தியம்.

இதற்கு மீடியம் பயிற்சி எனும் வித்தை ஒர் வழி. வித்தையில் ஞானம் எனும் மார்க்கத்தை ஏற்ற ஆன்மாக்களுக்கு இது உகந்தது.

மீடியங்களுக்கு பிரத்தியாகாரம் எளிதில் கைகூடும்.

பிரத்தியாகாரம் எனும் மனதை உள்நோக்கி திருப்பும் பயிற்சி சித்தி பெற்றவனே, தன்னுடைய ஆன்மாவை தரிசிக்க முடியும்..!

எனவே அனைவரும் சரியான முறையில் மீடியம் பயிற்சி செய்யுங்கள், மேலும் பிரத்தியாகாரம் தியானம் தவம் செய்யுங்கள். சுயம் படிபடியாக குறைந்து அழியும், இறை தரிசனம் கிட்டும், பிறவி பிணி தீரும்..!

நல்லதே நடக்கட்டும்..!

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஓம்சிவயநம

ஆத்ம அன்புடன் ஆத்மநேசர்

ஸ்ரீ ஆத்மநேச மையம் -மயிலாடுதுறை தலைமை மையம்.

இங்கே உடலை விடுபவர்கள் ஆவியுலகில் பிறக்கிறார்கள்..!ஆவியுலகில் காலம் கூடுபவர்கள் இங்கேயும் பிறக்கிறார்கள்..! அவ்வளவுதான்....
20/02/2025

இங்கே உடலை விடுபவர்கள் ஆவியுலகில் பிறக்கிறார்கள்..!

ஆவியுலகில் காலம் கூடுபவர்கள் இங்கேயும் பிறக்கிறார்கள்..! அவ்வளவுதான்.

ஆவியுலகம் மனித கற்பனைகளுக்கும் மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது..!

மெய்ஞான அறிவு மட்டுமே அதை பற்றி ஒரளவு புரிந்து கொள்ள இருக்கும் வாய்ப்பு..!

நான் உடலை விட்டு ஆவியுலகம் செல்வதற்கு முன், இதில் சிலவற்றையாவது மனித குலத்திற்கு சொல்லிவிட்டு செல்ல வேண்டுமென நினைக்கிறேன்...!

புண்ணிய ஆத்மாக்கள் அருளால் அதை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்..!

நவீன அறிவியலும் அதற்கு துனைபுரியும் என எண்ணுகிறேன்..!

அதற்கு இந்த அறிவியளாலரின் ஆய்வு மேலும் ஓர் சான்று,

https://youtu.be/6R24bW0ISmQ?si=Wa9zmsvoQfFgw3Jj

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஒம்மந்திரசித்தர் திருவடிகளே நம

நமக்கு மரணம் இல்லை இறந்த பிறகு இங்கே தான் செல்கிறோம்! அதிரவைத்த புதிய ஆய்வின் முடிவு | | | | ....

திருமணம் (ஞானோதயமயம்):-திரு + மனம் = திருமணம்ஆண்மை + பெண்மை = இல் அறம்அறிவு + மனம் = ஞானம்இங்கே திரு என்றால் உயர்ந்த ஆண்...
15/02/2025

திருமணம் (ஞானோதயமயம்):-

திரு + மனம் = திருமணம்

ஆண்மை + பெண்மை = இல் அறம்

அறிவு + மனம் = ஞானம்

இங்கே திரு என்றால் உயர்ந்த ஆண்மை என்றும் மனம் என்றால் சிறந்த மனம் என்றும் பொருள்படும்..!

உயர்ந்த ஆண்மை என்பது 5 குணநலங்களை உள்ளடக்கியது,

1. வீரம் (ஆளும் திறன்)

2. திறமை (ஆக்கும் காக்கும் அழிக்கும் திறன்)

3. தெளிந்த பகுத்தறிவு

4. சமயோசித்த புத்தி

5. சுத்த ஆணவம் (இறையை தவிற வேறு ஒன்றுக்குள் அடங்காமை)

இந்த குணநலத்தில் குறைந்தது 3 ஆவது இருப்பவனே ஆண்மையுடைய ஆண் ஆகிறான்.

சிறந்த மனம் என்பது 7 குணநலன்களை உள்ளடக்கியது,

1. சுத்த காதல் (எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பிற உயிரை நேசிக்கும் தன்மை)

2. கருணை ( பிறர்க்கு உதவ முற்படுவது)

3. அன்பு எனும் பயிற்பு (மகா சக்தி)

4. பூமாதா போன்ற பொறுமை

5. அச்சம் (இறை மீது பயபக்தியோடு இருப்பது)

6. மடம் (இங்கே அழகியல் திறனை குறிக்கிறது)

7.நாணம் ( சூழ்நிலைக்கு ஏற்றாற்போல வெட்கப்படுவது)

இதில் குறைந்தது 5 ஆவது இருப்பவளே பெண்மையுடைய பெண்ணாக ஆகிறாள்.

3+5 = 8 பொருத்தம் உள்ள வரன்களே திருமணம் செய்ய முடியும்.

மற்றவை இச்சையான உடல் தேவைக்காக நடத்தப்படும் கல்யாண வியாபாரம்.

