Aatrupadai

Aatrupadai யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த  நம...
31/05/2026

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த நமது கொடைக்கானல் வரலாற்று மரபு நடை - நாள் 2

Bala Bharathi திருச்சி பார்த்தி

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த  நம...
31/05/2026

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த நமது கொடைக்கானல் வரலாற்று மரபு நடை - நாள் 2

Bala Bharathi திருச்சி பார்த்தி

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த  நம...
30/05/2026

நமது ஆற்றுப்படையின் 36 ஆவது பயணம்: வரலாறு, மரபு, பண்பாடு, தொன்மங்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் வழியாக நிகழ்ந்த நமது கொடைக்கானல் வரலாற்று மரபு நடை - நாள் 1
Bala Bharathi திருச்சி பார்த்தி

29/05/2026

கொடும்பாளூரிலுள்ள முதுகுந்தீஸ்வரர் கோவில், இருக்குவேள் தலைவர்களும் ஆரம்பகால சோழர்களும் சார்ந்த வரலாற்றை அறிய ஒரு முக்கியச் சான்றாக விளங்குகிறது.

முதலாம் பராந்தக சோழனின் 14ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, “மகிமாலய இருக்குவேள்” என அழைக்கப்பட்ட “பராந்தக வீரசோழன்” என்ற “குஞ்சரமல்லன்”, திருப்புடீஸ்வரம் கோவிலின் அர்ச்சகர்களை புதிதாக நிறுவப்பட்ட “முதுகுந்தமுடையார்” கோவிலில் பூஜை நடத்த நியமித்ததை பதிவு செய்கிறது. இதன் மூலம் திருப்புடீஸ்வரம் என்பது தனித்துவமான, வேறுபட்ட கோவில் என்பதும் தெளிவாகிறது.

மேலும், மகிமாலய இருக்குவேள் முதலாம் பராந்தக சோழனும் கந்தராதித்த சோழனும் (கி.பி. 950–956) ஆட்சி செய்த காலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கின்றன. இதனால், இந்தக் கோவில் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உருவானதாக அறியப்படுகிறது.

மத்திய கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் அதிஷ்டானத்தில் பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு, “ராஜகேசரிவர்மன்” என அழைக்கப்படும் இரண்டாம் பராந்தக சுந்தர சோழன் (கி.பி. 957–970) காலத்தைச் சார்ந்ததாக அடையாளம் காணப்படுகிறது. அந்த கல்வெட்டில் சிலருக்கிடையிலான தகராறு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கொடும்பாளூரின் இரண்டு நகரங்களின் சபை ஒன்று கூடி அதற்குத் தீர்ப்பு வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டின் மற்றொரு சிறப்பு, அரச அரண்மனையில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருப்பதாகும். இது சோழர் கால நிர்வாக அமைப்பைப் பற்றிய அரிய தகவல்களை நமக்கு வழங்குகிறது.

அதிலும் முக்கியமாக, சுந்தர சோழனின் பெயர் கல்லில் நிலைத்திருப்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், சோழ வரலாற்றின் புகழ்பெற்ற அரசர்களில் ஒருவரான சுந்தர சோழருடன் இந்த அற்புதமான நினைவுச் சின்னம் நேரடியாக இணைக்கப்படுகிறது.

திருச்சி பார்த்தி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள சன்னியாசிப் புடவு எனப்படும் குகையில் காணப்படும் மர்மமான கல்வெட்டு நூற்றா...
26/05/2026

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள சன்னியாசிப் புடவு எனப்படும் குகையில் காணப்படும் மர்மமான கல்வெட்டு நூற்றாண்டுக்கும் மேலாக வாசிக்கப்படாமல் இருந்தது. 1917 ஆம் ஆண்டு வெளியான Tinnevelly Gazetteer உள்ளிட்ட ஆவணங்களில் இந்த கல்வெட்டு குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எழுத்துக்களை யாராலும் உறுதியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆய்வாளர்களான கே. பாலகிருஷ்ணன் மற்றும் மதுர் பி. பாவேந்தன் ஆகியோர் சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆய்வு செய்து, கல்வெட்டில் உள்ள 15 குறியீடுகளில் 14 குறியீடுகள் பிராகிருதப் பிராமி எழுத்து அடிப்படையில் அமைந்தவை என்றும், தமிழ்ச் சொற்களை பதிவு செய்ய மாற்றியமைக்கப்பட்ட எழுத்துமுறையைப் பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கினர்.

