23/10/2023
#நிதி_சேகரிப்பு_உண்டியல்கள்_கையேற்கும்_நிகழ்வு
*********************************
சமூக சேவை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் ஏறாவூரில் இயங்கி வரும் #கிழக்கு_புற்று_நோயாளர்_பராமரிப்பு_நிலையத்தின் ) நிதி சேகரிப்பு உண்டியல்களை கையேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் 2023.10.22ம் திகதி அட்டாளைச்சேனை IPL ஒன்றியத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் இலவசமாக வழங்கி வரும் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் செலவினங்களை ஈடு செய்யும் முகமாக நன்கொடை நிதி சேகரிப்பு உண்டியல்களை நாடு பூராகவும் நிறுவி வருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாகவே அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிதி சேகரிப்பு ஒருங்கிணைப்பை IPL ஒன்றியம் பொறுப்பேற்று நடாத்தவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.
IPL ஒன்றியத்தின் பிரதம ஆலோசகரும், ஆசிரியருமான A.K.சிஹாத் (இஸ்லாஹி) அவர்களின் வழிகாட்டலில் ஒன்றியத்தின் தலைவர் S.H.சபீக் (உதவி நிதியாளர் - இலங்கை தெ. கி. பல்கலைக்கழகம்) அவர்களது தலைமையில் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஏ.றிபாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றியத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள், பிரிவுப் பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக IPL ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபரும், மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் தலைவருமான எம்.ஏ அன்சார், ஒன்றியத்தின் மற்றுமொரு சிரேஷ்ட ஆலோசகரும் அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் இ.மி.சபையின் ஓய்வு நிலை உத்தயோகத்தருமான எஸ்.எம்.எம்.நிஸாம் JP அவர்களும், அட்டாளைச்சேனை 7ம் பிரிவு கிராம உத்தியோகத்தர் கே.எம்.எம்.முபீஸ் அவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் EASSCA நிறுவனத்தின் முகாமையாளர் யூ.நூஹுலெவ்வை மற்றும், சந்தைப்படுத்தல் முகாமையாளர்.எஸ்.எம்.இர்ஷாத் (இஸ்லாஹி) ஆகியோருடன் குறித்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் வருகை தந்து உண்டியல்களை கையளித்தனர்.
பிரதம அதிதி அவர்களின் உரையில் , #தான்_கடந்த_காலத்தில்_ஏறாவூர்_பிரதேச_செயலாளராக_கடமையாற்றிய_காலத்தில்_EASCCA_நிறுவனத்தினை_பதிவு #செய்தது_தொடக்கம்_அதன்_ஆரம்பம், #வளர்ச்சி, #அதன்_இலக்கு, #அடைவுகள் மற்றும் #இதனால்_எமது_பிராந்திய_மக்கள்_அடையும்_நன்மைகள் என்பவற்றை சிலாகித்து பேசியதுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ்றியம் இந்நிதி சேகரிப்பு திட்டத்தை கையேற்றமையானது வரவேற்கத்தக்க விடயம் எனவும் எதிர்காலத்தில் இச்செயற்பாட்டிற்காக IPL அமைப்புடன் தான் இணைந்து செயற்படுவதாகவும் உறுதியளித்தார்".
விஷேட அதிதிகளில் ஒருவரான #அன்சார்_அதிபர் அவர்கள் தனதுரையில் எமது ஒன்றியத்தின் சிறந்த செயற்பாடுகளை பாராட்டி பேசியதுடன் இத்திட்டத்திற்கு தன்னாலான முழுப் பங்களிப்புகளை வழங்குவேன் எனவும் இச்செயற்பாடு ஏனையோருக்கு சிறந்த முன்மாதிரி ஆகும் எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முக்கிய விடயமான உண்டியல்களை கையளிக்கும் நிகழ்வு EASSCA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அங்கத்தவர்களால் IPL ஒன்றியத்திடம் கையளிக்கும் நிகழ்வு அதிதிகளினூடாக நடந்தேறியது. இதில் முதற்கட்டமாக #100 உண்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் ஒன்றியத்தின் கல்வி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் அர்ஷாத் புஹாரி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு ஸலவாத்துடன் இனிதே நிறைவடைந்தது.
்_பிரிவு