வியாபாரத்தில் லாப நஷ்டம் இருக்குமே தவிர இல்லறம் நடக்காது. இதனால் தான் பல கல்யாண வாழ்க்கைகள் கேள்விகுறியாகவே இருக்கிறது, இந்த புரிதல் இல்லாத மனிதர்கள் எத்தனை பிறவி எடுத்து எத்தனை கல்யாணம் செய்தாலும் அது திருமணம் ஆகாது.

திருமணம் மூலம் இல்லறம் மலர்ந்து உண்மையில் ஞானோதயம் பிறக்க வேண்டும். அது முறையில்லாத வரன்களுக்கு எட்டாகனியாகவே போய்விடுகிறது.

முக்கிய குறிப்பு:-

*நீங்கள் திருவள்ளுவராய் இருந்தால் உங்கள் மனைவி வாசுகி ஆக மாறியே ஆகவேண்டும் என்பது விதி..!

முதலில் வாசுகியாய் என் மனைவி மாறட்டும் என்று காத்திருப்பது வீண்..!*

புரிந்து இல்லறம் நடத்துங்கள் நல்லதே நடக்கும்

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஓம்சிவயநம

#வள்ளுவ வாசுகி திருவடிகளே போற்றி..!

ஆண் (அறிவுமயம்) :-ஆண் என்ற நிலைதன்மையை குறிக்கும் அற்புத ஆற்றலை பற்றியும் அதன் தன்மையை பற்றியும் கூறுகிறேன்.1. ஆண் மகா ப...
09/02/2025

ஆண் (அறிவுமயம்) :-

ஆண் என்ற நிலைதன்மையை குறிக்கும் அற்புத ஆற்றலை பற்றியும் அதன் தன்மையை பற்றியும் கூறுகிறேன்.

1. ஆண் மகா பலசாலி, உடல் சக்தி அதிகம் மன பலம் சற்று குறைவு. மூர்க்க குணம் அதிகம், தான் ஒரு மிகப்பெரிய வீரன் அறிவாளி என்று நம்பிகொண்டிருப்பான். அதை குறை கூறுபவர்களை வெறுப்பான்.

2. தனிமையில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க அவனுக்கு பிடிக்கும். தான் தனிமை விரும்பி என்று புரிந்துகொள்ளும் வரை, அவன் அனுபவிக்கும் சோதனைகள் அதிகம். தனிமையை தொந்தரவு செய்பவர்களை அவனுக்கு பிடிக்காது. ஆகையால் மௌனம் எளிதில் கைகூடும்.

3. அறிவு மயமானவன். மனமாக செயல்பட அதிகமாக விரும்ப மாட்டான். சில சமயங்களில் மனதே இல்லாதது போல் செயல்பட அவனால் முடியும், இந்த இயல்பால் பலவற்றை இழப்பான். முக்கியமாக உறவுகளை இழந்து தவிப்பான்.

" இறுதியில் உனக்கு மனசாட்சியே இல்லையா? " என திட்டு வாங்குவான்

அவன் படைக்கப்பட்தே அப்படி தான், எதையும் அறிவாக மட்டுமே சிந்திக்க தோன்றும். அது ஆண் தன்மையின் இயல்பு. அதை மாற்றிகொள்ளவது கடினம்.

4. தனக்குள் இருக்கும் பெண் என்ற மனோமயத்தை அறிந்து அடையாத வரை, பிறரை சார்ந்தே அவன் வாழ்வான். எனக்கு யாரும் தேவையில்லை என்று நம்புவான், தான் சார்பு தன்மை கொண்டவன் என கூறுவது தன் வீரத்திற்கு இழக்கு என நம்பும் குணம் கொண்டவன். உண்மையில் அது முடியாது,
வெறும் அறிவு இங்கே வாழவே முடியாது சிதைந்து அழிந்துவிடும்.

அதுவே உண்மை, இதை உணர்ந்த பெரியவர்கள் ஆணுடன் பெண்ணை இனைத்து வாழவைத்தார்கள். அதாவது அறிவுடன் மனதை இனைக்கும் நிகழ்வே திருமணமாகும்.

5. நிலைத்தன்மை நிறைந்திருப்பதால், தியானம் தவம் இறை அனைத்தும் எளிதில் கைகூடும். எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன் உடல் சாதகமாக இருப்பதால் எளிது, இறைவனை எளிதில் அடையும் திறன் அதிகம்.

6. எதையும் ஆக்கும் காக்கும் அழிக்கும் திறன் உண்டு. பிரம்மா விஷ்னு சிவன் அவன் நற்குணங்களில் நிறைந்துள்ளது.

தீய குணத்தில் கோவக்காரன் கொடூரன் அரக்கன் போன்ற அத்தனை தீய சக்திகளும் உண்டு.

மிருகம் கொன்று உணவான் தின்று தெய்வம் வளர்த்தால் போற்றப்படுவான்.

தெய்வம் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்ந்தால் சிதைந்து அழிந்துபோவான்.

7. அரச தன்மை அதிகம், அடிமை தனம் பிடிக்காது. ஏதோ ஓர் சூழ்நிலை காரணமாக பிறர்க்கு அடிமையாக வாழ வேண்டிய நிலை இருந்தால், அந்த தீவினை நோயாகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றால் அவனை துன்பப்படுத்தும். நிம்மதியை குலைக்கும்.

