Tiruttani Online

Tiruttani Online Help us to build Tiruttani Online website over the world.

Memorable moments 😄
04/06/2022

Memorable moments 😄

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் இயங்கி வரும் CREED(Centre for rural economic and educational development trust) அறக்...
02/04/2020

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் இயங்கி வரும் CREED(Centre for rural economic and educational development trust) அறக்கட்டளை சார்பாக (கொரோனா பருவுதலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கபட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை) 02/04/2020 முதல் உள்ளூரில் முகவரி இல்லாத ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்க உள்ளோம்,உணவு தேவைபடுவோர் எங்களை நேரில் அணுகவேண்டாம் 9962577373 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களை தேடி உணவு வரும்.

இங்கணம்
CREED அறக்கட்டளை
திருத்தணி.

திருத்தணியை தமிழகத்துடன் இணைந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது...1953ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போத...
01/04/2020

திருத்தணியை தமிழகத்துடன் இணைந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது...

1953ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது தமிழர்கள் அதிகம் வசித்து வந்த திருத்தணி தாலுகாவை பிரித்து ஆந்திராவுடன் இணைத்து விட்டனர்.

இதையடுத்து திருத்தணியை மீட்கும் போராட்டம் உருவெடுத்த்து. மல்லங்கிழார் என்பவரின் தலைமையில் இந்தப் போராட்டம் வெடித்த்து. பின்னர் மல்லங்கிழார் உயிர் நீக்கவே, மறைந்த ம.பொ.சிவஞானம் தலைமையில் போராட்டம் வீறு கண்டெழுந்த்து.
பலரின் உயிர் துறப்புகள், ஆவேசப் போராட்டங்கள் காரணமாக 1960ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு திருத்தணி மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதையடுத்து 1960ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திருத்தணியை தமிழகத்துடன் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் பக்தவச்சலம் திருத்தணி தாலுகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, விசா அப்ளிகேஷன் சென்டர், ...
01/04/2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விசா அப்ளிகேஷன் சென்டர், குட் ஷெப்பர்ட் பில்டிங், நெ.82, முதல் தளம், கோடம்போக்கம் பிரதான சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரிக்கு மார்ச் 15ஆம் தேதி சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் அந்த இடத்திற்கு அதே நாளில் சென்று வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்கை நிறுத்தினால் 6000 பேர் பாதிக்கப்படலாம்... ஊரடங்கை 49 நாட்கள் வரை நீட்டிப்பது சிறப்பாக இருக்கும்.இந்தியாவில் கொரோ...
01/04/2020

ஊரடங்கை நிறுத்தினால் 6000 பேர் பாதிக்கப்படலாம்... ஊரடங்கை 49 நாட்கள் வரை நீட்டிப்பது சிறப்பாக இருக்கும்.

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் கூறும் வழி என்ன?

பிரதமர் அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு, கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படுமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வு நடத்தினர்.

வயது அடிப்படையிலான மக்கள் தொகை, பொது இடங்களில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.
அதாவது, ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஊரடங்கை முடித்துக் கொண்டால், தொற்று மீண்டும் ஏற்பட்டு, மே மாத மத்தியில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாதிப்பை குறைப்பதற்காக இரண்டு முறைகளை பின்பற்றலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. முதலாவதாக தொடர்ச்சியாக 49 நாட்கள் ஊரடங்கை செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும் என்றும் 5 நாட்கள் இடைவெளிவிட்டு 21 நாட்கள், 28 நாட்கள், 18 நாட்கள் என மூன்று கட்டங்களாக அமல்படுத்துவதும் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி ஆகியவற்றுடன், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுவது அவசியம் என்றும் ஆய்வு வலியுறுத்துகிறது.

தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆய்வை மேற்கொண்ட ரோனோஜாய் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வாடகை வீட்டில் குடியிருக்கும் தொ...
31/03/2020

வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழிலாளர்கள் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பலர் வருமானம் இன்றி தவித்துவருகின்றனர். இதனால், அவர்களுக்கான பல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவருகிறது.

அந்தவகையில், தற்போது வாடகை வீட்டில் வசிப்போரிடம் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கேட்டு வீட்டில் குடியிருப்போரை காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்கவேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏழை தொழிலாளர்களின் வீட்டு வாடகையை அரசே செலுத்தும் என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Source : “வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக்கூடாது!” – தமிழக அரசு அதிரடி!...
Read on JioNews https://jionewsapi.media.jio.com/s/1/apis?d=NyZpZD05OTI3NTI=

*திருத்தணியில் செயல்பட்டுவரும் காமராஜர் மார்க்கெட் நாளை நகராட்சி பின்புறம் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள...
30/03/2020

*திருத்தணியில் செயல்பட்டுவரும் காமராஜர் மார்க்கெட் நாளை நகராட்சி பின்புறம் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் செயல்படத் தொடங்குகிறது என்று நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் காய்கறி வாங்க வரும் திருத்தணி பொதுமக்கள் கோடுகள் போடப்பட்டுள்ள கடைகளுக்கு மேற்பகுதியில் சமூக இடைவெளிவிட்டு கூட்ட நெரிசலை தவிர்த்து காய்கறி கடைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நகராட்சி ஆணையர்*

நாஸ்ட்ரோடாமஸ் கூறியது போல் 2020 நிலவரப்படி அப்படி என்னதான் நடக்கும்?யார் இந்த நாஸ்ட்ரோடாமஸ்? என்று கேட்டால் பெரும்பாலோனா...
29/03/2020

நாஸ்ட்ரோடாமஸ் கூறியது போல் 2020 நிலவரப்படி அப்படி என்னதான் நடக்கும்?

