02/01/2024
❣️ புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️
2023 செல்ஃபி.... தொடர்.2
🔹🔹▪️▪️🔹🔹▪️▪️🔹🔹
ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்று ஆயிரம் மாற்றங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்...
*முதலில் நாம் மாற வேண்டும் தனி மனிதனாக... குடும்பத்தில் ஒருவனாக....சமூகத்தில் ஒருவனாக.... இந்த தேசத்தில் நல்ல பிரஜையாக... இந்த உலகத்தில் நல்லவனா க... பிரபஞ்சத்தில் நாம் சிறு துரும்பு என நினைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
சாலைகள் விதிகளை பின்பற்றாமல் எத்தனை பேர் எதிரில் வந்தாலும் வாழ்க வளமுடன் என வாழ்த்தி விட்டு...
நம்மால் சாலைக்கு இடையூறு வராமல் நாம் பயணத்தை மேற்கொள்ள மணப்பக்குவத்தை ஏற்படுத்தி வேண்டும்...
காக்கை குருவி எங்கள் சாதி.... என்று மனதில் நிறுத்தி எல்லா உயிர்க்கும் நல்லது நினைக்க வரும் ஆண்டுகளில் விடாப்பிடியாக பழகிக் கொள்ள வேண்டும்.
காடும் மலையும் நமது என நினைத்து இயற்கையை பாராட்ட பழகிக் கொள்ள வேண்டும்.
நல்ல நண்பர்களை தேடி பிடித்தாவது வாழ்வின் மிச்ச காலத்தை இணைந்து வாழ்ந்திட வேண்டும், இயைந்து வாழ்ந்திட வேண்டும்.. கிடைத்தால் நீங்கள் பாக்கியவான்கள்...
பிடித்த சிலவற்றை யாவது செய்திட வேண்டும்.
பிடித்த இனிப்பிற்காக ஏங்கி ஏங்கி பிடிக்காத கசப்பு பழகிக் கொள்ள வேண்டுமா? என்பதை வாழ்நாள் தீர்மானமாக அலசி ஆராய்ந்து முடிவு எடுத்து விட வேண்டும்.
இதையெல்லாம் செய்து விட வேண்டும் என்ற பட்டியலில் வாழ்நாள், சூழ்நிலையை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
வறட்சி இல்லாமல் மாரி அளவாய் பெய்து மக்கள் வளமாய் வாழ்ந்திட சங்கல்பம் செய்து விடுவோம்...
பொய்களைப் புறந்தள்ளி உண்மையை கண்டறிய எந்திரம் ஏதாவது கிடைத்து விடுமா... ? என்று இயங்கிக் கொண்டிருக்கையில், அனுபவ அறிவை கொஞ்சமாக பயன்படுத்தி இதை கண்டு பிடித்து விட ஆழ்மனதன் அறிவு துணை புரியட்டும்...
ஆரோக்கியத்தை இயற்கை வழியில் அடைந்திட வேண்டும் என்ற ஏக்கத்திற்காக மாற்று வழி வைத்தியம் என்ற பெயரில் தேடிக் கொண்டே இருப்பதை சற்று நிறுத்தி தெரிந்தவற்றை முறையாக, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழி வரும் ஆண்டுகளில் எடுக்க வேண்டும்...
ஆதிவாசி வைத்தியம்,கேரளா வைத்தியம், ரிப்லக்ஸ் சாலஜி , மசாஜ் சென்டர்களில் இயற்கை வைத்தியத்தை தேடுவது முட்டாள்தனம்.
தேடி அலைவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..... உண்மையை கண்டுபிடிப்பதற்கு மிக சிரமப்பட வேண்டி உள்ளது...
இயற்கை வைத்தியத்தில் எது நல்ல பயன் இருக்கிறதோ அவற்றை மட்டும் தொடர வேண்டும்.
இவைகளில் தான் நிறைய பொய்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டோமோ என்று மன உறுத்தலோடு இதை நிறுத்தி தவிர்த்து விட வேண்டும்.....
இங்கு மிகப் பெரும்பான்மையானது பொய்களே இருக்கின்றன என்பதை சிலரிடமாவது சொல்லிவிட வேண்டும்.
இன்றைய வாழ்நாள் வரை அனுபவத்தில் எத்தனை பேர் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, நாம் யாரையும் ஏமாற்றாத எண்ணத்திற்கு வாழ்நாள் உறுதி மொழியாக எடுத்து விட வேண்டும்....
குமார் கண்ணையன்
கடலூர்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️