8.பிறரை அடக்கி அடிபணிய வைக்க பல்வேறு வகையில் முயற்ச்சிப்பான். அன்புக்கு மட்டுமே சர்வமும் அடங்கும் என்பதை அறிந்து, அன்பாயுதம் ஏந்தியவன் அதில் நிறைவுபெறுவான்.

9. வெறுமை எனும் ஆகாயத்தின் தன்மை நிறைந்திருக்கும்.

10. அறிவாக பெரும்பாலும் இருப்பதால், மனம் சோகங்களால் கனமாகும், கண்ணீர் மூலம் கனத்தை கழவ பெரும்பாலும் வராது. ஆக தலையும் மூளையும் சூடாகி தலைமுடி உதிர்ந்துவிடும், உச்சி வழியே கனம் வெளியேறும், இதனால் தான் அறிவை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு தலை வழக்கை ஆவது நடக்கிறது.

மனதின் கனம் ஏதோ ஒரு வகையில் நீங்க வேண்டுமே, அது நீங்கவில்லை எனில் ஆணால் இயல்பாக இயங்க முடியாது பைத்தியம் பிடித்துவிடும்.

11. பொறுப்பின்மை அதிகம், அது அவனுக்கு சுகம் கொடுப்பது போல மாயயை உருவாக்கும், ஆகவே பொறுப்பில்லாமல் சுற்ற விரும்புவான், இது அதிகமானால் அவனுக்கு அவனை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து, ஆகவே அப்படிப்பட்டவர்களை "இறை" அறம் பாவம் எனும் அறுங்கயிற்றால் கட்டி நிலைநிறுத்துகிறது.

12. அவிழ்க முடியாத முடிச்சுகளையும், போடவும் தெரியும், அதை அவிழ்கவும் தெரியும், அந்தளவு திறமையானவன் ஆண்.

13. ஆணவம் கர்மம் மாயயை பற்றிய அறிவை எளிதில் பெற்று, மனதில் கரைத்து ஞானமாக மாற்றும் திறன் அதிகம்.

14. இந்த பிரபஞ்சம் முழவதும் அறிவியல் கோட்பாடுகளே அதிகளவில் உள்ளது. பிரபஞ்ச மனம் அதை ஆள்கிறது. அத்தனை அறிவியலையும் முழமையாக புரிந்துகொள்ளும் தன்மை எளிமையாக வரும், அதனால் தான் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அதிகமாக ஆண்களே கண்டிபிடித்துள்ளார்கள்.

15. இறுதியாக ஒன்றை சொல்கிறேன். ஆண்களே நீங்கள் அறிவு மயமானவர்களே .

ஆனால் "வெறும் அறிவை மட்டும் வைத்துகொண்டு ஒரு ஆணியும் புடுங்கமுடியாது".

உங்களுக்குள் இருக்கும் மனோமயம் எனும் பெண்மையை உணர முயற்சியுங்கள் அல்லது உங்களோடு வாழம் தாய் மகள் மனைவி பாட்டி அத்தை போன்ற பெண் சொந்தங்களை உணர முயற்சியுங்கள். அறிவோடு கலந்த மனமே, ஞானமாக மாறும்.

கருணை அன்பு பாசம் காதல் போன்ற பெண் தன்மையான உணர்வுகளே இனிமையான வாழ்விற்கு வழிவகுக்கும்.

அதை புரிந்துகொண்டு செயலாற்றுங்கள். இன்னும் இருக்கிறது அடுத்த பதிவில் தொடர்கிறேன். நல்லதே நடக்கும்.

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஓம்அர்தநாரியே போற்றி

ஆத்ம அன்புடன் ஆத்மநேசர்
ஸ்ரீ ஆத்ம நேசம் - 97912 19336 .

பெண் (மனோமயம்):-என் தெய்வதாய் ஸ்ரீ காளி தேவியையும் என்னை பெற்ற தாய் தெய்வதிரு. ராணி அம்மாவின் திருபாதங்களையும் வணங்கி இந...
08/02/2025

பெண் (மனோமயம்):-

என் தெய்வதாய் ஸ்ரீ காளி தேவியையும் என்னை பெற்ற தாய் தெய்வதிரு. ராணி அம்மாவின் திருபாதங்களையும் வணங்கி இந்த பதிவை தொடங்குகிறேன்.

நான் இதுவரை லட்சகணக்கான பெண்களை என் வாழ்வில் சந்தித்துள்ளேன், பெண்ணின் மனதை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்ததில் இருந்து, சுமார் 50,000 பெண்களிடம் அவர்கள் மனம் செயல்படும் விதத்தை பற்றி மறைமுகமாக கேட்டறிந்துள்ளேன். பல லட்சகணக்கான மணிநேர உரையாடளுக்கு பிறகு அவர்கள் சொல்லும் இறுதி பதில் என்ன தெரியுமா?

நான் ஏன் இப்படி செய்யுறேனு எனக்கே தெரியல. - என் மனசு ஏன் இப்படி வேலைசெய்யுதுனு எனக்கே புரியல. என்று தான்.

இதை பற்றி யோசிக்கும் போது எனக்குள் இருக்கும் கருனை என்ற பெண் தன்மையை நான் உணர்ந்துள்ளேன்.