Bala Bharathi திருச்சி பார்த்தி

Article Detail:

https://tholthadam.in/article/reading-sanyasi-pudavu-inscription-at-tenkasi-district-tamil-nadu/bu07y814v7jx4k572qsy55zm

https://www.youtube.com/watch?v=moH8cfwupUUநூறாண்டுக் கால மர்மம் விலகியது: குற்றாலம் 'சன்னியாசிப் புடவு' கல்வெட்டு படிக்...
22/05/2026

https://www.youtube.com/watch?v=moH8cfwupUU

நூறாண்டுக் கால மர்மம் விலகியது: குற்றாலம் 'சன்னியாசிப் புடவு' கல்வெட்டு படிக்கப்பட்டது.

குற்றால மலைப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் படிக்கப்படாமல் இருந்த 'சன்னியாசிப் புடவு' கல்வெட்டு வாசித்து அறியப்பட்டுள்ளது. குற்றாலநாதர் கோயிலில் இருந்து பேரருவி வழியாக, சுமார் 1000 மீட்டர் உயரத்தில் கடினமான மலைப்பாதையில் 5.5 கி.மீ பயணித்தால் இந்தக் குகையை அடையலாம். செண்பகாடவி அருவி, தேனருவிக்கு மேலே யானைப்பாதைகள் நிறைந்த அடர்ந்த காட்டினுள் சுமார் 30 மீட்டர் நீளமும், 5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த இரண்டடுக்குக் குகை அமைந்துள்ளது.
இந்தக் குகையின் நீண்ட முன்சுவரில் தலா ஐந்து எழுத்துகள் வீதம் மூன்று வரிகளில் மொத்தம் 15 எழுத்துகள் மிகவும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் செதுக்கப்பட்டுள்ளன. 1917-ஆம் ஆண்டிலேயே ஆங்கில அரசு ஆவணங்களில் இக்குகையைப் பற்றிய குறிப்புகள் இருந்தபோதிலும், இந்த எழுத்துகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்பதை இதுவரை முழுமையாக யாராலும் கண்டறிய முடியவில்லை.

தொல்லியலாளர்கள் இவற்றைச் சிந்துவெளி எழுத்துகளின் தொடக்க நிலை அல்லது பிராமி எழுத்துகளின் முந்து வடிவம் என்ற கருத்துகளை முன்வைத்தனர். ஜப்பானிய அறிஞர் பன்மொழி வல்லுந‌ர் ஹிக்கசோக்கா போன்றோரும் இதன் பொருளை முழுமையாக உரைக்க முடியவில்லை.
இந்நிலையில், இரண்டரை ஆண்டுகாலத் தொடர் ஆய்விற்குப் பிறகு, திருச்சி தொல்லியல் ஆய்வறிஞர் பாலகிருஷ்ணன் (பாலா பாரதி) மற்றும் மாத்தூர் பாவேந்தன் ஆகியோர் இக்கல்வெட்டை வெற்றிகரமாக வாசித்துள்ளனர்.

"இதில் உள்ள 15 எழுத்துகளில் 14 எழுத்துகள் பிராகிருத பிராமி எழுத்துகளின் அடிப்படை வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால், வழக்கமான ஒலிக் குறிப்பான்களைப் (Diacritic marks) பயன்படுத்தாமல், ஒரு புதிய முறையைக் கையாண்டுள்ளனர். ஒலிக் குறிப்பான்களின் புதிரை கணித முறையில் தீர்த்தபோது படிக்க முடிந்தது.

Bala Bharathi திருச்சி பார்த்தி

நூறாண்டுக் கால மர்மம் விலகியது: குற்றாலம் "சன்யாசிப் புடவு" ' கல்வெட்டு படிக்கப்பட்டது.குற்றால மலைப்பகுதியில் .....

