Hand Sanitizer Pet Bottles Manufacturers

Hand Sanitizer Pet Bottles  Manufacturers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hand Sanitizer Pet Bottles Manufacturers, Business service, Tiruchirappalli.

Our company 90 47 84 84 84 AND 76 39 54 54 54 PET BOTTLES MANUFACTURERS has acquired one of the topmost names in the industry for pet bottles manufacturing, whole selling


90 47 84 84 84
76 39 54 54 54
96 55 84 84 84
93 67 54 54 54

❣️ சுய பரிசோதனை.....எல்லோருக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியதாக கூட இருக்கலாம்.....நான் யாரு...  ?என் தகுதி என்...
18/01/2024

❣️ சுய பரிசோதனை.....

எல்லோருக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியதாக கூட இருக்கலாம்.....

நான் யாரு... ?
என் தகுதி என்ன ன்னு..?

எனக்கு நல்லாவே தெரியும்...
எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது.... என்பதை இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய மனம் தான்....

ஆனாலும் உணர்ச்சிபூர்வமாக எப்பொழுதுமே யாருக்கு ஏதாவது ஒரு நல்லது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருப்பதனால்,

அதை வார்த்தைகளாக வெளிப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் ஜீவன்களில் நானும் ஒருவன்...... ஆனாலும் அது பிடித்திருக்கிறது....

எல்லாருடைய சுய ரூபங்களும் வெளிவருவதற்கு அளவுகோல் நமது கஷ்டங்கள் தான்...

இது எல்லாம் தெரிந்து கொண்டும் ஏதாவது ஒன்று நல்லது என நினைத்து அவசரப்பட்டு போய் செய்துவிட்டு அசிங்கப்பட்டு நிப்பேன்.

இப்படிலாம் நடக்கும்ன்னு தெரிஞ்சும், எதிர்பார்த்தும் அதை செய்து விடுவேன்....

இதுதான் என்கிட்ட உள்ள மிகப்பெரிய மாற்றிக் கொள்ள முடியாத பிரச்சனை..

என்றோ ஒருவருக்கு நமது செயல்கள் காலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பயன் கிடைக்கிற பொது நமக்கு ஏதாவது முக்கியத்துவம், கிடைக்காதா ன்னு சின்ன அன்பு, எதிர்பாரப்புகள் தான்.

இதுமாதிரி சூழ்நிலைகளை உருவாக்குகிறது.....

அதற்காக என் வாழ்நாளில் நான் இழந்தது மிகப்பெரியது...

ஒட்டுமொத்தமாக என்னவோ நான் பெற்றது தான் அதிகம்

எப்பவுமே நான் ஊன்றுகோளாகத்தான்
இருந்திருக்கேன்.. என்று ஆழ்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது...

அது எனக்கே தெரியும். எல்லாம் தெரிஞ்சும் அளவுக்கு மீறின எதிர்பார்ப்புகளை வைத்தால் இதுமாதிரி அவமதிப்புகளையும், இழப்புகளையும், அவமானங்களையும் சந்திச்சு தான் ஆகனும்.

இவைகளையெல்லாம் மாற்றிக் கொள்வேனா.... அதற்கான வாழ்வில் காலம் மிச்சம் இருக்கிறதா....?

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

குமார் கன்னையன்., கடலூர்

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

2023 செல்ஃபி ...தொடர் 3🔹🔹🌸🔹🔹🌸🔹🔹அடுத்த நொடி நமக்கு இல்லை.... என்றால் நாம் என்ன செய்ய வேண்டுமோ அல்லது என்ன சொல்ல வேண்டுமோ,...
02/01/2024

2023 செல்ஃபி ...தொடர் 3

🔹🔹🌸🔹🔹🌸🔹🔹

அடுத்த நொடி நமக்கு இல்லை.... என்றால் நாம் என்ன செய்ய வேண்டுமோ அல்லது என்ன சொல்ல வேண்டுமோ,

அதாவது மரண வாக்குமூலம் போல நமது வார்த்தைகளில், செயல்ககளிகளில் இருந்திட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம்.

செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே....

என்று தலைவன் தலைவிக்கு சொல்லப்பட்டது போல குடும்பம், நண்பர்கள், நல்ல அன்பு கொண்ட உள்ளங்கள், யாரிடமாவது அன்பினால் இரண்டற கலந்து மனம் ஒன்றுவிட வேண்டும்... அருள் புரிவாயாக இறைவனே...!