நான் ஆணாக இருந்தாலும் எனக்குள்ளே 10% பெண் தன்மை இருப்பதை பிரத்தியாகார தவத்தில் நான் உணர்ந்துள்ளேன்.

பெண் என்ற மாபெரும் சக்தியை பற்றி நான் அறிந்துகொண்டவைகளை இங்கே பதிய விரும்புகிறேன்.

தங்கத்தில் படிந்துள்ள அழக்குகளை நீக்கினால் தான் தங்கம் ஜொலிக்கும், அது போல பெண்மையை முழமையாக வெளிப்படுத்த விடாமல் தடுக்கும் காரணிகளை பற்றியும் பெண்ணின் தன்மையை பற்றியும் முழமையாக ஒரு பெண் புரிந்துகொண்டால் மட்டுமே அவள் மனிதியாக மதிக்கப்படுவாள் தெய்வமாக போற்றப்படுவாள்.

இந்த புரிதல் இல்லாததால் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டம் அதிகம், ஆண்களுக்கு இந்த புரிதல் இல்லாததால் பெண்ணுடன் இனைந்து வாழ முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.

இந்த பதிவை படிக்கும் ஆண் பெண் இருவருக்கும் இந்த அறியாமை இருள் நீங்கி, சிவ சக்தியாக வாழ வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

பெண்ணின் தன்மை:-

1. அவள் மென்மையானவள், அழகானவள், அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பாள், தன் அழகை பற்றி குறை கூறுபவர்களை அவள் வெறுப்பாள்.

2. குழந்தை மனம் கொண்டவள் (அடம்பிடிப்பால் அன்பிற்கு அடங்குவாள்)

3. பிடித்ததை மட்டுமே அவள் செய்வாள், சரியானதை சரியான நேரத்தில் செய்யும் அறிவு திறன் குறைவு, ஏனெனில் அவள் மனதின் பிரதிபிம்பம், மனமாகவே அவளால் செயல்பட முடியும், அதனால் தான் "உனக்கு அறிவில்லையா?" என்று அதிகமாக திட்டுவாங்குவாள்.

சுருக்கமாக சொன்னால் "பெண் புத்தி பின் புத்தி" அது அப்படி தான்,

அவள் படைக்கப்பட்டதே அப்படி தான், அந்த பெண்ணே நினைத்தாலும் அதை மாற்றி கொள்ள முடியாது.

4. மனமான பெண்ணால் செய்ய முடியாத காரியம் என்று எதுவுமே கிடையாது. ஸ்ரீ காளியின் சுத்தப்படுத்தும் சக்தியும் ஸ்ரீ லெட்சுமி தேவியின் பொருள் சக்தியும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஞான சக்தியும் , அவள் சுத்த மனதில் உலகில் உள்ள சர்வ நல்ல சக்தியும் அடங்கியுள்ளது. அது அவளையும் அவளை சார்ந்தவர்களையும் மேம்படுத்தும்.

5. மனம் கெட்டுவிட்டால் அதில் இருந்து மன பேய் வெளிவரும், அசுத்த மனதில் பஜாரி இருக்கிறாள், அடங்காப்பிடாரி இருக்கிறாள், மூதேவி இருக்கிறாள், தூர்மோகினி இருக்கிறாள்,பிசாசு இருக்கிறாள் இன்னும் இந்த உலகில் உள்ள அத்தனை தீய சக்திகளும் இருக்கிறது. அது அவளையும் அவளை சார்ந்தவர்களையும் முற்றிலுமாக அழித்துவிடும்.

நல்ல சக்தியை குறைத்து தீய சக்தியை அதிகரித்தால் அவள் பேய்.

நல்ல சக்தியை கூட்டி தீய சக்தியை குறைத்தால் அவளே தெய்வம்.

6. மன உறுதி மிக மிக மிக அதிகம், ஆனால் பயம் கொள்வது போல நடித்து மற்றவர்களை நம்பவைக்கும் குணம் உண்டு, ஏனெனில் உடல் வலிமை சற்று குறைவு.

7. ஆசைபடுவதும் , அனைத்தையும் தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மிகுந்திருக்கும்.

8. இயங்கும் தன்மை - செயல் தன்மை - சுறுசுறுப்பு மிக அதிகம், ஆகவே தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்ற மாயை மிகுந்திருக்கும்.

9. அனைவரையும் நான் தான் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் கருனையும் தாய்மையும் நிறைந்திருக்கும், இந்த குணம் பல சமயத்தில் நன்மையாகவும், சில சமயத்தில் தீமையாகவும் இருக்கும்.

10. ஆணவம் -பொறாமை- தற்பெருமை -அதிகாரம் செலுத்தும் தன்மை அதிகம், அது மிக அதிகமானால் அடுத்தவரை அழிக்க கூட தயங்காது.

11. வஞ்சனை எண்ணம் தேவையான அளவு தோன்றும், அது அதிகமாக வராமல் தடுப்பது நல்லது.

12. எப்போழதும் யாரோ ஒருவரை சார்ந்திருக்கவும், சற்று ஏமாந்தால் சார்ந்தவர் மீது ஏறி சவாரி செய்யும் மனோபாவம் இருக்கும், ஆனால் உண்மையில் பெண் தனித்து வாழ முடியும், அவளுக்கு எவன் துனையும் தேவையில்லை, அவள் தான் மற்றவர்களுக்கு தேவைப்படுவாள், அதை யாரிடமும் பெரும்பாலும் வெளிபடுத்த மாட்டார்கள்.

