விவசாயம்,மீன் வளர்ப்பு கோரம்பள்ளம் தூத்துக்குடி

  • Home
  • India
  • Tamizhagam
  • விவசாயம்,மீன் வளர்ப்பு கோரம்பள்ளம் தூத்துக்குடி

விவசாயம்,மீன் வளர்ப்பு   கோரம்பள்ளம் தூத்துக்குடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விவசாயம்,மீன் வளர்ப்பு கோரம்பள்ளம் தூத்துக்குடி, Business service, தூத்துக்குடி, Tamizhagam.

25/03/2020
ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செ...
13/03/2020

ஆட்டு எரு ஓர் சத்துமிக்க இயற்கை உரம்

நம் நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க நாம் பயன்படுத்தும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களே நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ரசாயன உரங்களின் விலையும் இப்பொழுது வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உரங்கள் இட்டு உற்பத்தி செய்த காய்கறிகளை அதிக விலைகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், செயற்கை உரம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதுதானே. இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் போக்க இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம்தான் ஆட்டு எருவாகும்.
ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு, ஒரு வருடத்திற்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு தயார்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப்புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப் படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களை குதிரைமசால், முயல்மசால், வேலி மசால், சுபாபுல், தட்டைப்பயறு போன்ற தீவனங்களை அளித்தால் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணூட்டச் சத்துக்களும் தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச்சத்தும், 0.4 சதம் மணிச்சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. மேலும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகிறது.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் பண்ணலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்பவேண்டும். அவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆழ்கூள முறையை பொறுத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல்சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன?உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் எருவை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்துவிதமான வேளாண் பொருட்களுக்கும் பயன் படுத்தினால் அதிக லாபத்தையும் அடையலாம். ரசாயன கலப்படத்தை தடுத்து உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ஆகவே ஆட்டு எருவினை முறையாக பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம். நமது நாடும் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

29/05/2018

*90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?*
(இலவச ஒரு நாள் களப்பயிற்சி)

முன் பதிவு அவசியம்

நாள்:
02.06.2018 சனிக்கிழமை,
03.06.2018 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

இடம்: கண்ணனூர் (அரசு உயர்நிலை பள்ளி பின்புறம் மற்றும் மினரல் வாட்டர் கம்பெனி எதிர்புற தோட்டத்தில்),
துறையூர் தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

மதிய விருந்து நடைபெறும்.

பேருந்து :

* திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் -> துறையூர் -> கண்ணனூர் (முசிறி அல்லது நாமக்கல் பேருந்து)
* நாமக்கல் -> துறையூர் செல்லும் வழியில்

தொடர்புக்கு:

திருச்சி
ராஜாமணி: 99444 09719
மதுரை
செந்தூர் பாண்டியன்: 88704 91965
திருநெல்வேலி
பூவலிங்க பாண்டியன் 95432 06060
திண்டுக்கல்
கண்ணன்: 97878 70887
அரியலூர்
இளவரசன் :90474 40627

நன்றி

🌱🌴🌳🌲☘🍀இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு.வளர்ந்த பிறகு குழி தோண்டி அப்படியே புதைச்சிடலாம்!பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்!
14/02/2018

🌱🌴🌳🌲☘🍀
இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு.

வளர்ந்த பிறகு குழி தோண்டி அப்படியே புதைச்சிடலாம்!
பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்!

Ideas for those who like farms 🐓
24/01/2018

Ideas for those who like farms 🐓

21/01/2018

🔯இயற்கை மருத்துவம்🔯
Castro ~

முடக்கத்தான் கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

🔯⚜🌸🌹🍓🌹🌸⚜🔯

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி,கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும், கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது.பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கற்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம்,மூட்டுவலியை குணப்படுத்தும்.

இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம்.40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

இதனைச் சாப்பிட தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். அனல் பயப்பட தேவையில்லை.

தொடர்ந்து சாப்பிடலாம்.மூளைக்கு பலம் தரும். பச்சைக்கீரை கொஞ்சம் கசக்கும் ஆனால் சமைத்த பிறகு அவ்வளவாகத்தெரியது. இதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து சிறுநீரக அதை வெளியேற்றி விடும். இது போல் எடுத்து சென்று சிறுநீரக வெளியேற்றும்போது,அது சோடியம் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டுவிடுகிறது. இதனால் நமது உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான்
கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையை கொதிக்கவைத்து உண்ணக்கூடாது

அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்கவைப்பதன் மூலம் அழிந்து விடும்.

🔯இயற்கை மருத்துவம்🔯

Address

தூத்துக்குடி
Tamizhagam
628008

Website

Alerts

Be the first to know and let us send you an email when விவசாயம்,மீன் வளர்ப்பு கோரம்பள்ளம் தூத்துக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share