20/05/2026

கொடைக்கானல் மரபுநடையில் உங்களுக்கென காத்திருக்கும் கற்றல்!
Part 4

Solar Observatory

Bala Bharathi திருச்சி பார்த்தி

18/05/2026

பண்ணைக்காடு பெருங்கற்கால சின்னங்கள் :

கொடைக்கானல்-தாண்டிக்குடி செல்லும் வழியில் உள்ளது பண்ணைக்காடு கிராமம். இப்பகுதியில் பொதுவழிச்சாலையிலிருந்து சற்று விலகிச் சென்றால் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு (?) வரும் அரிதான பெருங்கற்படை மக்களின் நினைவுச்சின்னங்கள் உள்ளது. தொல்லியல் சின்னத்தின் சில சிறப்புகளை காண்போம்.

கற்திட்டைகள்

இவ்விடத்தில் மிகப் பிரம்மாண்டமான கற்திட்டைகள் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் யாதெனில், இக்கட்டிடத்தை சற்று ஆழ்ந்து யோசித்தால், ஒரு நெறிமுறையை உருவாக்கி, வழிபடும் தன்மையுள்ளபடி ஓர் நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தியதே,

தஞ்சை கோவிலை கட்டிய பொறியாளர் குஞ்சர மல்லன், எவ்வாறு ஒரு கற்பனையை தன் மனதில் உருவாக்கி, அதனை செயல்படுத்தினாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்த பெருங்கற்படை சின்னம் எழுப்பிய நமது பெருந்தச்சரின் செயல்திறனும், ஒரு பார்வையாளனாக அவரது செயல்திறனை ஆராய்தல் அவசியம்.


முதலில் இம்மலை மீது அமைந்துள்ள நினைவுச்சின்னங்களை அமைக்க
சற்று சரிவான அந்த மலைப்பகுதியை சமன் செய்து, அதன்மீது உறுதியான கற்களைக் கொட்டி அதன் தளத்தினை முதலில் உயர்த்தியுள்ளனர். (மாடக்கோவில்கள் கட்டுவதைப் போன்று) அதன் மேலே உயரமாக கற்திட்டைகளை வைத்துள்ளனர். தொலைவிலிருந்து வருபவர்கள் பார்த்து அறிந்து கொள்ளவும், உள்ளே இருப்பவன் என் தலைவன் என பிற குடியினர் அறிந்துகொள்ளவும் அமைத்துள்ளனர் போலும், இக்கல்திட்டைகள் அமைந்துள்ள கருவறை போன்ற பகுதி வட்டவடிவில் அமைந்துள்ளது. இதனை போன்று அமைந்துள்ள கோவில்களை கட்டிடக்கலை ஆகமநூல்கள் சுத்த வேசரம் என்கிறது. கருவறை வெளியே பிரம்மாண்டமாக வட்டவடிவில் ஓர் திருச்சுற்று அமைத்துள்ளனர். இத்திருச்சுற்றிற்கும், இந்த கருவறைக்கும் உள்ள இடைவெளியில், சுற்றி வலம் வருவது போன்ற ஓர் அமைப்பும் உருவாக்கியுள்ளனர். மலையின் சமதளத்திலிருந்து வாயிலின் முன்புறம் ஏறிச்சென்று உள்ளே உள்ள தலைவனை வணங்குவதற்கு ஏதுவாக படிக்கட்டு போன்ற அமைப்பும் அமைத்துள்ளனர்.

இதுவல்லவோ கோவிலின் முன்னோடி என கூறமுடியும். இதனை உருவாக்கியவனே அன்றைய பொறியாளனாக இருக்க முடியும். இதன் உள்ளே உறைபவனே வள்ளுவர் கூறும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

எனும் தெய்வமாக இருக்க முடியும்.

திருச்சி பார்த்தி

Address

Plot. No. 52, Lakshmi Nagar, Poolangudy Colony
Tiruchirappalli
620025

Alerts

Be the first to know and let us send you an email when Aatrupadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aatrupadai:

Share