13. அவர்கள் மனதிலோ மூளையிலோ சோகம் கவலை தங்காது, தலை சூடேறாது. கண்ணீர் மூலம் அனைத்தும் கழவப்படும்.

தலைவழக்கை விழந்த பெண்ணை நீங்கள் இதுவரை பார்த்துள்ளீர்களா?

ஆனால் சோகமாக இருப்பது போல அவர்களே நினைத்துகொண்டு, மற்றவர்களையும் நம்பவைத்துவிடுவார்கள். அது அவர்களுக்கு ஒர் விளையாட்டு.

14. ஒரு பிரச்சனை வந்தால் அதை பேசி பேசி தீர்க்க முயற்சிப்பார்கள், பேச பழக மிக பிடிக்கும், பேசினால் மட்டுமே அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.

மனைவி பேசும் போது கணவன் பதில் கூறினால் பிடிக்காது, அமைதியாக கேட்கும் கனவனயே பிடிக்கும், ஆனால் எப்போழதும் இதை செய்து கொண்டே இருக்க ஆணுக்கு பிடிக்காது.

ஆனால் பெண் இன்னோரு பெண் பேசுவதை அமைதியாக கேட்க முடியும்.

15. ஒரு பெண்ணால் மட்டுமே ஆணை நல்லபடியாக பார்த்துகொள்ள முடியும்,உதவும் குணம் அதிகம், செவிலியர்கள்(நர்ஸ்) பணியை பெண்களே சிறப்பாக செய்வார்கள்.

இன்னும் பெண் மனதை பற்றி நான் ஆய்வு செய்த தகவல்கள் நிறைய உள்ளது அடுத்தடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

நன்றி..!

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஓம் அர்த்தநாரியே போற்றி

ஆத்ம அன்புடன் ஆத்ம நேசர்
ஸ்ரீ ஆத்மநேசம்.

குலதெய்வமும் தேவதைகளும்:-உயர் புண்ணிய லோக ஆத்மாக்கள் பல்வேறு வகையாக மனிதனுக்கு வழிகாட்டி உதவி வருகிறார்கள்.அதில் மிக முக...
03/02/2025

குலதெய்வமும் தேவதைகளும்:-

உயர் புண்ணிய லோக ஆத்மாக்கள் பல்வேறு வகையாக மனிதனுக்கு வழிகாட்டி உதவி வருகிறார்கள்.

அதில் மிக முக்கியமான பந்தமாக குலதெய்வமும் அதை சார்ந்த தேவதைகளும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் மனிதர்களை இரச்சிக்க வேண்டி, இறையுணர்வு கொண்ட பெரியவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பரபிரம்மம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் போது, பூமியில் முதன் முதலில் பரபிரம்மத்தை உணர்ந்த மூன்று மனிதர்களிடம் இந்த பூமியை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்தது.

அவர்களே சிவன் விஷ்னு பிரம்மா, இந்த முப்பெரும் தேவர்களே பூமியின் இறைவனாக செயல்படுகிறார்கள்.

அதன் பின் மனித குலம் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தது,

சமவெளியை ஆதாரமாக கொண்டு வாழ தொடங்கிய மனிதர்களுக்கு வழிகாட்ட ஸ்ரீ அகத்திய மாமுனி தேர்தெடுக்கப்பட்டார். இறையை சரியாக பின்பற்றியவர்கள் சித்தர்களாக ஞானிகளாக யோகிகளாக சுவாமிகளாக குலதெய்வமாக ஆகிறார்கள்.

பனி பிரதேசத்தை ஆதாரமாக கொண்ட மனிதர்களுக்கு வழிகாட்ட இயேசு பெருமான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வழியை சரியாக பின்பற்றி வாழ்ந்தவர்கள் இறைவனை அடைந்து புனித தந்தை (போப்) ஆகிறார்கள்.

பாலைவனத்தை ஆதாரமாக கொண்ட ஜீவன்களுக்கு வழிகாட்ட முகமது நபி பெருமான் வந்தார். அதன் வழிவந்த பலர் இறைவனை உணர்ந்து "அல்லாமா" ஆகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒர் மசுதியும் சர்ச்சும் இருக்கும் , அங்கே இறைவனை அடைந்த மனிதர் இருப்பார், அவர் உயிரோடு இருக்கலாம் அல்லது சமாதி ஆகி இருக்கலாம். அதை வணங்கும் அந்தந்த குடும்பத்திற்கு அந்த மசுதியும் சர்ச்சுமே குல தெய்வமாக செயல்படும், கிருஸ்துவர்களுக்கு இயேசுவே இஸ்லாமியர்களுக்கு அல்லாவே குலத்தை காத்த குலதெய்வமாக பெரும்பாலும் இருக்கிறார்கள்.

தெய்வங்கள் அனைவரையும் பரபிரம்மம் கண்காணித்து வழிநடத்துகிறது.