யார் இந்த நாஸ்ட்ரோடாமஸ்? என்று கேட்டால் பெரும்பாலோனார் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சுலபமாக கூறி விடுவார்கள். தீர்க்கதரிசி என்றால் புரியும்படி கூற வேண்டுமெனில் எதிர்காலத்தை குறிப்பால் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் என்று பொருள்படும். அது தன்னுடைய எதிர்காலமாக இருக்கலாம் அல்லது இந்த உலகத்தினுடைய எதிர்காலமாக இருக்கலாம். எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கும் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? நீங்கள் நம்புவீர்களா? கட்டாயம் நம்ப மாட்டோம். ‘நாளை’ இது நடக்கும் என்று கூறினாலே யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நாஸ்ட்ரோடாமஸ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னாளில் நடக்கவிருப்பதை கூட தன்னுடைய குறிப்புகளால் எழுதி வைத்து சென்றுள்ளார்.

அவர் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். தற்போதைய ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மருத்துவர். அந்த காலக்கட்டத்தில் வைத்தியமும், ஜோசியமும் மக்களுக்கு கூறி வந்தாராம். இவர் டிசம்பர் மாதம் 1503 இல் பிறந்தவர். அதே போல் ஜூலை மாதம் 1566 இல் மரணம் அடைந்தார் என்று வரலாறு கூறுகிறது. இவரின் தீர்க்கதரிசனம் தன்னுடைய மரணத்தையே கூறும் அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் எதையும் நேரடியாக கூறுவதில்லை. மாறாக குறிப்பால் உணர்த்துவார். அவரிடம் வழக்கமாக வரும் மக்களிடம் ‘நாளை நான் இருக்க மாட்டேன் வராதீர்கள்’, என்று கூறியுள்ளார். மறுநாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

நாஸ்ட்ரோடாமஸ் எழுதிய குறிப்புகளில் உள்ள பல நிகழ்வுகள் உலகத்தில் உண்மையாக நடந்தது என்பது தான் விளங்க முடியாத வியந்து பார்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. இது போன்ற எதிர்கால தகவல்களை பலர் கூறிருந்தாலும் அவைகளில் பல பலிக்காமல் இருந்ததால் பெரிதாக பார்க்கப்படவில்லை. ஆனால் நாஸ்ட்ரோடாமஸ் குறிப்புகள் அப்படி அல்ல. அவர் அப்படி என்ன தான் கூறினார் என்று இனி இப்பதிவில் காண்போம்.

முதல் மற்றும் இரண்டாம் போர் நடக்கும், இரண்டாம் உலகப்போரில் எந்த நாடு வெற்றி பெறுகிறதோ அந்த நாடு அடுத்து நூறு வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும், இன்றைய ஜெர்மனி நாட்டில் கொடூரமான ஒரு தலைவன் தோன்றுவான் அவன் மூலமாகவே அந்த நாடு தோற்கும் மேலும் நம் இந்தியா யாருடைய ஆளுகையின் கீழ் செல்லும் என்றும் பின்னர் எப்போது சுதந்திரம் அடையும் என்பதையும் கூறி இருந்தார். பின்னர் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்கள் பற்றிய குறிப்புகளும், அந்த நாட்டை ஒரு கறுப்பர் ஆள்வார் என்றும் அவரே கடைசி கறுப்பின தலைவன் என்றும் அவருக்கு பிறகு ஆட்சியில் அமர்பவருக்கு மர்ம நோய் ஒன்று தாக்கும் என்றும் குறிப்புகளில் இடம் பெற்றிருந்தது. இது மட்டுமல்ல அவர் கூறிய இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நடந்துள்ளன.

அமெரிக்காவில் உருவாக இருக்கும் ஒரு அரக்கனால் மூன்றாம் உலகப்போர் மூளும் என்றும், உலக அமைதியை நிலைநாட்ட ஒருவன் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் தோன்றுவான் என்றும் குறிப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் நம் இந்தியாவில் தோன்ற இருக்கும் அவனால் மூன்றாம் உலகப் போர் முடிவுக்கு வரும் என்றும், ரஷ்ய, இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்து உலகத்தை ஆள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2020ஐ தாண்டி நடக்கும். அப்படி பார்த்தால் இனி வரும் காலங்களில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2020ஐ கடந்து மனிதன் நிலவில் வாழ்வான், இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கும், விலங்குகளுடன் மனிதன் பேசுவான், காட்டுத்தீ மற்றும் காற்று மாசு வேகமாக பரவும் என்றும் குறிப்புகள் உள்ளது.

இது போன்ற குறிப்புகள் அனைத்தும் நாஸ்ட்ரோடாமஸ் குறியீடுகளாக உலகத்தின் நிலப்பரப்பின் அடிப்படையில் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருப்பார். அனைத்து துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே உணரும் வண்ணம் இவருடைய குறிப்புகள் இருக்கும். இதுவரை பலித்து வந்த இவருடைய தீர்க்க தரிசனம் இனியும் தொடருமா? என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. இப்பதிவில் இருப்பது கொஞ்சம் தான். அவருடைய எதிர்கால குறிப்புகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவையெல்லாம் நடக்குமா? என்று நாமும் பொறுத்திருந்து காணலாம்.

Click the link to know more about him..

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D

JOIN US ON WHATSAPP GROUP.
28/03/2020

JOIN US ON WHATSAPP GROUP.

WhatsApp Group Invite

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
28/03/2020

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Address

Cudapah Trunk Road, Near Kamala Theatre
Tiruttani
631209

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7:30pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 2pm

Telephone

09786077744

Alerts

Be the first to know and let us send you an email when Tiruttani Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiruttani Online:

Share