மீண்டும் ஒரு வாழ்க்கை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்.....என்று நினைக்கிறோமோ
அதை சொச்ச வாழ்வில் செய்துவிட முயற்சிக்க வேண்டும்....

அலைபேசியில் நோண்டி, நோண்டி, புத்தகங்களையும், இலக்கியங்களையும், கவிதைகளையும் கட்டுதுறை களையும் வாசிப்பதை குறைத்துக் கொண்டு,

புத்தகங்களை நேரடியாகவே படித்து மூழ்கி விட வேண்டும்... நிறைய புத்தகங்களாவது படித்து விட வேண்டும்...

ஒருவரை ஒருவர் மிஞ்சிவிட வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு, அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்திட வேண்டும்.... வரும் ஆண்டுகளில் அது சாத்தியப்படட்டும்....

இன்னொருவர் வாழ்வை வாழ்ந்து நமது வாழ்வை தொலைத்து விட்டு பயணத்தை பாதியில் முடிப்பது எந்த பலனும் இல்லை.... என்பதை உள் மனதிற்கு பதிய வைத்து 2024 ஐ தொடர்ந்திட வேண்டும்...

உலகம் முழுக்கவே
ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிக்க வேண்டும், என்பதை தவிர்த்து விட..

அவரவர்கள் நாட்டை அவரவர்கள் ஆண்டு மகிழ்ச்சியுடன் மக்கள் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்திட... பெரியண்ணாவும், பிரபஞ்சசக்தியும் துணை புரியட்டும்...

2024 இல் எந்த நாட்டில் எப்படி குழப்பம் விளைவிக்கலாம் என்பதை பெரியண்ணா என்ன யோசனை வைத்திருக்கிறார் என்பதை அவ்வப்போதுதான் தெரிந்து கொள்ள இயலும்....

இதனால் நமக்கு என்ன? என்று சொல்ல முடியாது .. பொருட்களின் விலை ஏற்றம் ,வியாபாரத்தின் உயர்வு தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , மனித மனோபாவங்களில் மாற்றங்கள்.....

எல்லாமே பெரியண்ணாவின் மனதில்தான் உள்ளது.... அவருக்கு வள்ளலார் கூறியதை ஒரு sms குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்..

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்.... வள்ளலார் என்று அனுப்பிவிட்டு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற செய்தியை பகிர்ந்து விட வேண்டும்....

பெரியண்ணா சூழ்ச்சி செய்து ஆயுதங்கள் விற்காமல் அன்பை விற்று ஆனந்தத்தை கொள்முதல் செய்ய ஆவன எல்லாம் வல்லவனிடம் நமது விருப்பத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்....

இந்த உணர்வை பெரியண்ணா புரிந்து கொள்ள கடவுளை தூது அனுப்பவோம்...

அண்டை நாடுகளும் கிடைத்தது போதும்... அமைதி வாழ்க்கையும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.. என்றும் அமைதியாக இருந்திட பிரார்த்தனை செய்வோம்....

ஊர் உலக பிரச்சனையை ..... நாட்டாமை வைத்து
"செல்லாது ....செல்லாது...... "
என்று கூற முடியுமா தெரியவில்லை....!?

🔸🔸▪️▪️🔸🔸

தேவைக்கு அதிகமாக பொருள்களை வாங்கி குவிப்பதை தவிர்த்து விட வேண்டும்..மினிமலிசம் என்பதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்மோடு தொழில் ரீதியாக பயணிக்கும் சிலருக்காவது நம்மை விட நல்லவாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

அது 2023 இல் சாத்தியமாயிற்று... 2024 இல் அதுவும் சிறப்பாக ஆகட்டும்...

எல்லோர் வாழ்விலும் அது நடந்தேறட்டும்...

ஆடு மாடு மேல உள்ள பாசம் ....ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க சொல்லும்... என்ற அளவிற்கு போக வேண்டாம், சற்று கரிசனமாவது எல்லா உயிர்களிடத்தும் வைத்துக் கொள்ள....இந்த ஆண்டு முதல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்...

2023 செல்ஃபி தொடரும்...

🔆🔆▪️▪️🔆🔆▪️▪️🔆🔆

குமார் கன்னையன்
கடலூர்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

ALL TYPES OF PET BOTTLES AVAILABLE
23/03/2020

ALL TYPES OF PET BOTTLES AVAILABLE

Address

Tiruchirappalli
620015

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Hand Sanitizer Pet Bottles Manufacturers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share