இந்து மதத்தில் (சிவன் விஷ்னு பிரம்மன் அம்சத்தில் பிறந்த மனிதர்கள் குல தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்) ஒவ்வொரு தனிதனி ஊரிலும் குலதெய்வம் என்ற பந்தம் மூலம், ஒவ்வொரு தனி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு,
வழிகாட்டப்படுகிறது.

ஒரு உயிர் இறைவனை அடைய இரேழ(14)ஜென்மங்கள் தரப்படுகிறது. ஒரு ஜென்மத்திற்கு 7 பிறவி.

14×7 = 98 பிறவிக்குள் புல்லாக பிறந்த உயிர் மனிதனாகி தேவனாகி இறைவனை அடைய வேண்டும். 98 பிறவி என்பது அதிகபட்ச வாய்ப்பு, அதற்குள் இறைவனை அடைபவர்கள் பாக்கியசாலிகள்.

இறைவனை அடைந்தவர்கள் பரபிரம்மத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜீவராசிகளுக்கு வழிகாட்டுகிறார்கள். குலதெய்வமாகிறார்கள்.

ஒரு குலத்தை காக்க அரிய செயல்களை செய்த புண்ணியவான்களே குலதெய்வம் ஆகிறார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்புண்ணிய லோக ஆத்மாக்களே குலதெய்வமாகும்.

மதுரையை காத்த வீரனே - ஸ்ரீ மதுரை வீரன்

உப்புசந்தை என்ற வறண்ட நிலத்திற்கு மழையை கொண்டுவந்த தாயே - ஸ்ரீ உப்புசந்தை மாரியம்மன்.

கயவர்களையும் அக்கிரமக்காரர்களையும் அழித்த போர் வீரங்கனையே- என் அன்பு தாயார் ஸ்ரீ காளி தேவி

ஐந்து ஆறு பிரதேச நிலங்களை காத்த வீரனே - ஸ்ரீ ஐயனார்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் தர்மத்தை நிலைநாட்ட அரிய பெரிய காரியங்களை செய்த மகா தைரியசாலியே - ஸ்ரீ கருப்பு சாமி.

இப்படி ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒர் குலதெய்வம் உருவாகி மக்களை காக்கிறார்கள்.

எவன் ஒருவன் சரியான வழியில் நடந்து குலதெய்வத்தை வணங்குகிறானோ அவன் இறைவனை அடைவான். இது சத்தியவாக்கு..!

உயிர்களை முறைப்படுத்தி காக்க அமைக்கப்பட்ட அற்புத ஏற்பாடே குலதெய்வ வழிபாடு..!

The worship of family deities is a wonderful arrangement set up to regulate and protect lives..!

அதை புரிந்து நடந்துகொள்வதே அனைவருக்கும் நல்லது..!

#எல்லாம்நன்மைக்கே

#ஓம்சிவயநம

# ஓம் ஸ்ரீ உப்புசந்தை மாரியம்மன் தாயாரே போற்றி..!

புண்ணிய ஆத்மாக்களின் புகழ் எட்டுதிக்கும் பரவட்டும்..!

ஆத்ம அன்புடன் ஆத்ம நேசர்
ஸ்ரீ ஆத்மநேசம்

பாவ புண்ணிய மார்க்கம்:-ஒரு இடத்தில் இருக்கு அதிர்வலைகளுக்கு ஏற்றாற் போல அங்கே இருக்கும் ஆவிகளின் தன்மையும் மாறுகிறது.மது...
28/01/2025

பாவ புண்ணிய மார்க்கம்:-

ஒரு இடத்தில் இருக்கு அதிர்வலைகளுக்கு ஏற்றாற் போல அங்கே இருக்கும் ஆவிகளின் தன்மையும் மாறுகிறது.

மதுபான கடைகளில் தீய எண்ணங்களும் பாவ அலைவரிசைகளும் நிறைந்திருக்கும், ஆக அதற்கு தக்கபடி அங்கே தீய ஆவிகள் நிறைந்திருக்கிறார்கள். அங்கே செல்லும் மனிதர்களை அந்த தீய ஆவிகள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள், பாவ மார்க்கத்தில் செல்ல தூண்டுகிறார்கள், சில அதில் வெற்றிபெறுவதுண்டு.

அதில் சிலர் சிக்கி தவிப்பார்கள், தீராத துன்பத்தில் தவிப்பார்கள், ஏன் இப்படி நடக்கிறது என அவர்களுக்கு புரிவதற்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள், இறந்த அந்த மனிதனின் தீய ஆத்மா அடுத்த மனிதனுக்கும் அதையே செய்கிறது, இது ஓர் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே செல்கிறது. பாவ மார்க்கம் வளர்கிறது. இதில் தப்பி பிழைப்பது சிலரே.

ஒரு கோவிலில் நல்ல எண்ணங்களும் புண்ணிய அலைவரிசைகளும் நிறைந்திருக்கும், ஆக அங்கே புண்ணிய ஆத்மாக்கள் நிறைந்திருக்கிறார்கள். அங்கே செல்லும் மனிதர்களை அந்த புண்ணிய ஆவிகள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள், புண்ணிய மார்க்கத்தில் செல்ல தூண்டுகிறார்கள், சில அதில் வெற்றிபெறுவதுண்டு.

அதில் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், திகட்டாத இன்பத்தில் நிறைந்திருப்பார்கள், ஏன் இப்படி நடக்கிறது என இறைவன் அவர்களுக்கு புரிய வைப்பார், புண்ணிய காரியங்கள் செய்து தர்ம பாதையில் நடந்து புண்ணியவானாக வாழ்வார், சமாதிக்கு பின், புண்ணிய ஆத்மாவாக மாறி, அடுத்த மனிதனுக்கும் அதையே செய்கிறார்கள், இது ஓர் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே செல்கிறது.
புண்ணிய மார்க்கம் வளர்கிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுவது சிலரே.

நீங்கள் கோவிலுக்கு செல்ல போகிறீர்களா? அல்லது மதுபான கடையா? என்பதே இறைவன் உங்களிடம் வைக்கும் கேள்வி???.

* The ball is in your court..! *

சரியான முடிவை எடுங்கள்..!

நல்லதே நடக்கும்..!

#எல்லாம்நன்மைக்கே
#எல்லாம்ஆத்மமயம்
#ஓம்சிவயநம

ஆத்ம அன்புடன் ஆத்மநேசர்
ஸ்ரீ ஆத்மநேசம் - 97912 19336

*Fb small Talk (கோவை) :-விண்ணுலகம் சென்ற உங்கள் முன்னோர்களின் ஆத்மாக்களுடன் வேறு மீடியங்கள் மூலம் பேசுவதற்கு செய்ய வேண்ட...
26/01/2025

*Fb small Talk (கோவை) :-

விண்ணுலகம் சென்ற உங்கள் முன்னோர்களின் ஆத்மாக்களுடன் வேறு மீடியங்கள் மூலம் பேசுவதற்கு செய்ய வேண்டியவை:-

குருவே சரணம்!
எல்லாம் ஆத்மமயம்!
சிவ சிவ!
எல்லாம் நன்மைக்கே!

படிவம்:-

1- விண்ணுலகம் சென்றவரின் முழபெயர் :-

2- இறந்த தேதி :-

3- அவரின் புகைப்படம் :- (புகைப்படத்தை, செல்போன் போட்டோ, அல்லது பிரேம் செய்த போட்டோ, இதில் ஏதாவது ஓருவகையில் சமர்பிக்கவும்)-

4- அவரிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை இங்கு எழதவும், Text message Or பேப்பரில் எழதி போட்டோ எடுத்து அனுப்பலாம், ( 10 கேள்விகள் வரை எழதலாம்! கேள்விகள் பணிவோடு, புரியும் படி தெளிவாக எழதுவது அவசியம்!

ஏனெனில்,கேள்விகளை தெளிவாக எழதினால் தான், ஆத்மாக்களிடமிருந்து பதில்களை தெளிவாக பெறமுடியும் !)

1-

2-

3-

4-

5-

6-

7-

8-

9-

10-

=> நீங்கள் நேரிலும் வரலாம், What's app or phone மூலமும் தகவல் பெறலாம்!

*For practice (கோயம்பத்தூர்)நீங்கள் ஆத்மாக்களுடன் பேசும் புனிதமான மீடியம் கலையை கற்க, ஆவியுலக ஆய்வு மையத்திற்கு நேரில் வ...
23/01/2025

*For practice (கோயம்பத்தூர்)

நீங்கள் ஆத்மாக்களுடன் பேசும் புனிதமான மீடியம் கலையை கற்க, ஆவியுலக ஆய்வு மையத்திற்கு நேரில் வந்து மந்திர தீட்சை பெறுவது மிக அவசியம்.

மொத்த பயிற்சி காலம் 60 நாட்களை கொண்டது!

குருவே சரணம்!!!
எல்லாம் ஆத்மமயம்!!!
சிவ!!சிவ!!
எல்லாம் நன்மைக்கே!!!

தொலைபேசியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, கண்டிப்பாக தீட்சை வழங்க இயலாது, ஏனெனில் நேரில் வந்து தீட்சை பெற்றால் தான் இப்பயிற்சி சரியாக புரியும், தெளிவாக கற்க முடியும். தீட்சை பெற்ற பிறகு அடுத்த 59 நாட்களும் நீங்கள் வீட்டில் இருந்தே தொலைபேசி மூலமே பயிற்சியை பெறலாம்! ஆனால், முதல் நாள் கண்டிப்பாக நேரில் வந்துதான் ஆக வேண்டும், சில சூழ்சம மந்திரங்களை, அதே சரியான பீஜ ஒலியில், குரு சிஷ்ய முறையில் தான் பகிர முடியும்,

ஆத்மாக்களுடன் பேச வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் இருந்தால் போதும் மீடியம் பயிற்சி பெறலாம். பயிற்சி பெற இது தான் தகுதி.

உங்கள் மீடியம் சக்தியின் அளவு, மற்றும் உங்களின் வழிகாட்டும் ஆத்மாவின் பெயர், ஆகியவற்றை பூஜையில்,மந்திர சித்தர்களின் ஆன்மாக்கள் நமக்கு கண்டறிந்து கூறுவார்கள்!

தீட்சை பெற்று, தீய ஆத்மாக்களும் தீய சக்திகளும் , நம்மை பாதிக்காதவாறு, நம்மை பாதுகாக்கும், மந்திர நெருப்பு வீபுதி கட்டு மந்திரத்தை, நம்மை சுற்றி போட்டுகொண்டு,நீங்கள் பயிற்சி ஆரம்பித்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே,நீங்கள் உங்கள் வழிகாட்டும் புண்ணிய லோக ஆத்மாவை, உறுதிசெய்து, டெலிபதி (mind waves power) மூலம் பேச ஆரமித்துவிடுவீர்கள்,
மீடியம் பயிற்சி, என்பது ஓரு மேம்பட்ட தியான பயிற்சியே ஆகும்! தினசரி 20 நிமிடங்களாவது பயிற்சி செய்வது அவசியம்!

இப்பயிற்சி ஜந்து படிநிலைகளை கொண்டது,( Levels):-

1- முதல் நிலையில்,ஆத்மாகளுடன் டெலிபதி மூலம் பேசலாம்!
2- ல்,ஆத்மாகளின் புகைப்படம் நம் மன திரையில் தோன்றும்!
3- ல்,ஆத்மாகளின் செயல்பாடுகள் வீடியோ படம் போல நம் மனதிரையில் உண்டாகும்!
4- ல்,ஆத்மாக்களின் குரல் அசரிரீ போல் நமக்கு கேட்கும்!
5- ல்,நம் மன கண்களால் பார்த்து நேரடியாக பேசலாம்!

இப்பயிற்சி 4 பிரதான முறைகளை கொண்டது,

1 Method- டெலிபதி முறை!
2- ஆட்டோ ரெயிட்டிங் முறை!
3- ஓய்ஜா போர்டு முறை!
4- மயக்க நிலை பேச்சு முறை!(ஆத்மாக்களை உடலில் இறக்கி பேசும் Trading method)

மேலும் தகவல்களுக்கு கிளை
முகவரி:

Coimbatore address :-

15/23-1 சாஸ்திரி வீதி, லெட்சுமி நகர், ஒத்தகால்மண்டபம், மில்கேட், கிணத்தகடவு அருகில், கோயம்பத்தூர் மாவட்டம். 641 032.

Google map location :-

https://maps.app.goo.gl/NLjVcSQFfYpUuD1y9

#95241 81931(what's app only)

#971219336(phone & what's app)

Youtube & Google & facebook :-

Search

ramani mayiladuthurai

ஆத்மாக்களை பற்றியும் நம் மையத்தை பற்றியும் மேலும் அதிக தகவல்களை பெற Ramani mayiladuthurai என Youtube மற்றும் Google இல் டைப் செய்து தேடவும் வீடியோ மற்றும் எழத்து பதிவுகளை நீங்கள் பார்க்கலாம்..!

ஓம் காளி தேவியே போற்றி!!போற்றி!!

ஓம் புண்ணிய ஆத்மாக்களே போற்றி!! போற்றி!!

சிவ!! சிவ!! சிவா!! சிவா!!சிவயநம!!!

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

ஆவியுலகை புரிந்துகொள்ள:-நீங்கள் ஆவிகளை பற்றியும் ஆவிகள் உலகத்தை பற்றியும் முழமையாக புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால் அத...
17/01/2025

ஆவியுலகை புரிந்துகொள்ள:-

நீங்கள் ஆவிகளை பற்றியும் ஆவிகள் உலகத்தை பற்றியும் முழமையாக புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால் அது சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் அதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.

புத்தகங்களும் பதிவுகளும் இதை பற்றிய அறிவை மட்டுமே வளர்க்கும்.பொழது போகும். ஆனால் அனுபவத்தில் ஆவிகளோடு பேச யார் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ, அவர்களுக்கே ஆவியுலகத்தை பற்றிய புரிதல் கிடைக்கும்.

சர்க்கரை இனிப்பாக இருக்கும் என்பது புத்தகத்தில் உள்ள தகவல், அதை சாப்பிட்டு பார்த்தால் தான் இனிப்பு என்ற சுவை புரியும், அது தேனை விட குறைவான இனிப்பு என்பது புரியும், புத்தகம் அறிவை வளர்க்கும், அனுபவமே ஆசானாகும், அதுவே அதை பற்றிய முழ புரிதலையும் ஞானத்தையும் வழங்கும்.

"எட்டு சுரக்காய் கறிக்குதவாது" என்று சும்மாவா சொன்னார்கள். அதில் ஆயிரம் அர்த்தமுள்ளது.

ஆவிகள் உணர்வுமய லோகத்தை சேர்ந்தவர்கள். முழ உயிரோடு உணர்வோடு இருக்கும் ஆன்மாக்களோடு மட்டுமே அவர்கள் உறவாடுவார்கள்.

உணர்வுகள் இறந்த பிணங்கள் அவர்களை அறியவே முடியாது..!

ஆவிகளை உணர உயிரோடு இருங்கள் நிச்சயம் அவர்களை உணரலாம்..!

அடுத்தடுத்த பதிவில் இன்னும் சொல்கிறேன்..!

#எல்லாம்நன்மைக்கே

#எல்லாம்ஆத்மமயம்

#ஓம்சிவயநம

#ஆத்மஅன்புடன் ஆத்மநேசர்
ஸ்ரீ ஆத்மநேசம்

Address

Mayiladuthurai

Telephone

+919524181931

Website

Alerts

Be the first to know and let us send you an email when மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani:

Share